சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வம்பு
வம்பு     வம்புலா     வம்புநீ    
1.099   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வம்பு ஆர் குன்றம், நீடு உயர் சாரல், வளர் வேங்கைக்
கொம்பு ஆர் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம்
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான், அலர்கொன்றை
நம்பான், மேய நன்நகர்போலும்; நமரங்காள்!

2.003   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வம்பு அடுத்த மலர்ப்பொழில் சூழ, மதி தவழ்
செம்பு அடுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியீர்!
கொம்பு அடுத்தது ஒர் கோல விடைமிசை, கூர்மையோ
அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே?

2.064   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வம்பு ஆர் கொன்றை, வன்னி, மத்தமலர், தூவி,
நம்பா! என்ன, நல்கும் பெருமான் உறை கோயில்
கொம்பு ஆர் குரவு, கொகுடி, முல்லை, குவிந்து எங்கும்
மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.

2.119   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வம்பு நாறும் மலரும் மலைப் பண்டமும் கொண்டு, நீர்
பைம் பொன் வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச் சென்று, உடன் ஆவதும்
உண்மையே.

3.012   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வம்பு அலரும் மலர்க்கோதை பாகம் மகிழ் மைந்தனும்,
செம்பவளத்திருமேனி வெண்நீறு அணி செல்வனும்
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திருக்கோட்டாற்றுள்
நம்பன் எனப் பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே.

3.031   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்,
நம் பரம் இது என, நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள, உயர் பதி அணைவரே.

5.052   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வம்பு பூங் குழல் மாது மறுக ஓர்
கம்ப யானை உரித்த கரத்தினர்;
செம்பொன் ஆர் இதழி(ம்) மலர்ச் செஞ்சடை
நம்பர்போல்-திரு நாகேச்சுரவரே.

6.032   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வம்பு உலவு கொன்றைச் சடையாய், போற்றி!
வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய், போற்றி!
கொம்பு அனைய நுண் இடையாள் கூறா, போற்றி!
குரை கழலால் கூற்று உதைத்த கோவே, போற்றி!
நம்புமவர்க்கு அரும்பொருளே, போற்றி போற்றி!
நால்வேதம் ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
செம்பொனே, மரகதமே, மணியே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி!.

7.039   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும்
மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா
எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்;
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும்  அடியேன்;
நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்;
நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும்,  அடியேன்;
அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .

10.838   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தன்பாற் பறவை புகந்துணத் தான்ஒட்டா(து)
அம்புகொண்(டு) எய்திட்(டு) அகலத் துரந்திடில்
செம்பொற் சிவகதி சென்றெய்த லாகுமே

12.000   12 st/nd Thirumurai   Song # 48   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
எம்பி ரானை இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி
உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால்.
12.000   12 st/nd Thirumurai   Song # 249   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
வம்புலா மலரலைய 
மணிகொழித்து வந்திழியும்
பைம்பொன்வார் கரைப்பொன்னிப் 
பயில்தீர்த்தம் படிந்தாடித்
தம்பிரான் மயிலாடு
துறைவணங்கித் தாவில்சீர்
அம்பர்மா காளத்தின்
அமர்ந்தபிரான் அடிபணிந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 372   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வம்பு லாமலர் வாவியின்
கரையில்வந் தேறி
உம்பர் நாயகர் திருவருட்
பெருமையை உணர்வார்
எம்பி ரான்தருங் கருணைகொல்
இதுஎன இருகண்
பம்பு தாரைநீர் வாவியிற்
படிந்தெழும் படியார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 100   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வம்புநீ டலங்கல் மார்பின்
வன்றொண்டர் வன்னி கொன்றை
தும்பைவெள் ளடம்பு திங்க
டூயநீ ரணிந்த சென்னித்
தம்பிரா னமர்ந்த தானம்
பலபல சார்ந்து தாழ்ந்து
கொம்பனா ராடல் நீடு
கூடலை யாற்றூர் சார.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list