சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வெய்ய
வெய்ய
வெய்யமா
வெய்யநீற்
வெய்யதொழில்
வெய்யசுடர்க்
வெய்யவன்
வெய்யாய்!
வெய்யசெஞ்
1.091
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெய்ய வினை தீர, ஐயன் அணி ஆரூர்
செய்யமலர் தூவ, வையம் உமது ஆமே.
1.098
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது
செய்யபொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்,
தையல் ஒர்பாகம் மகிழ்வர்; நஞ்சு உண்பர்; தலைஓட்டில்
ஐயமும் கொள்வர்; ஆர், இவர் செய்கை அறிவாரே?
2.077
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெய்ய நோய் இலர்; தீது இலர்; வெறியராய்ப் பிறர் பின்
செலார்;
செய்வதே அலங்காரம் ஆம்; இவை இவை தேறி இன்பு
உறில்,
ஐயம் ஏற்று உணும் தொழிலர் ஆம் அண்ணலார்,
அறையணி நல்லூர்ச்
சைவனார் அவர், சார்வு அலால், யாதும் சார்வு இலோம்,
நாங்கே
3.053
3 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள்! ஆண்ட சீா
மை கொள் கண்டன், வெய்ய தீ மாலை ஆடு காதலான்,
கொய்ய விண்ட நாள்மலர்க்கொன்றை துன்று சென்னி எம்
ஐயன், மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே!
3.072
3 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெய்ய வினை நெறிகள் செல, வந்து அணையும் மேல்வினைகள் வீட்டல் உறுவீர்
மை கொள் விரி கானல், மது வார் கழனி மாகறல் உளான்-எழில் அது ஆர்
கைய கரி கால்வரையின் மேலது உரி-தோல் உடைய மேனி அழகு ஆர்
ஐயன்-அடி சேர்பவரை அஞ்சி அடையா, வினைகள்; அகலும், மிகவே.
3.115
3 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வெய்யவன் பல் உகுத்தது குட்டியே; வெங்கண் மாசுணம், கையது, குட்டியே;
ஐயனே! அனல் ஆடிய மெய்யனே! அன்பினால்
நினைவார்க்கு அருள் மெய்யனே!
வையம் உய்ய அன்று உண்டது காளமே; வள்ளல் கையது
மேவு கங்காளமே;
ஐயம் ஏற்பது உரைப்பது வீண், ஐயே! ஆலவாய் அரன்
கையது வீணையே.
6.087
6 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெய்யவன் காண்; வெய்ய கனல் ஏந்தினான் காண்; வியன் கெடில வீரட்டம் மேவினான் காண்;
மெய்யவன் காண்; பொய்யர் மனம் விரவாதான் காண்; வீணையோடு இசைந்து மிகு பாடல் மிக்க
கையவன் காண்; கையில் மழு ஏந்தினான் காண்; காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண்;
செய்யவன் காண்; செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
7.024
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம்
செய்ய மலர்கள் இட, மிகு செம்மையுள் நின்றவனே!
மை ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
ஐயா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
7.070
7 st/nd Thirumurai
Song # 7
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வெய்ய மா கரி ஈர் உரியானே! வேங்கை ஆடையினாய்! விதி முதலே!
மெய்யனே! அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட, நீ கொடுத்து அருள்புரி விகிர்தா!
செய்ய மேனியனே! திகழ் ஒளியே! செங்கணா! திரு ஆவடுதுறையுள்
ஐயனே! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
7.080
7 st/nd Thirumurai
Song # 6
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
வெய்ய வினை ஆய அடியார்மேல் ஒழித்துஅருளி
வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரைமேல்
செய்ய சடை முடியான்-திருக்கேதீச்சுரத்தானே.
8.101
8 st/nd Thirumurai
Song # 8
மாணிக்க வாசகர்
திருவாசகம்
வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!
பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!
8.114
8 st/nd Thirumurai
Song # 7
மாணிக்க வாசகர்
திருவாசகம்
வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய
கையைத் தறித்தானென் றுந்தீபற
கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற.
8.147
8 st/nd Thirumurai
Song # 1
மாணிக்க வாசகர்
திருவாசகம்
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல, மெய் உருகி,
பொய்யும் பொடி ஆகாது; என் செய்கேன்? செய்ய
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ
மருவாது இருந்தேன் மனத்து.
9.017
9 st/nd Thirumurai
Song # 1
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய
வீங்கிருள் நடுநல்யா மத்தோர்
பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து
பாவியேன் காதல்செய் காதில்
ஐயசெம் பொன்தோட் டவிர்சடை மொழுப்பின்
அழிவழ கியதிரு நீற்று
மையசெங் கண்டத் தண்டவா னவர்கோன்
மருவிடந் திருவிடை மருதே.
12.100
12 st/nd Thirumurai
Song # 77
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
வெய்யமா எழுப்பஏவி
வெற்பராயம் ஓடிநேர்
எய்யும்வாளி முன்தெரிந்து
கொண்டுசெல்ல எங்கணும்
மொய்குரல் துடிக்குலங்கள்
பம்பைமுன் சிலைத்தெழக்
கைவிளித் ததிர்த்துமா
எழுப்பினார்கள் கானெலாம்.
12.210
12 st/nd Thirumurai
Song # 98
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
வெய்யநீற் றறையதுதான்
வீங்கிளவே னிற்பருவந்
தைவருதண் தென்றல்அணை
தண்கழுநீர்த் தடம்போன்று
மொய்யொளிவெண் ணிலவலர்ந்து
முரன்றயாழ் ஒலியினதாய்
ஐயர்திரு வடிநீழல்
அருளாகிக் குளிர்ந்ததே.
12.280
12 st/nd Thirumurai
Song # 704
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
வெய்ய தீங்கிது வேந்தன்மேற்
றெனும்விதி முறையால்
செய்ய னேதிரு வாலவாய்
எனுந்திருப் பதிகம்
சைவர் வாழ்மடத் தமணர்கள்
இட்டதீத் தழல்போய்ப்
பைய வேசென்று பாண்டியற்
காகெனப் பணித்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 733
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
வெய்யதொழில் அமண்குண்டர்
விளைக்கவரும் வெதுப்பவர்தாஞ்
செய்யுமதி மாயைகளால்
தீராமைத் தீப்பிணியால்
மையலுறு மன்னவன்முன்
மற்றவரை வென்றருளில்
உய்யும்எம துயிரும் அவன்
உயிருமென உரைத்தார்கள்.
12.300
12 st/nd Thirumurai
Song # 16
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
வெய்யசுடர்க் கதிரவனும்
மேல்பாலை மலையணையச்
சைவநெறி மெய்யுணர்ந்தோர்
ஆன்இனங்கள் தாமேமுன்
பையநடப் பனகன்றை
நினைந்துபடர் வனவாகி
வையநிகழ் சாத்தனூர்
வந்தெய்தப் பின்போனார்.
12.310
12 st/nd Thirumurai
Song # 11
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
வெய்ய தொழிலார் செய்கையின்மேல்
வெகுண்ட தண்டி யடிகள்தாம்
மைகொள் கண்டர் பூங்கோயில்
மணிவா யிலின்முன் வந்திறைஞ்சி
ஐய னேஇன்று அமணர்கள்தாம்
என்னை யவமா னஞ்செய்ய
நைவ தானேன் இதுதீர
நல்கு மடியேற் கெனவீழ்ந்தார்.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list