சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வரு
வரு
வருமாதி
வருந்தித்
வருத்தம்
வரும்வழி
வருக்கம்
வருகின்ற
வருகோள்
வருந்தேன்
வருத்தந்
வருவா
வருக்க
வருவார்
வருந்துங்
வருகின்
வருமணக்
வருமுறை
வருமுறைப்
வருங்கறைப்
வரும்பு
வருமிவள்
வருமுறைமைப்
வருமிடத்தில்
வருநாளென்
வரும்பான்
வருந்திய
வருந்தி
வரும்
வருத்தனை,
வரும்,
வருந்த
வருந்துவன்,
வருங்குன்ற
வருட்டின்
வருவன
1.080
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம்
திரு மாந் தில்லையுள், சிற்றம்பலம் மேய
கருமான் உரி-ஆடைக் கறை சேர் கண்டத்து எம்
பெருமான் கழல் அல்லால் பேணாது, உள்ளமே.
1.121
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரு நல மயில் அன மடநடை மலைமகள்
பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான்,
செரு நல மதில் எய்த சிவன், உறை செழு நகர்
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே.
2.001
2 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வருக்கம் ஆர்தரு வான் கடுவனொடு மந்திகள்
தருக் கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய்,
துரக்கும் மால்விடைமேல் வருவீர்! அடிகேள்! சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே?
2.056
2 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வருந்திய மா தவத்தோர், வானோர், ஏனோர், வந்து ஈண்டி
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த,
திருந்திய நால்மறையோர் இனிதா ஏத்த, இடைமருதில்,
பொருந்திய கோயிலே கோயில் ஆகப் புக்கீரே.
2.080
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வரு மா கரியின் உரியார், வளர்புன் சடையார், விடையார்,
கருமான் உரி தோல் உடையார் கடவூர் மயானம்
அமர்ந்தார்;
திருமாலொடு நான் முகனும் தேர்ந்தும் காண முன்
ஒண்ணாப்
பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான்
அடிகளே
3.035
3 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வருந்தி வானோர்கள் வந்து அடைய, மா நஞ்சு தான்
அருந்தி, ஆர் அமுது அவர்க்கு அருள் செய்தான் அமரும் ஊர்
செருந்தி, பூமாதவிப் பந்தர், வண் செண்பகம்,
திருந்து நீள் வளர் பொழில்-தென்குடித்திட்டையே.
4.064
4 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
வரும் தினம், நெருநல், இன்று ஆய், வழங்கின நாளர்; ஆல்கீழ்
இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர்; இருவரோடும்
பொருந்தினர்; பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும்
விருந்தினர்-திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே.
4.090
4 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
வருத்தனை, வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த
பொருத்தனை, பொய்யா அருளனை, பூதப்படை உடைய
திருத்தனை, தேவர் பிரான் திரு வேதி குடி உடைய
அருத்தனை, ஆரா அமுதினை,-நாம் அடைந்து ஆடுதுமே.
6.001
6 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
வரும் பயனை, எழு நரம்பின் ஓசையானை, வரை
சிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும் பயம் செய் அவுணர் புரம் எரியக் கோத்த
அம்மானை, அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னை,
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில்
-துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்
பெரும்பயனை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.
6.064
6 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
வரும் தவன் காண்; மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண்; அஞ்சு எழுத்தும் நினைவார்க்கு என்றும்
மருந்து அவன் காண்; வான் பிணிகள் தீரும் வண்ணம்; வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகிப்
பரந்தவன் காண்; படர் சடை எட்டு உடையான் தான் காண்; பங்கயத்தோன் தன் சிரத்தை ஏந்தி, ஊர் ஊர்
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
6.088
6 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
வரும் மிக்க மதயானை உரித்தான் தன்னை; வானவர் கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை;
தரு மிக்க குழல் உமையாள் பாகன் தன்னை; சங்கரன் எம்பெருமானை; தரணி தன்மேல்
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி, உத்தமர் வாழ்தரும், ஓமாம்புலியூர் மன்னும்
திரு மிக்க வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.
7.027
7 st/nd Thirumurai
Song # 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வரும் காலன்(ன்) உயிரை மடியத் திரு மெல்விரலால்
பெரும் பாலன் தனக்கு ஆய்ப் பிரிவித்த பெருந்தகையே!
கரும்பு ஆரும் வயல் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
விரும்பா! எம்பெருமான்! அடியேனையும் வேண்டுதியே! .
7.029
7 st/nd Thirumurai
Song # 5
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வரும் பழி வாராமே தவிர்த்து, எனை ஆட்கொண்டாய்;
சுரும்பு உடை மலர்க் கொன்றைச் சுண்ண வெண் நீற்றானே!
அரும்பு உடை மலர்ப் பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
7.058
7 st/nd Thirumurai
Song # 6
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வரும், பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி, வருந்தல் உற்றேன்; மறவா மனம் பெற்றேன்;
விரும்பி, என் மனத்து இடை மெய் குளிர்ப்பு எய்தி, வேண்டி நின்றே தொழுதேன், விதியாலே;
அரும்பினை, அலரினை, அமுதினை, தேனை, ஐயனை, அறவன், என் பிறவி வேர் அறுக்கும்
கரும்பினை, பெருஞ் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .
7.063
7 st/nd Thirumurai
Song # 3
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வருந்த அன்று மதயானை உரித்த வழக்கு நம்பி, முழக்கும் கடல் நஞ்சம்
அருந்தும் நம்பி, அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி, பொருளால் வரு நட்டம்
புரிந்த நம்பி, புரிநூல் உடை நம்பி, பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி
இருந்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.
7.072
7 st/nd Thirumurai
Song # 11
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வரும் கலமும் பல பேணுதல், கருங்கடல்,
இருங் குலப் பிறப்பர் தம் இடம் வலம்புரத்தினை,
அருங் குலத்து அருந்தமிழ் ஊரன்-வன்தொண்டன்-சொல்
பெருங் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே.
8.105.02
8 st/nd Thirumurai
Song # 13
மாணிக்க வாசகர்
திருவாசகம்
வருந்துவன், நின் மலர்ப் பாதம் அவை காண்பான்; நாய் அடியேன்
இருந்து நல மலர் புனையேன்; ஏத்தேன் நாத் தழும்பு ஏற;
பொருந்திய பொன் சிலை குனித்தாய்! அருள் அமுதம் புரியாயேல்,
வருந்துவன் அத் தமியேன்; மற்று என்னே நான் ஆம் ஆறே?
8.201
8 st/nd Thirumurai
Song # 15
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை
யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி
யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள
பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக
மேய்க்குங் கனங்குழையே.
8.218
8 st/nd Thirumurai
Song # 5
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
வருட்டின் திகைக்கும் வசிக்கின்
துளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும்
வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
னேசொல்லி யேகுவனே.
8.218
8 st/nd Thirumurai
Song # 16
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
வருவன செல்வன தூதுகள்
ஏதில வான்புலியூர்
ஒருவன தன்பரின் இன்பக்
கலவிகள் உள்ளுருகத்
தருவன செய்தென தாவிகொண்
டேகியென் நெஞ்சிற்றம்மை
இருவின காதல ரேதுசெய்
வானின் றிருக்கின்றதே.
10.308
10 st/nd Thirumurai
Song # 1
திருமூலர்
திருமந்திரம்
வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியானம் உன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.
10.310
10 st/nd Thirumurai
Song # 3
திருமூலர்
திருமந்திரம்
வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.
10.406
10 st/nd Thirumurai
Song # 20
திருமூலர்
திருமந்திரம்
வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் சுட்டிற் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண் டுள்புக்குப் பேசே.
10.735
10 st/nd Thirumurai
Song # 8
திருமூலர்
திருமந்திரம்
வரும்வழி போம்வழி மாயா வழியே
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெருவழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழி யேசென்று கூடலும் ஆமே.
10.903
10 st/nd Thirumurai
Song # 4
திருமூலர்
திருமந்திரம்
வருக்கம் சுகமாம் பிரமமு மாகும்
அருக்கச் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதார மெல்லாந்தன் மேனி
சுருக்கமில் ஞானம் தொகுத்துணர்ந் தோர்க்கே.
11.006
11 st/nd Thirumurai
Song # 21
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
வருகின்ற மூப்பொடு தீப்பிணிக்
கூற்றம்வை கற்குவைகல்
பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில்
லேன்பொடி பூசிவந்துன்
அருகொன்றி நிற்க அருளுகண்
டாய்அழல் வாய்அரவம்
வெருகொன்ற வெண்மதி செஞ்சடை
மேல்வைத்த வேதியனே.
11.020
11 st/nd Thirumurai
Song # 18
கபிலதேவ நாயனார்
மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை
வருகோள் தருபெருந் தீமையும் காலன் தமரவர்கள்
அரு கோட் டருமவ ராண்மையும் காய்பவன் கூர்ந்தன்பு
தருகோள் தருமர பிற்பத்தர் சித்தத் தறியணையும்
ஒருகோட் டிருசெவி முக்கண்செம் மேனிய ஒண்களிறே.
11.028
11 st/nd Thirumurai
Song # 3
பட்டினத்துப் பிள்ளையார்
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
வருந்தேன் இறந்தும் பிறந்தும்
மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன் நரகிற் புகுகின்றி
லேன்புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு
பிறிதொன்றில் ஆசையின்றி
இருந்தேன் இனிச்சென் றிரவேன்
ஒருவரை யாதொன்றுமே.
11.029
11 st/nd Thirumurai
Song # 13
பட்டினத்துப் பிள்ளையார்
திருஏகம்பமுடையார் திருவந்தாதி
வருத்தந் தரும்மெய்யுங் கையில்
தழையும்வன் மாவினவும்
கருத்தந் தரிக்கும் நடக்கவின்
றைய கழல்நினையத்
திருத்தந் தருளும் திகழ்கச்சி
ஏகம்பர் சீர்க்கயிலைத்
துருத்தந் திருப்பதன் றிப்புனம்
காக்கும் தொழிலெமக்கே.
11.032
11 st/nd Thirumurai
Song # 58
நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
வருவா சகத்தினில் முற்றுணர்ந்
தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன்
செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்
டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி
பாடிச் சிரிப்பிப்பரே.
11.033
11 st/nd Thirumurai
Song # 77
நம்பியாண்டார் நம்பி
திருத்தொண்டர் திருவந்தாதி
வருக்க மடைத்துநன் னாவலூர்
மன்னவன் வண்டமிழால்
பெருக்கு மதுரத் தொகையிற்
பிறைசூடி பெய்கழற்கே
ஒருக்கு மனத்தொடப் பாலடிச்
சார்ந்தவ ரென்றுலகில்
தெரிக்கு மவர்சிவன் பல்கணத்
தோர்நஞ் செழுந்தவரே.
11.034
11 st/nd Thirumurai
Song # 75
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
வருவார் உருவின் வழிவழி
வைத்த வனமருந்தும்
திருவார் இருந்த செழுநகரச்
செவ்வித் திருவடிக்காள்
தருவான் தமிழா கரகரம்
போற்சலம் வீசக்கண்டு
வெருவா வணங்கொண்டல்
கள்மிண்டி வானத்து மின்னியவே.
11.034
11 st/nd Thirumurai
Song # 83
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
வருந்துங் கொலாங்கழல், மண்மிசை
யேகிடில் என்றுமென்றார்த்
திருந்தும் புகழ்ச்சண்பை ஞானசம்
பந்தற்குச் சீர்மணிகள்
பொருந்துஞ் சிவிகை கொடுத்தனன்
காண்;புண ரித்திகழ்நஞ்(சு)
அருந்தும் பிரான்நம் மரத்துறை
மேய வரும்பொருளே.
11.038
11 st/nd Thirumurai
Song # 52
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
வருகின் றனன்என்
றனதுள் ளமும்நின்
வசமே நிறுவிக்
குறைகொண் டுதணித்
தருகும் புனல்வெஞ்
சுரம்யான் அமரும்
மதுநீ இறையுன்
னினையா தெனின்முன்
கருகும் புயல்சேர்
மதில்வண் புகலிக்
கவிஞன் பயில்செந்
தமிழா கரன்மெய்ப்
பெருகுந் திருவார்
அருள்பே ணலர்போற்
பிழைசெய் தனைவந்
ததர்பெண் கொடியே. 33
12.000
12 st/nd Thirumurai
Song # 162
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
வருமணக் கோலத் தெங்கள்
வள்ளலார் தெள்ளும் வாசத்
திருமணப் பந்தர் முன்பு
சென்றுவெண் சங்க மெங்கும்
பெருமழைக் குலத்தி னார்ப்பப்
பரிமிசை இழிந்து பேணும்
ஒருமணத் திறத்தி னங்கு
நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்.
12.010
12 st/nd Thirumurai
Song # 5
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
வருமுறை எரிமூன் றோம்பி
மன்னுயி ரருளான் மல்கத்
தருமமே பொருளாக் கொண்டு
தத்துவ நெறியிற் செல்லும்
அருமறை நான்கி னோடுஆ
றங்கமும் பயின்று வல்லார்
திருநடம் புரிவார்க் காளாந்
திருவினாற் சிறந்த சீரார்.
12.100
12 st/nd Thirumurai
Song # 19
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
வருமுறைப் பருவந் தோறும்
வளமிகு சிறப்பில் தெய்வப்
பெருமடை கொடுத்துத் தொக்க
பெருவிறல் வேடர்க் கெல்லாம்
திருமலி துழனி பொங்கச்
செழுங்களி மகிழ்ச்சி செய்தே
அருமையிற் புதல்வர்ப் பெற்ற
ஆர்வமுந் தோன்ற உய்த்தார்.
12.100
12 st/nd Thirumurai
Song # 132
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
வருங்கறைப் பொழுது நீங்கி
மல்கிய யாமம் சென்று
சுருங்கிட அறிந்த புள்ளின்
சூழ்சிலம் போசை கேட்டுக்
கருங்கட லென்ன நின்ற
கண்துயி லாத வீரர்
அரும்பெறல் தம்பி ரானார்க்
கமுதுகொண் டணைய வேண்டி.
12.130
12 st/nd Thirumurai
Song # 1
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
வரும்பு னற்பொன்னி நாட்டொரு வாழ்பதி
சுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
விரும்பு மென்க ணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன்சொரி யுங்கண மங்கலம்.
12.190
12 st/nd Thirumurai
Song # 25
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
வரும்பு னற்பெருங் கால்களை மறித்திட வாளை
பெருங்கு லைப்பட விலங்குவ பிறங்குநீர்ப் பழனம்
நெருங்கு சேற்குல முயர்த்துவ நீள்கரைப் படுத்துச்
சுருங்கை நீர்வழக் கறுப்பன பருவரால் தொகுதி.
12.240
12 st/nd Thirumurai
Song # 58
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
வருமிவள் நம்மைப் பேணும்
அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப்
பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி
அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம்
உய்யவே அருளிச் செய்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 45
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
வருமுறைமைப் பருவத்தின்
வளர்புகலிப் பிள்ளையார்
அருமறைகள் தலையெடுப்ப
ஆண்டதிரு முடியெடுத்துப்
பெருமழுவர் தொண்டல்லால்
பிறிதிசையோம் என்பார்போல்
திருமுகமண் டலமசையச்
செங்கீரை யாடினார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 908
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
வருமிடத்தில் அழகிதாம் நமக்கு வாதில்
மற்றிவர்தம் பொருள்நிலைமை மறாத வண்ணம்
பொருமிடத்தில் அறிகின்றோம் புத்த நந்தி
பொய்ம்மேற்கோள் எனப்புகலி வேந்தர் கூற
அருமுறைசொல் திருப்பதிகம் எழுது மன்பர்
ஆளுடைய பிள்ளையார் திருவாக் காலே
உருமிடித்து விழப்புத்தன் உத்த மாங்கம்
உருண்டுவீழ் கெனப்பொறா உரைமுன் விட்டார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1248
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
வருமுறைப் பிறவி வெள்ளம்
வரம்புகா ணாத ழுந்தி
உருவெனுந் துயரக் கூட்டில்
உணர்வின்றி மயங்கு வார்கள்
திருமணத் துடன்சே வித்து
முன்செலுஞ் சிறப்பி னாலே
மருவிய பிறவி நீங்க
மன்னுசோ தியினுள் புக்கார்.
12.660
12 st/nd Thirumurai
Song # 3
சேக்கிழார்
மன்னிய சீர்ச் சருக்கம்
வருநாளென் றும்பிழையாத் தெய்வப் பொன்னி
வளம்பெருக்க வளவர்குலம் பெருக்கும் தங்கள்
திருநாடு போற்செழியர் தென்னாடு விளக்கும்
சீர்விளக்கின் செய்யசீ றடிகள் போற்றி
ஒருநாளுந் தன்செயலில் வழுவாது அன்பர்க்கு
உடைகீளுங்கோவணமும் நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர்தங் குலத்தில் வந்த
பெருந்தகையார் நேசர்திறம் பேச லுற்றாம்.
12.690
12 st/nd Thirumurai
Song # 12
சேக்கிழார்
மன்னிய சீர்ச் சருக்கம்
வரும்பான் மையினில் பெரும்பாணர்
மலர்த்தாள் வணங்கி வயற்சாலிக்
கரும்பார் கழனித் திருநாவ
லூரில் சைவக் கலைமறையோர்
அரும்பா நின்ற வணிநிலவும்
பணியும் அணிந்தா ரருள்பெற்ற
சுரும்பார் தொங்கல் சடையனார்
பெருமை சொல்ல லுறுகின்றாம்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list