சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வினை
வினை     வினைகடிந்     வினையால்     வினையிலே     வினைப்     வினைக்கேடரும்    
1.019   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வினை கெட மன நினைவு அது முடிக எனின், நனி தொழுது எழு குலமதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன்,
மனை குடவயிறு உடையனசில வரு குறள் படை உடையவன், மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன், அதிர் கழல்களே!

1.070   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன், விரிகொன்றை
நனை ஆர் முடிமேல் மதியம் சூடும் நம்பான், நலம் மல்கு
தனை ஆர் கமலமலர் மேல் உறைவான் தலையோடு அனல் ஏந்தும்
எனை ஆள் உடையான்-உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

8.105.03   8 st/nd Thirumurai   Song # 22   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வினையிலே கிடந்தேனை, புகுந்து நின்று, போது, நான்
வினைக்கேடன்' என்பாய் போல,
இனையன் நான்' என்று உன்னை அறிவித்து, என்னை
ஆட்கொண்டு, எம்பிரான் ஆனாய்க்கு,இரும்பின் பாவை
அனைய நான், பாடேன்; நின்று ஆடேன்; அந்தோ!
அலறிடேன்; உலறிடேன்; ஆவி சோரேன்;
முனைவனே! முறையோ, நான் ஆன ஆறு?
முடிவு அறியேன்; முதல், அந்தம், ஆயினானே!

8.105.04   8 st/nd Thirumurai   Song # 37   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வினை என்போல் உடையார் பிறர் ஆர்? உடையான், அடி நாயேனைத்
தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று; மற்று அதனாலே,
முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும், நான் முட்டிலேன், தலை கீறேன்;
இனையன் பாவனை, இரும்பு; கல், மனம்; செவி, இன்னது என்று அறியேனே.

8.131   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வினைப் பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு,
தனைச் சிறிதும் நினையாதே, தளர்வு எய்திக் கிடப்பேனை,
எனைப் பெரிதும் ஆட்கொண்டு, என் பிறப்பு அறுத்த இணை இலியை
அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே!

8.134   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வினைக்கேடரும் உளரோ பிறர், சொல்லீர்? வியன் உலகில்
எனை, தான் புகுந்து, ஆண்டான்; எனது என்பின் புரை உருக்கி,
பினை, தான் புகுந்து, எல்லே! பெருந்துறையில் உறை பெம்மான்,
மனத்தான்; கண்ணின் அகத்தான்; மறு மாற்றத்திடையானே!

10.406   10 st/nd Thirumurai   Song # 49   திருமூலர்   திருமந்திரம்  
வினைகடிந் தார்உள்ளத் துள்ளொளி மேவித்
தனையடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனையடி மைக்கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியு மாமே.

10.833   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
வினையால் அசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னிலே விடாதுந் தேரார்
வினைவீட வீடென்னும் பேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவறி யாரே.34,


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list