சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வெம்
வெம்பு
வெம்மை
வெம்மறக்
வெம்புசினக்
வெம்முனைமேற்
வெம்மைதரு
வெம்பினார்
வெம்
வெம்ப
வெம்,
1.010
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல்,
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை,
கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.
1.131
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய; விறல் அழிந்து, விண் உளோர்கள்,
செம்மலரோன், இந்திரன், மால், சென்று இரப்ப; தேவர்களே தேர் அது ஆக,
மைம் மருவு மேரு விலு, மாசுணம் நாண், அரி எரிகால் வாளி ஆக,
மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே.
4.059
4 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெம்பினார் அரக்கர் எல்லாம்; மிகச் சழக்கு ஆயிற்று என்று,
செம்பினால் எடுத்த கோயில் சிக்கெனச் சிதையும்! என்ன,
நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி,
அம்பினால் அழிய எய்தார்-அவளி வணல்லூராரே.
4.071
4 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெம் பனைக் கருங்கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த
கம்பனை, காலற் காய்ந்த காலனை, ஞாலம் ஏத்தும்
உம்பனை, உம்பர் கோனை, நாகைக் காரோணம் மேய
செம் பொனை, நினைந்த நெஞ்சே! திண்ணம், நாம் உய்ந்த ஆறே!
4.096
4 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன்
இம்மை உன் தாள் என் தன் நெஞ்சத்து எழுதிவை! ஈங்கு இகழில்
அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார்?-
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
5.043
5 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெம்மை ஆன வினைகடல் நீங்கி, நீர்,
செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்;
சும்மை ஆர் மலர் தூவித் தொழுமினோ,
நம்மை ஆள் உடையான் இடம் நல்லமே!
5.070
5 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்பமும் துயரும்(ம்) எனும் சூழ்வினை,
கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை,
எம்பிரான்! என வல்லவர்க்கு இல்லையே.
6.064
6 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெம் மான உழுவை அதள்-உரி போர்த்தான் காண்; வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி,
விம்மா நின்று, அழுவார்கட்கு அளிப்பான் தான்காண்; விடை ஏறித் திரிவான் காண்; நடம் செய் பூதத்து
அம்மான் காண்; அகலிடங்கள் தாங்கினான் காண்; அற்புதன் காண்; சொல்பதமும் கடந்து நின்ற
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
6.095
6 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம் நம்மேல்;| வெய்ய வினைப் பகையும் பைய நையும்;
எம் பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்;| எங்கு எழில் என் ஞாயிறு? எளியோம் அல்லோம்
அம் பவளச் செஞ்சடை மேல் ஆறு சூடி,| அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள வண்ணர், செங்குன்ற வண்ணர்,| செவ்வான வண்ணர், என் சிந்தையாரே.
8.103
8 st/nd Thirumurai
Song # 15
மாணிக்க வாசகர்
திருவாசகம்
வெம் துயர்க் கோடை மாத் தலை கரப்ப,
நீடு எழில் தோன்றி, வாள் ஒளி மிளிர,
எம் தம் பிறவியில் கோபம் மிகுத்து,
முரசு எறிந்து, மாப் பெரும் கருணையின் முழங்கி,
பூப் புரை அஞ்சலி காந்தள் காட்ட,
8.125
8 st/nd Thirumurai
Song # 10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
வெம், சேல் அனைய கண்ணார் தம் வெகுளி வலையில் அகப்பட்டு,
நைஞ்சேன், நாயேன்; ஞானச் சுடரே! நான் ஓர் துணை காணேன்;
பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா! பவளத் திருவாயால்,
அஞ்சேல்' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!
12.100
12 st/nd Thirumurai
Song # 107
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
வெம்மறக் குலத்து வந்த
வேட்டுவச் சாதி யார்போல்
கைம்மலை கரடி வேங்கை
அரிதிரி கானந் தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார்
ஒருவரு மின்றிக் கெட்டேன்
இம்மலைத் தனியே நீரிங்
கிருப்பதே என்று நைந்தார்.
12.190
12 st/nd Thirumurai
Song # 98
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
வெம்புசினக் களிற்றதிர்வும் மாவின் ஆர்ப்பும்
வியனெடுந்தேர்க் காலிசைப்பும் விழவ றாத
அம்பொன்மணி வீதிகளில் அரங்கி லாடும்
அரிவையர்நூ புரஒலியோ டமையும் இம்பர்
உம்பரின்இந் திரன்களிற்றின் முழக்குந் தெய்வ
உயர்இரவி மாக்கலிப்பும் அயனூர் தித்தேர்
பம்பிசையும் விமானத்துள் ஆடுந் தெய்வப்
பாவையர்நூ புரஅரவத் துடனே பல்கும்.
12.210
12 st/nd Thirumurai
Song # 31
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
வெம்முனைமேற் கலிப்பகையார்
வேல்வேந்தன் ஏவப்போய்
அம்முனையில் பகைமுருக்கி
அமருலகம் ஆள்வதற்குத்
தம்முடைய கடன்கழித்த
பெருவார்த்தை தலஞ்சாற்றச்
செம்மலர்மேல் திருவனைய
திலகவதி யார்கேட்டார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 392
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
வெம்மைதரு வேனிலிடை
வெயில்வெப்பந் தணிப்பதற்கு
மும்மைநிலைத் தமிழ்விரகர்
முடிமீதே சிவபூதம்
தம்மைஅறி யாதபடி
தண்தரளப் பந்தரெடுத்
தெம்மைவிடுத் தருள்புரிந்தார்
பட்டீசர் என்றியம்ப.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list