சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் விரித்த
விரித்தபின்     விரித்தனை,     விரித்தவன்,     விரித்தார்,     விரித்தானை,     விரித்த    
2.030   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விரித்தனை, திருச்சடை; அரிஉத்து ஒழுகு வெள்ளம்
தரித்தனை; அது அன்றியும், மிகப் பெரிய காலன்
எருத்து இற உதைத்தனை; இலங்கிழை ஒர்பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்!

3.023   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விரித்தவன், அருமறை; விரிசடை வெள்ளம்
தரித்தவன்; தரியலர் புரங்கள் ஆசு அற
எரித்தவன்; இலங்கையர் கோன் இடர் படச்
சிரித்தவன்; உறைவு இடம் திரு விற்கோலமே.

3.062   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விரித்தவன், நால்மறையை; மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச
எரித்தவன், முப்புரங்கள்(ள்); இயல் ஏழ் உலகில் உயிரும்
பிரித்தவன்; செஞ்சடைமேல் நிறை பேர் ஒலி வெள்ளம்
தன்னைத்
தரித்தவன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.

3.064   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
விரித்தார், நால்மறைப் பொருளை; உமை அஞ்ச, விறல் வேழம்
உரித்தார், ஆம் உரி போர்த்து; மதில் மூன்றும் ஒரு
கணையால்
எரித்தார் ஆம், இமைப்பு அளவில்; இமையோர்கள் தொழுது இறைஞ்சப்
பெருத்தார்; எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

4.007   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரித்தானை, நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானை, பதம் சந்தி; பொருள் உரு ஆம் புண்ணியனை;
தரித்தானை, கங்கை நீர், தாழ் சடை மேல்; மதில் மூன்றும்
எரித்தானை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!

4.073   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரித்த பல்கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம், கை
தரித்தது ஓர் கோல கால பயிரவன் ஆகி, வேழம்
உரித்து, உமை அஞ்சக் கண்டு, ஒண் திரு மணிவாய் விள்ளச்
சிரித்து, அருள் செய்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

4.089   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரித்த சடையினன்; விண்ணவர் கோன்; விடம் உண்ட கண்டன்;
உரித்த கரிஉரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே-
எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டு கொண்ட,
தரித்த உமையவளோடு, நெய்த்தானத்து இருந்தவனே.

6.080   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
விரித்தானை, நால் மறையோடு அங்கம் ஆறும்; வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி
நெரித்தானை; நின்மலனை; அம்மான் தன்னை; நிலா நிலவு செஞ்சடைமேல் நிறை நீர்க்கங்கை
தரித்தானை; சங்கரனை; சம்புதன்னை; தரியலர்கள் புரம்மூன்றும் தழல்வாய் வேவச்
சிரித்தானை; திகழ் ஒளியை; திரு மாற்பேற்று எம் செம்பவளக்குன்றினை; சென்று அடைந்தேன், நானே.

7.006   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய
விருத்தன் ஆய வேதன் தன்னை, விரி பொழில் சூழ் நாவலூரன்-
அருத்தியால் ஆரூரன் தொண்டன், அடியன்-கேட்ட மாலை பத்தும்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர், வான் உளாரே .

10.719   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list