சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வில்
வில்
வில்லின்
வில்லொடு
வில்லால்
வில்வாங்கி
வில்லிமையினால்
வில்லை
வில்லைக்
வில்லிகைப்
வில்லைப்
1.104
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும்
நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன்
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி, பாடலுமே, கை வாள்
ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே.
2.013
2 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனைக்
குற்றானை, திருவிரலால்; கொடுங்காலனைச்
செற்றானை; சீர் திகழும் திருக்கோழம்பம்
பற்றானை; பற்றுவார்மேல் வினை பற்றாவே.
2.072
2 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வில் ஆர் வரை ஆக, மா நாகம் நாண் ஆக, வேடம் கொண்டு
புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம்போலும் புலியும் மானும்
அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப, அடியார் கூடி,
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள் புரியும் திரு நணாவே.
3.062
3 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வில் மலை, நாண் அரவம், மிகு வெங்கனல் அம்பு, அதனால்,
புன்மை செய் தானவர் தம் புரம் பொன்றுவித்தான்; புனிதன்;
நல் மலர்மேல் அயனும், நண்ணு நாரணனும்(ம்), அறியாத்
தன்மையன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.
3.079
3 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும்,
வேதமுதலோன்,
இல்லை உளது என்று இகலி நேட, எரி ஆகி, உயர்கின்ற பரன் ஊர்
எல்லை இல் வரைத்த கடல்வட்டமும் இறைஞ்சி நிறை, வாசம் உருவக்
கொல்லையில் இருங் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர்,
கோகரணமே.
5.001
5 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லை வட்டம் மதில் மூன்று உடன்மாய்த்தவன்
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை
ஒல்லை, வட்டம் கடந்து, ஓடுதல் உண்மையே.
6.014
6 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம்
பொருத்து ஆகி, விரிசடைமேல் அருவி வைத்தார்;
கல் அருளி வரிசிலையா வைத்தார்; ஊராக் கயிலாயமலை வைத்தார்; கடவூர் வைத்தார்;
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார்; சுடுசுடலைப் பொடி வைத்தார்; துறவி வைத்தார்;
நல் அருளால்-திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
6.037
6 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
வில் ஆடி வேடனே! என்றேன், நானே; வெண்நீறு மெய்க்கு அணிந்தாய்! என்றேன், நானே;
சொல் ஆய சூழலாய்! என்றேன், நானே; சுலா ஆய தொன்னெறியே! என்றேன், நானே;
எல்லாம் ஆய் என் உயிரே! என்றேன், நானே; இலங்கையர்கோன் தோள் இறுத்தாய்! என்றேன், நானே;
அல்லா வினை தீர்க்கும் ஐயாற(ன்)னே! என்றுஎன்றே நான் அரற்றி நைகின்றேனே!.
7.049
7 st/nd Thirumurai
Song # 2
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வில்லைக் காட்டி வெருட்டி, வேடுவர், விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும், மோதியும், கூறை கொள்ளும் இடம்
முல்லைத்தாது மணம் கமழ் முருகன் பூண்டி மா நகர்வாய்,
எல்லைக் காப்பது ஒன்று இல்லை ஆகில், நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்? எம்பிரானீரே!
8.225
8 st/nd Thirumurai
Song # 13
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
வில்லிகைப் போதின் விரும்பா
அரும்பா வியர்களன்பிற்
செல்லிகைப் போதின் எரியுடை
யோன்தில்லை அம்பலஞ்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்
டூதவிண் தோய்பிறையோ
டெல்லிகைப் போதியல் வேல்வய
லூரற் கெதிர்கொண்டதே.
8.225
8 st/nd Thirumurai
Song # 17
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
வில்லைப் பொலிநுதல் வேற்பொலி
கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை
யால்நின்று வான்வழுத்துந்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்
பலஞ்சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்
யேதக்க வாய்மையனே.
10.835
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
வில்லின் விசைநாணில் கோத்திலக் கெய்தபின்
சொல்லுங் களிறைந்தும் கொலொடே சாய்ந்தன
இல்லில் இருந்தெறி கூறும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிர்எதி ராகுமே. 36,
12.080
12 st/nd Thirumurai
Song # 30
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
வில்லொடு வேல்வாள் தண்டு
பிண்டிபா லங்கள் மிக்க
வல்லெழு முசலம் நேமி
மழுக்கழுக் கடைமுன் னான
பல்படைக் கலன்கள் பற்றிப்
பைங்கழல் வரிந்த வன்கண்
எல்லையில் படைஞர் கொட்புற்
றெழுந்தனர் எங்கு மெங்கும்.
12.310
12 st/nd Thirumurai
Song # 9
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
வில்லால் எயில்மூன் றெரித்தபிரான்
விரையார் கமலச் சேவடிகள்
அல்லால் வேறு காணேன்யான்
அதுநீர் அறிதற் காரென்பார்
நில்லா நிலையீர் உணர்வின்றி
நுங்கண் குருடாய் என்கண்உல
கெல்லாங் காண யான்கண்டால்
என்செய் வீர்என் றெடுத்துரைத்தார்.
12.370
12 st/nd Thirumurai
Song # 167
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
வில்வாங்கி அலகம்பு
விசைநாணில் சந்தித்துக்
கொல்வோம்இங் கிட்டுப்போம்
எனக்கோபத் தாற்குத்தி
எல்லையில்பண் டாரமெலாங்
கவர்ந்துகொள இரிந்தோடி
அல்லலுடன் பறியுண்டார்
ஆரூரர் மருங்கணைந்தார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list