சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் விடு
விடுங்காண்     விடுகின்ற     விடுவதே     விடுசுடர்நீள்     விடு     விடுத்த     விடுமின்    
4.111   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விடு பட்டி ஏறு உகந்து ஏறீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
கொடு கொட்டி, கொக்கரை, தக்கை, குழல், தாளம், வீணை, மொந்தை,
வடு விட்ட கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும்,
தடுகுட்டம் ஆடும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!

5.037   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விடுத்த மால்வரை விண் உற ஆனையார்;
தொடுத்த மால்வரை தூயது ஓர் ஆனையார்;
கடுத்த காலனைக் காய்ந்தது ஓர் ஆனையார்;
கடுத்த ஆனைகண்டீர்-கடவூரரே.

5.086   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்தபோது பயன் இலை-பாவிகாள்!
அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை
எடுத்தும், ஏத்தியும், இன்புறுமின்களே!

8.145   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
விடுமின் வெகுளி, வேட்கை நோய்; மிகவே, காலம் இனி இல்லை;
உடையான் அடிக்கீழ், பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின்;
அடைவோம், நாம் போய்ச் சிவபுரத்துள், அணி ஆர் கதவு அது அடையாமே;
புடைபட்டு உருகிப் போற்றுவோம், புயங்கன் ஆள்வான் புகழ்களையே.

10.721   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
விடுங்காண் முனைந்திந் திரியங்களைப் போல்
நடுங்கா திருப்பானும் ஐயைந்தும் நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்கால் கரணம் கருத்துறக் கொண்டே.

10.738   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
விடுகின்ற சிவனார் மேலெழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்றன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் நும்மை இமையவ ரோடே.

12.240   12 st/nd Thirumurai   Song # 32   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
விடுவதே எண்ண மாக மேவிய
முயற்சி செய்வான்
படுதிரைப் பரவை மீது படர்கலங்
கொண்டு போகி
நெடுநிதி கொணர்வேன் என்ன
நிரந்தபல் கிளைஞ ராகும்
வடுவில்சீர் வணிக மாக்கள்
மரக்கலஞ் சமைப்பித் தார்கள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
விடுசுடர்நீள் மணிமறுகின்
வெண்சுதைமா ளிகைமேகம்
தொடுகுடுமி நாசிதொறும்
தொடுத்தகொடி சூழ்கங்குல்
உடுஎனும்நாண் மலர்அலர
உறுபகலிற் பலநிறத்தால்
நெடுவிசும்பு தளிர்ப்பதென
நெருங்கியுள மருங்கெல்லாம்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list