சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வன்
வன்     வன்னி,     வன்திறல்     வன்னி     வன்பகை     வன்றொண்ட     வன்பெருங்     வன்புலிக்     வன்தொடர்ப்பி     வன்னிலை     வன்சிறுதோல்     வன்பிணி     வன்றொண்டர்     வன்தொண்டர்     வன்னியும்     வன்மை     வன்கண்ணர்,    
1.032   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வன் புற்று இள நாகம் அசைத்து, அழகு ஆக
என்பில் பலமாலையும் பூண்டு, எருது ஏறி,
அன்பில் பிரியாதவளோடும் உடன் ஆய்
இன்பு உற்று இருந்தான் தன் இடைமருது ஈதோ.

1.050   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வன்னி, கொன்றை, மத்தம், சூடும் வலிவலம் மேயவனைப்
பொன்னி நாடன்-புகலி வேந்தன், ஞானசம்பந்தன்-சொன்ன
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே.

1.120   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வன்திறல் அவுணர்தம் வள நகர் எரி இடை
வெந்து அற எய்தவன், விளங்கிய மார்பினில்
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி, தன்
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே.

2.007   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்,
தென்ன என்று வரிவண்டு இசைசெய் திரு வாஞ்சியம்,
என்னை ஆள் உடையான், இடம் ஆக உகந்ததே.

2.082   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வன் புயத்த அத் தானவர் புரங்களை எரியத்
தன் புயத்து உறத் தடவரை வளைத்தவன் தக்க
தென்தமிழ்க் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன்; சேவடி அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.

3.032   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்,
பொன் இயல் திருவடி புதுமலர் அவைகொடு
மன்னிய மறையவர் வழிபட, அடியவர்
இன் இசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே.

3.045   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வன்னி, கொன்றை, மதியொடு, கூவிளம்,
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை,
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய்ப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை, பாவமே.

3.902   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வன்மை செய்யும் வறுமைவந் தாலுமே
தன்மை யில்லவர் சார்பிருந் தாலுமே
புன்மைக் கன்னியர் பூசலுற் றாலுமே
நன்மை யுற்ற கிளியன்ன வூரனே.

4.048   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வன்னி, வாள் அரவு, மத்தம், மதியமும், ஆறும், சூடி,
மின்னிய உரு ஆம் சோதி மெய்ப் பொருள் பயனும் ஆகி,
கன்னி ஓர் பாகம் ஆகி, கருதுவார் கருத்தும் ஆகி,
இன் இசை தொண்டர் பாட, இருந்த ஆப்பாடியாரே.

4.061   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வன்கண்ணர், வாள் அரக்கர், -வாழ்வினை ஒன்று அறி(ய்)யார்
புன் கண்ணர் ஆகி நின்று-போர்கள் செய்தாரை மாட்டி,
செங்கண் மால் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தைத்
தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம், தலைவன் பாலே.

5.020   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வன்னி, மத்தம், வளர் இளந்திங்கள், ஓர்
கன்னியாளை, கதிர் முடி வைத்தவன்;
பொன்னின் மல்கு புணர்முலையாளொடும்
மன்னினான்; கடம்பூர்க் கரக்கோயிலே.

5.076   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வன்னி, கொன்றை, எருக்கு, அணிந்தான் மலை
உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல்-
தன்னை வீழத் தனி விரல் வைத்தவன்
கன்னி மா மதில் கானூர்க் கருத்தனே.

7.051   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வன் சயம் ஆய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய
முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி தனை,
மின் செயும் வார்சடையானை, விடையானை, அடைவு இன்றி
என் செய நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

8.135   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக் கையார் கடைக் கண் அஞ்சேன்;
என்பு எலாம் உருக நோக்கி, அம்பலத்து ஆடுகின்ற
என் பொலா மணியை ஏத்தி, இனிது அருள் பருக மாட்டா
அன்பு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

10.409   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்தவை வானுற ஓங்கின
வன்னி எழுத்தவை மாபெருஞ் சக்கரம்
வன்னி எழுத்திடு மாறது சொல்லுமே.

11.038   11 st/nd Thirumurai   Song # 39   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
வன்பகை யாமக்
  குண்டரை வென்றோய்
மாமலர் வாளிப்
  பொருமத வேளைத்
தன்பகை யாகச்
  சிந்தையுள் நையும்
தையலை உய்யக்
  கொண்டருள் செய்யாய்
நின்புகழ் பாடிக்
  கண்பனி சோரா
நின்றெழில் ஞானா
  என்றகம் நெக்கிட்
டன்பக லாமெய்ச்
  சிந்தையர் இன்பா
அம்பொழில் மாடச்
  சண்பையர் கோவே. 20
  பதிக வகை: மறம்

12.000   12 st/nd Thirumurai   Song # 228   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
வன்னி கொன்றைவழை சண்பகம் ஆரம்
மலர்ப்ப லாசொடு செருந்திமந் தாரங்
கன்னி காரங்குர வங்கமழ் புன்னை
கற்பு பாடலம் கூவிள மோங்கித்
துன்னு சாதிமரு மாலதி மௌவல்
துதைந்த நந்திகர வீர மிடைந்த
பன்ம லர்ப்புனித நந்தனவ னங்கள்
பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 280   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
வன்றொண்ட ரதுகண்டுஎன்
மனங்கொண்ட மயிலியலின்
இன்றொண்டைச் செங்கனிவாய்
இளங்கொடிதான் யாரென்ன
அன்றங்கு முன்நின்றார்
அவர்நங்கை பரவையார்
சென்றும்பர் தரத்தார்க்குஞ்
சேர்வரியார் எனச்செப்ப.
12.080   12 st/nd Thirumurai   Song # 45   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வன்பெருங் களிறு பாகர்
மடியவும் உடைவா ளைத்தந்
தென்பெரும் பிழையி னாலே
யென்னையுங் கொல்லு மென்னும்
அன்பனார் தம்மைத் தீங்கு
நினைந்தன னென்று கொண்டு
முன்பென துயிர்செ குத்து
முடிப்பதே முடிவென் றெண்ணி.
12.100   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வன்புலிக் குருளை யோடும்
வயக்கரிக் கன்றி னோடும்
புன்தலைச் சிறும கார்கள்
புரிந்துடன் ஆட லன்றி
அன்புறு காதல் கூர
அணையுமான் பிணைக ளோடும்
இன்புற மருவி யாடும்
எயிற்றியர் மகளி ரெங்கும்.
12.100   12 st/nd Thirumurai   Song # 69   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வன்தொடர்ப்பி ணித்தபாசம்  
வன்கைமள்ளர் கொள்ளவே
வென்றிமங்கை வேடர்வில்லின்
மீதுமேவு பாதமுன்
சென்றுநீளு மாறுபோல்வ  
செய்யநாவின் வாயவாய்
ஒன்றொடொன்று நேர்படாமல்
ஓடுநாய்கள் மாடெலாம்.
12.100   12 st/nd Thirumurai   Song # 109   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வன்திறல் உந்தை யோடு  
மாவேட்டை யாடிப் பண்டிக்
குன்றிடை வந்தோ மாகக்  
குளிர்ந்தநீ ரிவரை யாட்டி
ஒன்றிய இலைப்பூச் சூட்டி
ஊட்டிமுன் பறைந்தோர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும்  
அவன்செய்தா னாகு மென்றான்.
12.140   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வன்னிலை மள்ளர் உகைப்ப வெழுந்த மரக்கோவைப்
பன்முறை வந்தெழும் ஓசை பயின்ற முழக்கத்தால்
அன்னம் மருங்குறை தண்டுறை வாவி யதன்பாலைக்
கன்னல் அடும்புகை யால்முகில் செய்வ கருப்பாலை.
12.180   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வன்சிறுதோல் மிசையுழத்தி
மகவுறக்கும் நிழன்மருதுந்
தன்சினைமென் பெடையொடுங்குந்
தடங்குழிசிப் புதைநீழல்
மென்சினைய வஞ்சிகளும்
விசிப்பறைதூங் கினமாவும்
புன்றலைநாய்ப் புனிற்றுமுழைப்
புடைத்தெங்கும் உடைத்தெங்கும்.
12.280   12 st/nd Thirumurai   Song # 320   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வன்பிணி நீங்கு மகளைக்கண்ட
மழவன் பெருகு மகிழ்ச்சிபொங்கத்
தன்தனிப் பாவையும் தானுங்கூடச்
சண்பையர் காவலர் தாளில்வீழ
நின்ற அருமறைப் பிள்ளையாரும்
நீரணி வேணி நிமலர்பாதம்
ஒன்றிய சிந்தை யுடன்பணிந்தார்
உம்பர்பிரான் திருத் தொண்டர்ஆர்த்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வன்றொண்டர் திருவாரூர்
மாளிகைக்கு நெல்லெடுக்க
இன்றுகுறை யாகின்ற
தென்செய்கேன் எனநினைந்து
துன்றுபெருங் கவலையினால்
துயரெய்தி உண்ணாதே
அன்றிரவு துயில்கொள்ள
12.290   12 st/nd Thirumurai   Song # 28   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வன்றொண்டர் தமக்களித்த
நெற்கண்டு மகிழ்சிறப்பார்
இன்றுங்கள் மனையெல்லைக்
குட்படுநெற் குன்றெல்லாம்
பொன்தங்கு மாளிகையிற்
புகப்பெய்து கொள்கவென
வென்றிமுர சறைவித்தார்
மிக்கபுகழ்ப் பரவையார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 160   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வன்தொண்டர் அதுகேட்டு
மறைமுனிவர் தரும்பொதிசோறு
இன்றுநமக் கெதிர்விலக்க
லாகாதென் றிசைந்தருளிப்
பொன்றயங்கு நூல்மார்பர்
தரும்பொதிசோ றதுவாங்கிச்
சென்றுதிருத் தொண்டருடன்
திருவமுது செய்தருளி.
12.290   12 st/nd Thirumurai   Song # 176   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வன்தொண்டர் பசிதீர்க்க
மலையின்மேல் மருந்தானார்
மின்தங்கு வெண்டலையோ
டொழிந்தொருவெற் றோடேந்தி
அன்றங்கு வாழ்வாரோர்
அந்தணராய்ப் புறப்பட்டுச்
சென்றன்பர் முகநோக்கி
அருள்கூரச் செப்புவார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 245   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வன்தொண்டர் மனங்களித்து
வணங்கிஅடி யேன்செய்ய
நின்றகுறை யாதென்ன
நீயவளை மணம்புணர்தற்
கொன்றியுட னேநிகழ
ஒருசபத மவள்முன்பு
சென்றுகிடைத் திவ்விரவே
செய்கவென வருள்செய்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 394   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வன்தொண்டர் தம்பால் சென்று
வள்ளலா ரருளிச் செய்வார்
இன்றுநம் ஏவ லாலே
ஏயர்கோ னுற்ற சூலை
சென்றுநீ தீர்ப்பா யாகென்
றருள்செயச் சிந்தை யோடு
நன்றுமெய்ம் மகிழ்ந்து போற்றி
வணங்கினார் நாவ லூரர்.
12.290   12 st/nd Thirumurai   Song # 403   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வன்தொண்டர் பின்னுங் கூற
மற்றவர் தம்மைக் காட்டத்
துன்றிய குருதி சோரத்
தொடர்குடர் சொரிந்துள் ளாவி
பொன்றியே கிடந்தார் தம்மைக்
கண்டபின் புகுந்த வாறு
நன்றென மொழிந்து நானும்
நண்ணுவேன் இவர்முன் பென்பார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 158   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
வன்றொண்டர் முன்எய்தி
மனமழிந்த வுணர்வினராய்
இன்றுமது பிரிவாற்றேன்
என்செய்கேன் யான்என்ன
ஒன்றும்நீர் வருந்தாதே
யுமதுபதி யின்கணிருந்
தன்றினார் முனைமுருக்கி
அரசாளும் எனமொழிந்தார்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list