சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் விட்ட
விட்டுப்     விட்டபின்     விட்ட     விட்டாவி     விட்டிலங்கத்     விட்டங்     விட்டு     விட்டார்     விட்டிட்டானை,     விட்டது    
3.098   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர், கையில்
இட்டு எழில் பெறுகிறது எரியே;
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர்! புரம்
அட்டது வரை சிலையாலே.

4.096   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால்
சுட்டாய்; என் பாசத்தொடர்பு அறுத்து ஆண்டுகொள்!-தும்பி பம்பும்
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும்
சிட்டா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

5.075   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி
இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட,
கொட்ட மா முழவு, ஓங்கு குரக்குக்கா
இட்டம் ஆய் இருப்பார்க்கு இடர் இல்லையே.

5.094   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விட்டிட்டானை, மெய்ஞ்ஞானத்து; மெய்ப்பொருள்
கட்டிட்டானை; கனங்குழைபால் அன்பு-
பட்டிட்டானை; பகைத்தவர் முப்புரம்
சுட்டிட்டானை-கண்டீர்-தொழல்பாலதே.

6.015   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம்;
விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம்;
பட்டு, உருவ மால்யானைத் தோல் கீண்டான் ஆம்; பல பலவும் பாணி பயின்றான் தான் ஆம்;
எட்டு உருவ-மூர்த்தி ஆம், எண்தோளான் ஆம்;
என் உச்சி மேலான் ஆம்; எம்பிரான் ஆம்;
கட்டு உருவம் கடியானைக் காய்ந்தான் ஆகும்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.

6.017   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விட்டு இலங்கு மா மழுவர்; வேலை நஞ்சர்; 
விடங்கர்; விரிபுனல் சூழ் வெண்காட்டு உள்ளார்;
மட்டு இலங்கு தார்-மாலை மார்பில் நீற்றர்;  மழபாடியுள் உறைவர்; மாகாளத்தர்;
சிட்டு இலங்கு வல் அரக்கர் கோனை அன்று 
செழு முடியும் தோள் ஐந்நான்கு அடரக் காலால்
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார், 
வென்றி;- இடைமருது மேவி இடம் கொண்டாரே.

7.046   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விட்டது ஓர் சடை தாழ, வீணை விடங்கு ஆக,| வீதி விடை ஏறுவீர்; வீண் அடிமை   உகந்தீர்;
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடிச்| சுந்தரராய்த் தூ மதியம் சூடுவது சுவண்டே?
வட்டவார் குழல் மடவார் தம்மை மயல் செய்தல் | மா தவமோ? மாதிமையோ? வாட்டம்    எலாம் தீரக்
கட்டி எமக்கு ஈவது தான் எப்போது? சொல்லீர்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

7.049   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விட்டு இசைப்பன, கொக்கரை, கொடுகொட்டி, தத்தளகம்,
கொட்டிப் பாடும் துந்துமியொடு, குடமுழா, நீர் மகிழ்வீர்;
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய்,
இட்ட பிச்சை கொண்டு உண்பது ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!

7.056   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை, வீடு இலாத வியன் புகழானை,
கட்டு வாங்கம் தரித்த பிரானை, காதில் ஆர் கனகக்குழையானை,
விட்டு இலங்கு புரிநூல் உடையானை, வீந்தவர் தலை ஓடு கையானை,
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர்க் கண்டு நாம் பணியா விடல் ஆமே?

10.122   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே. 23,

10.721   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
விட்டபின் கற்பவுற் பத்தி விதியிலே
தொட்டுறுங் கால்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ்நாள்சா நாள்குணம் கீழ்மைசீர்ப்
பட்ட நெறியிதென்றெண்ணுயும் பார்க்கவே.

10.816   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டான் மேவுன்றான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்தில் தோயுமே.

10.835   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
விட்ட இலக்கணை தான்போம் வியோமத்து
தொட்டு விடாத(து) உபசாந்தத் தேதொகும்
விட்டும் விடாதது மேவும்சத் தாதியில்
சுட்டும் இலக்கணா தீதம் சொரூபமே.

11.009   11 st/nd Thirumurai   Song # 92   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
விட்டாவி போக உடல்கிடந்து வெந்தீயிற்
பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாவாம்
கள்அலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற
வள்ளலைச்சென் றேத்த மனம்.

11.016   11 st/nd Thirumurai   Song # 39   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம்
எட்டிலங்க வைத்த இறைபோற்றி ஒட்டி

11.032   11 st/nd Thirumurai   Song # 61   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
விட்டங் கொளிமணிப் பூண்திகழ்
வன்மதன் மெய்யுரைக்கில்
இட்டங் கரியன்நல் லானல்லன்
அம்பலத் தெம்பரன்மேல்
கட்டங் கியகணை யெய்தலுந்
தன்னைப்பொன் னார்முடிமேல்
புட்டங்கி னான்மக னாமென்று
பார்க்கப் பொடிந்தனனே.

12.720   12 st/nd Thirumurai   Song # 36   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
விட்ட வெம்பரிச் செவியினில்
புவிமுதல் வேந்தர்தாம் விதியாலே
இட்ட மாஞ்சிவ மந்திரம் ஓதலின்
இருவிசும் பெழப் பாய்ந்து
மட்ட லர்ந்தபைந் தெரியல்வன்
தொண்டர்மேல் கொண்டமா தங்கத்தை
முட்ட எய்திமுன் வலங்கொண்டு
சென்றது மற்றதன் முன்னாக.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list