சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வெண்
வெண்
வெண்பா
வெண்ணீற்றின்
வெண்ணீறு
வெண்கோடல்
வெண்ணி
வெண்பொடி
வெண்திருநீற்
வெண்மதியின்
வெண்நாவல்
வெண்நிலாமதி
வெண்தலை
வெண்கொடி
வெண்மதி
வெண்ணித்
வெண்திரைப்
வெண்தலையும்
வெண்காட்டார்;
வெண்தலை,
1.008
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண் தலை மாலை விரவிப் பூண்ட மெய் உடையார், விறல் ஆர் அரக்கன்
வண்டு அமர் முடி செற்று உகந்த மைந்தர், இடம் வளம் ஓங்கி, எங்கும்
கண்டவர், சிந்தைக் கருத்தின் மிக்கார், கதி அருள்! என்று கை ஆரக் கூப்பி,
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
1.026
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி,
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர்,
ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும்
வெண் நிறத்த விடை சேர் கொடியாரே.
1.032
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண் கோவணம் கொண்டு, ஒரு வெண் தலை ஏந்தி,
அம் கோல்வளையாளை ஒரு பாகம் அமர்ந்து,
பொங்கா வரு காவிரிக் கோலக் கரைமேல்,
எம் கோன் உறைகின்ற இடைமருது ஈதோ.
1.118
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண் செ(ந்) நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான்,
பண் செலப் பல பாடல் இசை முரல் பருப்பதத்தை,
நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன், நல்ல
ஒண் சொலின் இவைமாலை உரு எண, தவம் ஆமே.
2.023
2 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண்நாவல் அமர்ந்து உறை வேதியனை,
கண் ஆர் கமழ் காழியர்தம் தலைவன்,
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார்
விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே.
2.027
2 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண்நிலாமதி சூடும் வேணியன்,
எண்ணிலார் மதில் எய்த வில்லினன்,
அண்ணல், இந்திரநீலப்பர்ப்பதத்து
உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே.
2.105
2 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண் நிலா மிகு விரிசடை அரவொடும், வெள் எருக்கு,
அலர்மத்தம்,
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வு உறு
கீழ்வேளூர்,
பெண் நிலாவிய பாகனை, பெருந்திருக்கோயில்
எம்பெருமானை,
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில்
உள்ளாரே.
2.120
2 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண்தலை ஓர் கலனாப் பலி தேர்ந்து, விரிசடைக்
கொண்டல் ஆரும் புனல் சேர்த்து, உமையாளொடும்
கூட்டமா,
விண்டவர்தம் மதில் எய்த பின், வேனில்வேள் வெந்து எழக்
கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே.
2.120
2 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண் புலால் மார்பு இடு துகிலினர், வெற்று அரை
உழல்பவர்,
உண் பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான்
ஒண் புலால் வேல் மிக வல்லவன், ஓங்கு எழில் கிள்ளி
சேர்
பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே.
3.059
3 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான்-
நண்பொடு நின்ற சீரான், தமிழ் ஞானசம்பந்தன்-நல்ல
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார்
விண் புடை மேல் உலகம் வியப்பு எய்துவர்; வீடு எளிதே.
3.098
3 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண்மதி தவழ் மதில் மிழலை உளீர், சடை
ஒண்மதி அணி உடையீரே;
ஒண்மதி அணி உடையீர்! உமை உணர்பவர்
கண் மதி மிகுவது கடனே.
3.107
3 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெண் நிலவு அம் சடை சேர வைத்து, விளங்கும் தலை ஏந்தி,
பெண்ணில் அமர்ந்து ஒரு கூறு அது ஆய பெருமான்; அருள் ஆர்ந்த
அண்ணல்; மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர் தன்னை
நண்ணல் அமர்ந்து, உறவு ஆக்குமின்கள்! நடலைகரிசு
அறுமே.
4.025
4 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண் நிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து(வ்)
உள்-நிலாப் புகுந்து நின்று, அங்கு உணர்வினுக்கு உணரக் கூறி,
விண் இலார்; மீயச்சூரார்; வேண்டுவார் வேண்டுவார்க்கே
அண்ணியார்; பெரிதும் சேயார்-அதிகை வீரட்டனாரே.
4.062
4 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்
உண்டதும் இல்லை; சொல்லில், உண்டது நஞ்சு தன்னை;
பண்டு உனை நினைய மாட்டாப் பளகனேன் உளம் அது ஆர,
அண்டனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!
4.097
4 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண்மதி சூடி விளங்க நின்றானை, விண்ணோர்கள் தொழ;
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே
திண் நிலயம் கொடு நின்றான்; திரி புரம் மூன்று எரித்தான்;
கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள, கழல்சேவடியே.
4.107
4 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண் தலை மாலையும், கங்கை, கரோடி, விரிசடைமேல்
பெண்டு அணி நாயகன்; பேய் உகந்து ஆடும் பெருந்தகையான்;
கண் தனி நெற்றியன்; காலனைக் காய்ந்து, கடலின் விடம்
உண்டு அருள் செய்த பிரான்கடவூர் உறை உத்தமனே
4.111
4 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண் திரைக் கங்கை விகிர்தா! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
கண்டிகை பூண்டு, கடி சூத்திரம்மேல் கபாலவடம்,
குண்டிகை, கொக்கரை, கொன்றை, பிறை, குறள் பூதப்படை
தண்டி வைத்திட்ட சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!
5.017
5 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண்ணித் தொல்-நகர் மேய வெண்திங்கள் ஆர்
கண்ணித் தொத்த சடையர்; கபாலியார்;
எண்ணித் தம்மை நினைந்து இருந்தேனுக்கு(வ்)
அண்ணித்திட்டு அமுது ஊறும், என் நாவுக்கே.
5.056
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண்திரைப் பரவை விடம் உண்டது ஓர்
கண்டனை, கலந்தார் தமக்கு அன்பனை,
கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய
அண்டனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே.
6.022
6 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண்தலையும் வெண்மழுவும் ஏந்தினானை, விரி கோவணம் அசைத்த வெண் நீற்றானை,
புண் தலைய மால்யானை உரி போர்த்தானை, புண்ணியனை, வெண் நீறு அணிந்தான் தன்னை
எண் திசையும் எரி ஆட வல்லான் தன்னை, ஏகம்பம் மேயானை, எம்மான் தன்னை,-
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.
6.051
6 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெண்காட்டார்; செங்காட்டங்குடியார்; வெண்ணி நன்நகரார்; வேட்களத்தார்; வேதம் நாவார்;
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார்; பராய்த்துறையார்; சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி உரித்து, உரிவை போர்த்த விடலை வேடம்
விண் காட்டும் பிறை நுதலி அஞ்சக் காட்டி, வீழிமிழலையே மேவினாரே.
7.070
7 st/nd Thirumurai
Song # 10
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வெண்தலை, பிறை, கொன்றையும், அரவும், வேரி மத்தமும், விரவி முன் முடித்த
இண்டை மா மலர்ச் செஞ்சடையானை; ஈசனை; திரு ஆவடுதுறையுள்
அண்டவாணனை; சிங்கடி அப்பன்-அணுக்க வன் தொண்டன்-ஆர்வத்தால் உரைத்த
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும்(ம்) அறுப்பாரே.
7.098
7 st/nd Thirumurai
Song # 6
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வெண்பொடி மேனியினான்; கருநீலமணி மிடற்றான்,
பெண் படி செஞ்சடையான், பிரமன் சிரம் பீடு அழித்தான்
பண்பு உடை நல்மறையோர் பயின்று ஏத்தி, பல்கால் வணங்கும்
நண்பு உடை-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
11.008
11 st/nd Thirumurai
Song # 190
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் விண்பால்
11.037
11 st/nd Thirumurai
Song # 100
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து திண் நோக்கில்
12.090
12 st/nd Thirumurai
Song # 35
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
வெண்ணீறு நெற்றி
விரவப் புறம்பூசி
உண்ணெஞ்சில் வஞ்சக்
கறுப்பும் உடன்கொண்டு
வண்ணச் சுடர்வாள்
மணிப்பலகை கைக்கொண்டு
புண்ணியப்போர் வீரர்க்குச்
சொன்னவி டம்புகுந்தான்.
12.140
12 st/nd Thirumurai
Song # 16
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
வெண்கோடல் இலைச்சுருளிற்
பைந்தோட்டு விரைத்தோன்றித்
தண்கோல மலர்புனைந்த
வடிகாதின் ஒளிதயங்கத்
திண்கோல நெற்றியின்மேல்
திருநீற்றின் ஒளிகண்டோர்
கண்கோடல் நிறைந்தாராக்
கவின்விளங்க மிசையணிந்து.
12.280
12 st/nd Thirumurai
Song # 359
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலில் நாள்மதிக்
கண்ணி யார்தங் கழலிணை போற்றியே
பண்ணில் நீடும் பதிகமும் பாடினார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 692
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
வெண்பொடி பூசுந் தொண்டர்
விரவினார் அவரை யெல்லாம்
கண்டுமுட் டடிகள் மார்கள்
கேட்டுமுட் டியானுங் காதல்
வண்டுணத் துதைந்த கோதை
மானியே இங்கு வந்த
பண்புமற் றிதுவே யாகும்
பரிசுவே றில்லை என்றான்.
12.290
12 st/nd Thirumurai
Song # 178
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
வெண்திருநீற் றணிதிகழ
விளங்குநூல் ஒளிதுளங்கக்
கண்டவர்கள் மனமுருகக்
கடும்பகற்போ திடும்பலிக்குப்
புண்டரிகக் கழல்புவிமேல்
பொருந்தமனை தொறும்புக்குக்
கொண்டுதாம் விரும்பியாட்
கொண்டவர்முன் கொடுவந்தார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 271
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
வெண்மதியின் கொழுந்தணிந்த
வீதிவிடங் கப்பெருமான்
ஒண்ணுதலார் புடைபரந்த
ஓலக்க மதனிடையே
பண்ணமரும் மொழிப்பரவை
யார்பாட லாடல்தனைக்
கண்ணுறமுன் கண்டுகேட்
டார்போலக் கருதினார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list