![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Easy version Classic version Selected Thirumurai
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.001  
தோடு உடைய செவியன், விடை
பண் - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; அருள்தரு திருநிலைநாயகி
உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயி லுள்ளிருக்கும் பிரமதீர்த்தத்திற்குப் புறப்பட் டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கொட்டிக் கொண்டு அழுதார். தந்தையார் தன் மைந்தரைப் பார்த்து உன் செய்கை இதுவாயின் உடன் வருக எனக் கூறி அவரையும் உடனழைத்துக் கொண்டு சென்று பிரம தீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். சில நிமிடங்கள் முழ்கியிருந்து செபித்தற்குரிய அகமர்ஷண மந்திரங் களைச் சொல்லிக் கொண்டு நீரில் மூழ்கினார். இந்நிலையில் கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தை யாரைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத் தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப அம்மே அப்பா என அழைத்து அழுதருளினார். பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளி னார். பெருமான் உமையம்மையை நோக்கி அழுகின்ற இப் பிள்ளைக்கு உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டுக எனப்பணித்தார். அம்மையாரும் அவ்வாறே தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார். தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைக்காத பேரின்பம் பெற்ற நிலையில் பிள்ளையார் திருஞானசம்பந்தராய் அபரஞானம் பரஞானம் அனைத்தும் கைவரப் பெற்றார். அப்பொழுது நீரில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரை யேறிய சிவபாத இருதயர் சிவஞானத் திருவுருவாய்க் கரையில் நிற்கும் தம்மைந்தரைக் கண்டார். கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்ட அவர், தன் மகனார்க்கு யாரோ பால் அளித்துச் சென்றுள்ளார்கள் என்று எண்ணியவராய் ஞான போனகரை நோக்கிப் பிள்ளாய் நீ யார் அளித்த பால் அடிசிலை உண்டாய்? எச்சில் கலக்குமாறு உனக்கு இதனை அளித்தவர் யார்? காட்டுக என்று வெகுண்டு தரையில் கிடந்த கோல் ஒன்றைக் கையில் எடுத்து ஓச்சியவ ராய் வினவினார். சிறிய பெருந்தகையார் தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தமிழ் என்னும் மொழியின் முதல் எழுத்தாகிய தகர மெய்யில் பிரணவத்தை உயிராய் இணைத்துத் தனக்குப் பாலளித்த உமைஅம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் தோடுடைய செவியன் என்ற முதற்பெரும் பாடலால் தனக்குப் பாலளித்த கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப் பதிகம் அருளிச்செய்தார்.
முன் பிறப்பு நல் வினை கை கூட, இறைவன் அருள் பெற Audio: https://www.youtube.com/watch?v=Yq-NOZQxd64
Audio: https://www.youtube.com/watch?v=aMbVA3-pBEY
Audio: https://www.youtube.com/watch?v=awJj7vVhUOk
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. | [1] |
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன் கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப் பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. | [2] |
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப் பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. | [3] |
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில் உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன் மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில் பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. | [4] |
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன் கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப் பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. | [5] |
மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன் கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப் பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. | [6] |
சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன் கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம் பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. | [7] |
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன் துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம் பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. | [8] |
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும் நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன் வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப் பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. | [9] |
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன் மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப் பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. | [10] |
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.006  
அங்கமும் வேதமும் ஓதும் நாவர்
பண் - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை (திருத்தலம் திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் ; அருள்தரு வண்டுவார்குழலி திருக்குழல்நாயகி உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணர் கணபதீசுவரர் திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் திருமருகலில் தங்கியிருந்தபோது, சிறுத் தொண்ட நாயனார் அவரை வணங்கி மீண்டும் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். மருகற் பெருமானை வணங்கி விடைபெறச் சென்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் செங்காட்டங்குடிக் காட்சியைக் காட்ட இரு தலங்களையும் இணைத்து அங்கமும் வேதமும் என்ற திருப்பதிகம் பாடிப் போற்றிச் சிறுத் தொண்டருடன் செங்காட்டங்குடி சென்று கணபதீச் சுரத்தை வழிபட்டுக் கொண்டு சிலநாள் அங்குத் தங்கியிருந்தார். Audio: https://sivaya.org/audio/1.006_angamum vedhamum.mp3
Audio: https://www.youtube.com/watch?v=9o9uMkq3Qd4
அங்கமும் வேதமும் ஓதும்நாவர் அந்தணர் நாளும் அடிபரவ மங்குன் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செங்கய லார்புனற் செல்வமல்கு சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. | [1] |
நெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூன்மறை யாளரேத்த மைதவழ் மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செய்தவ நான்மறை யோர்களேத்துஞ் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கைதவழ் கூரெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. | [2] |
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ மால்புகை போய்விம்மு மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சேல்புல்கு தண்வயற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கால்புல்கு பைங்கழ லார்க்கவாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. | [3] |
நாமரு கேள்வியர் வேள்வியோவா நான்மறை யோர்வழி பாடுசெய்ய மாமரு வும்மணிக் கோயின்மேய மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. | [4] |
பாடன் முழவும் விழவுமோவாப் பன்மறை யோரவர் தாம்பரவ மாட நெடுங்கொடி விண்டடவும் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் காடக மேயிட மாகவாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. | [5] |
புனையழ லோம்புகை யந்தணாளர் பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப மனைகெழு மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சினைகெழு தண்வயற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கனைவளர் கூரெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. | [6] |
இப்பாடல் கிடைக்கவில்லை. | [7] |
பூண்டங்கு மார்பி னிலங்கைவேந்தன் பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து மாண்டங்கு நூன்மறை யோர்பரவ மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. | [8] |
அந்தமு மாதியுந் நான்முகனு மரவணை யானு மறிவரிய மந்திர வேதங்க ளோதுநாவர் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கந்தம கிற்புகை யேகமழுங் கணபதி யீச்சரங் காமுறவே. | [9] |
இலைமரு தேயழ காகநாளும் இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும் நிலையமண் தேரரை நீங்கிநின்று நீதரல் லார்தொழு மாமருகல் மலைமக டோள்புணர் வாயருளாய் மாசில்செங் காட்டங் குடியதனுள் கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே. | [10] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.010  
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய
பண் - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை (திருத்தலம் திருவண்ணாமலை ; அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://sivaya.org/audio/1.010 unnamulai.mp3
Audio: https://www.youtube.com/watch?v=JseyYCTqhG0
உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே. | [1] |
தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித் தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல் பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே. | [2] |
பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம் சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல் ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல் காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே. | [3] |
உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம் எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால் முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல் அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே. | [4] |
மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல் உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார் குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே. | [5] |
பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப் பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக் கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே. | [6] |
கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில் நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே. | [7] |
ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால் பிளிறூகுரன் மதவாரண வதனம்பிடித் துரித்து வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை அளறூபட வடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே. | [8] |
விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக் கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும் அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல் தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே. | [9] |
வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும் மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும் ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல் கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே. | [10] |
வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல் அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக் கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.018  
சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,
பண் - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை (திருத்தலம் திருநின்றியூர் ; அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு இலட்சுமியீசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=vMdjKpqwUzU
சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக் காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும் நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்னிலை யோர்க்கே. | [1] |
அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார் நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில் நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும் பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே. | [2] |
பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில் உறையும்மிறை யல்லதென துள்ளம் உணராதே. | [3] |
பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத் தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில் ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே. | [4] |
குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும் நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில் அழலின்வல னங்கையது வேந்தியன லாடும் கழலின்னொலி யாடும்புரி கடவுள்களை கண்ணே. | [5] |
மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம் சாரன்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த வீரன்மலி யழகார்பொழில் மிடையுந்திரு நின்றி யூரன்கழ லல்லாதென துள்ளம்முண ராதே. | [6] |
பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும் பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார் சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும் நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்னிலை யாரே. | [7] |
இப்பாடல் கிடைக்கவில்லை. | [8] |
நல்லம்மலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான் அல்லரென வாவரென நின்றும்மறி வரிய நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரின்னிலை யாரெம் செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே. | [9] |
நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில் மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே. | [10] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.023  
மடையில் வாளை பாய, மாதரார் குடையும்
பண் - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி (திருத்தலம் திருக்கோலக்கா ; அருள்தரு ஓசைகொடுத்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு சத்தபுரீசர் திருவடிகள் போற்றி )
உமையம்மையார் அளித்த ஞானவாரமுதம் உண்டு திரு நெறிய தமிழ் பாடிய திருஞானசம்பந்தர் தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்து மறுநாட் காலையில் துயிலுணர்ந் தெழுந்து நீராடி திருக்கழுமலத்தீசனை வணங்கிப் போற்றி, சீகாழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை உடையவ ராய் அத்தலத்தை அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று மடையில் வாளை எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தைத் தம் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். கோலக்கா இறைவன் பிள்ளையார் கைகள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம் பந்தருக்கு அளித்தருளினார். ஞானசம்பந்தர் அத்தாளத்தைத் தலை மேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தலயாத்திரையாக இது அமைந்தது.
நல்ல தாளம், இசை கை வர Audio: https://sivaya.org/audio/1.023 Madaiyil Vaalai.mp3
Audio: https://www.youtube.com/watch?v=C9dg_z7o0uY
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீள் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. | [1] |
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி கொண்டான் கோலக் காவு கோயிலாக் கண்டான் பாதங் கையாற் கூப்பவே உண்டா னஞ்சை யுலக முய்யவே. | [2] |
பூணற் பொறிகொ ளரவம் புன்சடை கோணற் பிறையன் குழகன் கோலக்கா மாணப் பாடி மறைவல் லானையே பேணப் பறையும் பிணிக ளானவே. | [3] |
தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர் மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான் குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா இழுக்கா வண்ண மேத்தி வாழ்மினே. | [4] |
மயிலார் சாயன் மாதோர் பாகமா எயிலார் சாய வெரித்த வெந்தைதன் குயிலார் சோலைக் கோலக் காவையே பயிலா நிற்கப் பறையும் பாவமே. | [5] |
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் அடிகள் பாத மடைந்து வாழ்மினே. | [6] |
நிழலார் சோலை நீல வண்டினங் குழலார் பண்செய் கோலக் காவுளான் கழலான் மொய்த்த பாதங் கைகளால் தொழலார் பக்கல் துயர மில்லையே. | [7] |
எறியார் கடல்சூ ழிலங்கைக் கோன்றனை முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன் குறியார் பண்செய் கோலக் காவையே நெறியாற் றொழுவார் வினைகள் நீங்குமே. | [8] |
நாற்ற மலர்மே லயனு நாகத்தில் ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக் கூற்ற முதைத்த குழகன் கோலக்கா ஏற்றான் பாத மேத்தி வாழ்மினே. | [9] |
பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும் உற்ற துவர்தோ யுருவி லாளருங் குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப் பற்றிப் பரவப் பறையும் பாவமே. | [10] |
நலங்கொள் காழி ஞானசம் பந்தன் குலங்கொள் கோலக் காவு ளானையே வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோ யோங்கி வாழ்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.041  
சீர் அணி திகழ் திருமார்பில்
பண் - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி (திருத்தலம் திருப்பாம்புரம் ; அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை (எ) வண்டார்பூங்குழலி உடனுறை அருள்மிகு பாம்புரேசர் (எ) பாம்புரநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=Eogq2gNyTwQ
சீரணிதிகழ்திரு மார்பில்வெண்ணூலர் திரிபுரமெரிசெய்த செல்வர் வாரணிவனமுலை மங்கையோர்பங்கர் மான்மறியேந்திய மைந்தர் காரணிமணிதிகழ் மிடறுடையண்ணல் கண்ணுதல் விண்ணவரேத்தும் பாரணிதிகழ்தரு நான்மறையாளர் பாம்புர நன்னகராரே. | [1] |
கொக்கிறகோடு கூவிளமத்தங் கொன்றையொ டெருக்கணிசடையர் அக்கினொடாமை பூண்டழகாக அனலதுவாடுமெம் மடிகள் மிக்கநல்வேத வேள்வியுளெங்கும் விண்ணவர்விரைமலர் தூவப் பக்கம்பல்பூதம் பாடிடவருவார் பாம்புர நன்னகராரே. | [2] |
துன்னலினாடை யுடுத்ததன்மேலோர் சூறைநல்லரவது சுற்றிப் பின்னுவார்சடைகள் தாழவிட்டாடிப் பித்தராய்த்திரியுமெம் பெருமான் மன்னுமாமலர்கள் தூவிடநாளும்மாமலையாட்டியுந் தாமும் பன்னுநான்மறைகள் பாடிடவருவார் பாம்புர நன்னகராரே. | [3] |
துஞ்சுநாள்துறந்து தோற்றமுமில்லாச் சுடர்விடுசோதியெம் பெருமான் நஞ்சுசேர்கண்ட முடையவென்னாதர் நள்ளிருள்நடஞ்செயுந் நம்பர் மஞ்சுதோய்சோலை மாமயிலாட மாடமாளிகைதன்மே லேறிப் பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர்பயிலும் பாம்புர நன்னகராரே. | [4] |
நதியதனயலே நகுதலைமாலை நாண்மதிசடைமிசை யணிந்து கதியதுவாகக் காளிமுன்காணக் கானிடைநடஞ்செய்த கருத்தர் விதியதுவழுவா வேதியர்வேள்வி செய்தவரோத்தொலி யோவாப் பதியதுவாகப் பாவையுந்தாமும் பாம்புர நன்னகராரே. | [5] |
ஓதிநன்குணர்வார்க் குணர்வுடையொருவ ரொளிதிகழுருவஞ்சே ரொருவர் மாதினையிடமா வைத்தவெம்வள்ளல் மான்மறியேந்திய மைந்தர் ஆதிநீயருளென் றமரர்கள்பணிய அலைகடல்கடையவன் றெழுந்த பாதிவெண்பிறைசடை வைத்தவெம்பரமர் பாம்புர நன்னகராரே. | [6] |
மாலினுக்கன்று சக்கரமீந்து மலரவற்கொருமுக மொழித்து ஆலின்கீழறமோர் நால்வருக்கருளி யனலதுவாடுமெம் மடிகள் காலனைக்காய்ந்து தங்கழலடியாற் காமனைப்பொடிபட நோக்கிப் பாலனுக்கருள்கள் செய்தவெம்மடிகள் பாம்புர நன்னகராரே. | [7] |
விடைத்தவல்லரக்கன் வெற்பினையெடுக்க மெல்லியதிருவிர லூன்றி அடர்த்தவன்றனக்கன் றருள்செய்தவடிக ளனலதுவாடுமெம் மண்ணல் மடக்கொடியவர்கள் வருபுனலாட வந்திழியரிசிலின் கரைமேல் படப்பையிற்கொணர்ந்து பருமணிசிதறும் பாம்புர நன்னகராரே. | [8] |
கடிபடுகமலத் தயனொடுமாலுங் காதலோடடிமுடி தேடச் செடிபடுவினைக டீர்த்தருள்செய்யுந் தீவணரெம்முடைச் செல்வர் முடியுடையமரர் முனிகணத்தவர்கள் முறைமுறையடிபணிந் தேத்தப் படியதுவாகப் பாவையுந்தாமும் பாம்புர நன்னகராரே. | [9] |
குண்டர்சாக்கியருங் குணமிலாதாருங் குற்றுவிட்டுடுக்கையர் தாமுங் கண்டவாறுரைத்துக் கானிமிர்த்துண்ணுங் கையர்தாமுள்ளவா றறியார் வண்டுசேர்குழலி மலைமகணடுங்க வாரணமுரிசெய்து போர்த்தார் பண்டுநாஞ்செய்த பாவங்கள்தீர்ப்பார் பாம்புர நன்னகராரே. | [10] |
பார்மலிந்தோங்கிப் பருமதில்சூழ்ந்த பாம்புரநன்னக ராரைக் கார்மலிந்தழகார் கழனிசூழ்மாடக் கழுமலமுதுபதிக் கவுணி நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்செந்தமிழ் வல்லார் சீர்மலிந்தழகார் செல்வமதோங்கிச் சிவனடி நண்ணுவர்தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.044  
துணி வளர் திங்கள் துளங்கி
பண் - தக்கராகம் தீரசங்கராபரணம் ஆராபி (திருத்தலம் திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) ; அருள்தரு பாலசுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு மாற்றறிவரதர் திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில் புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந் தார். அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் என்பான் முயலகன் என்ற நோயினால் வருந்தி வந்த தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் பாச்சிலாச் சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தியிருந் தான். திருஞானசம்பந்தர் வருகையை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தில் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு அம்மழவனை வினவியறிந்து அப்பெண்ணுக்கு ஏற்பட்ட முயலகன் என்னும் நோயைப் போக்கி யருளுமாறு இறைவனை வேண்டி, துணிவளர்திங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார். அந்நிலையில் அப்பெண், நோய் நீங்கி நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவன் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கித் தன் நன்றியறிதலைப் புலப்படுத்திக் கொண்டான்.
இரத்த அழுத்த, நீரிழிவு நோய்கள் நீங்க, மூர்ச்சையிலிருந்து எழுவதற்கும், போதைப் பொருள்களிருந்து மீள ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=Ieof1SKHvNQ
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப் பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர் அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே. | [1] |
கலைபுனைமானுரி தோலுடையாடை கனல்சுட ராலிவர்கண்கள் தலையணிசென்னியர் தாரணிமார்பர் தம்மடிகள் ளிவரென்ன அலைபுனல்பூம்பொழில் சூழ்ந்தமர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற இலைபுனைவேலரோ வேழையைவாட விடர்செய்வதோ விவரீடே. | [2] |
வெஞ்சுடராடுவர் துஞ்சிருண்மாலை வேண்டுவர்பூண்பது வெண்ணூல் நஞ்சடைகண்டர் நெஞ்சிடமாக நண்ணுவர் நம்மைநயந்து மஞ்சடைமாளிகை சூழ்தருபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற செஞ்சுடர்வண்ணரோ பைந்தொடிவாடச் சிதைசெய்வதோ விவர்சீரே. | [3] |
கனமலர்க்கொன்றை யலங்கலிலங்கக் கனறரு தூமதிக்கண்ணி புனமலர்மாலை யணிந்தழகாய புனிதர்கொ லாமிவரென்ன வனமலிவண்பொழில் சூழ்தருபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற மனமலிமைந்தரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே. | [4] |
மாந்தர்தம்பானறு நெய்மகிழ்ந்தாடி வளர்சடை மேற்புனல்வைத்து மோந்தைமுழாக்குழல் தாளமொர்வீணை முதிரவோர் வாய்மூரிபாடி ஆந்தைவிழிச்சிறு பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற சாந்தணிமார்பரோ தையலைவாடச் சதுர்செய்வதோ விவர்சார்வே. | [5] |
நீறுமெய்பூசி நிறைசடைதாழ நெற்றிக்கண் ணாலுற்றுநோக்கி ஆறதுசூடி யாடரவாட்டி யைவிரற் கோவணவாடை பாறருமேனியர் பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற ஏறதுவேறிய ரேழையைவாட விடர்செய்வதோ விவரீடே. | [6] |
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே. | [7] |
ஏவலத்தால்விச யற்கருள்செய்து இராவண னையீடழித்து மூவரிலும்முத லாய்நடுவாய மூர்த்தியை யன்றிமொழியாள் யாவர்களும்பர வும்மெழிற்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற தேவர்கள்தேவரோ சேயிழைவாடச் சிதைசெய்வதோ விவர்சேர்வே. | [8] |
மேலதுநான்முக னெய்தியதில்லை கீழது சேவடிதன்னை நீலதுவண்ணனு மெய்தியதில்லை யெனவிவர் நின்றதுமல்லால் ஆலதுமாமதி தோய்பொழிற்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற பாலதுவண்ணரோ பைந்தொடிவாடப் பழிசெய்வதோ விவர்பண்பே. | [9] |
நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும் ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே. | [10] |
அகமலியன்பொடு தொண்டர்வணங்க வாச்சிரா மத்துறைகின்ற புகைமலிமாலை புனைந்தழகாய புனிதர்கொ லாமிவரென்ன நகைமலிதண்பொழில் சூழ்தருகாழி நற்றமிழ் ஞானசம்பந்தன் தகைமலிதண்டமிழ் கொண்டிவையேத்தச் சாரகி லாவினைதானே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.049  
போகம் ஆர்த்த பூண் முலையாள்
பண் - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி (திருத்தலம் திருநள்ளாறு ; அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியர் திருவடிகள் போற்றி )
யாழ்ப்பாணர் அப்பதிகஇசை தம் கருவியில் அடங்காததை உணர்ந்து இக்கருவியினாலன்றோ உறவினர் ஞானசம்பந்தரையும் தன்னையும் ஏற்றத் தாழ்வு கற்பிக்க முற்பட்டனர் என, அதனை உடைத்தற்கு ஓங்கினார். ஞானசம்பந்தர் அதனைத் தடுத்து, இறைவன் பெருமை இக்கருவியில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் இயன்றவாறு வாசிப்பீர் எனத் திரும்பக் கொடுத்து, இசைத் தொண்டு செய்யப் பணித்து, சிலநாள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து போகமார்த்த பூண் முலையாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவரை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.
பச்சை திருப்பதிகம் - வினை நீக்கம் - சனிக்கிரக தாக்குதல் நீங்க ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=ba-MJnMHA28
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே. | [1] |
தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப் பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன் ஏடுடைய மேலுலகோ டேழ்கட லுஞ்சூழ்ந்த நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே. | [2] |
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி யணியிழையோர் பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே. | [3] |
புல்கவல்ல வார்சடைமேற் பூம்புனல் பெய்தயலே மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப் பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாதநி ழற்சேர நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. | [4] |
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம் ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே. | [5] |
திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள் எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத் தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம் நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே. | [6] |
வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொண் முழவதிர அஞ்சிடத்தோ ராடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச் செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. | [7] |
சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால் சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப் பட்டமார்ந்த சென்னிமேலோர் பான்ம தியஞ்சூடி நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. | [8] |
உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுடனே யொடுக்கி அண்ணலாகா வண்ணல்நீழல் ஆரழல் போலுருவம் எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர் நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே. | [9] |
மாசுமெய்யர் மண்டைத் தேரர் குண்டர்கு ணமிலிகள் பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின் மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி ளும்முடனே நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே. | [10] |
தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன் நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார் உண்புநீங்கி வானவரோ டுலகில் உறைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.052  
மறை உடையாய்! தோல் உடையாய்!
பண் - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி (திருத்தலம் திருநெடுங்களம் ; அருள்தரு ஒப்பிலாநாயகியம்மை உடனுறை அருள்மிகு நித்தியசுந்தரர் திருவடிகள் போற்றி )
இடர் களையும் பதிகம்
அவமானங்கள், வீண்பழி காரியத்திலும் தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு ஓத வேண்டிய பதிகம். Audio: https://www.youtube.com/watch?v=u5teN1hhIxI
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. | [1] |
கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத் தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை மனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும் நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. | [2] |
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும் நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. | [3] |
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய் அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ் நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. | [4] |
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர் தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித் தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ் நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. | [5] |
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய் அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும் நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. | [6] |
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால் மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல் ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. | [7] |
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை அன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய் என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும் நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. | [8] |
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ் சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய் கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின் நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. | [9] |
வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும் தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார் துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. | [10] |
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச் சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால் நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.062  
நாள் ஆய போகாமே, நஞ்சு
பண் - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி (திருத்தலம் திருக்கோளிலி (திருக்குவளை) ; அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு கோளிலியப்பர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=apnzZFYxrWY
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய வன்புசெய்வோ மடநெஞ்சே யரனாமம் கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக் கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே. | [1] |
ஆடரவத் தழகாமை யணிகேழற் கொம்பார்த்த தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில் கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே. | [2] |
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண் டொன்றிவழி பாடுசெய லுற்றவன்ற னோங்குயிர்மேல் கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான் கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே. | [3] |
வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும் சிந்தைசெய்வோன் றன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத் தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக் கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே. | [4] |
வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலுநற் பூசனையால் நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும் பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபத மீந்துகந்தான் கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே. | [5] |
தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை ஆவிதனி லஞ்சொடுக்கி யங்கணனென் றாதரிக்கும் நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன் கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே. | [6] |
கன்னவிலு மால்வரையான் கார்திகழு மாமிடற்றான் சொன்னவிலு மாமறையான் றோத்திரஞ்செய் வாயினுளான் மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியா னங்கையினில் கொன்னவிலுஞ் சூலத்தான் கோளிலியெம் பெருமானே. | [7] |
அந்தரத்திற் றேரூரு மரக்கன்மலை யன்றெடுப்பச் சுந்தரத்தன் றிருவிரலா லூன்றஅவன் உடல்நெரிந்து மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானும் கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. | [8] |
நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத் தாணுவெனை யாளுடையான் தன்னடியார்க் கன்புடைமை பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. | [9] |
தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல் இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே யேத்துமின்கள் நடுக்கமிலா வமருலகம் நண்ணலுமா மண்ணல்கழல் கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே. | [10] |
நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்கும் கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண் டின்பமர வல்லார்கள் எய்துவர்க ளீசனையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.092  
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு
பண் - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி (திருத்தலம் திருவீழிமிழலை ; அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில்தங்கி யிருந்த காலத்து மழையின்மையால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. உயிர்களெல்லாம் பசியால் வருத்தமுற்றன. அடியார்களும் துயருற் றனர். அதனை அறிந்த பிள்ளையார் கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் இரவில் துயிலலுற்றார். பெருமான் அவர் கனவில் தோன்றிப் பஞ்சம் நீங்கும் கால எல்லைவரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும்பொற்காசு அளிக்கின்றோம்! எனக்கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்ப மூர்த்திகளுடன் ஆலயம் சென்றார். கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்தருளினர். இங்ஙனம் நிகழும் நாள்களில் நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்த்தும் அமுதளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், உரியவர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும் அதனால் அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாழ்ச்சி ஏற்படுதலையும் அறிந்த ஞானசம்பந்தர், அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று வாசிதீரவே காசு நல்குவீர் எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார். சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வறுமை நீங்கும் Audio: https://sivaya.org/audio/1.092 Vaasi Theerave.mp3
Audio: https://www.youtube.com/watch?v=jNtQljtdzhE
வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. | [1] |
இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. | [2] |
செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர் பைகொ ளரவினீர் உய்ய நல்குமே. | [3] |
நீறு பூசினீர் ஏற தேறினீர் கூறு மிழலையீர் பேறு மருளுமே. | [4] |
காமன் வேவவோர் தூமக் கண்ணினீர் நாம மிழலையீர் சேம நல்குமே. | [5] |
பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர் அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே. | [6] |
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே. | [7] |
அரக்க னெரிதர இரக்க மெய்தினீர் பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே. | [8] |
அயனு மாலுமாய் முயலு முடியினீர் இயலு மிழலையீர் பயனு மருளுமே. | [9] |
பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார் வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே. | [10] |
காழி மாநகர் வாழி சம்பந்தன் வீழி மிழலைமேல் தாழு மொழிகளே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.094  
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
பண் - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் திருமறைக் காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் ஏறிப் புறப்பட்டு அகத்தியான்பள்ளி, கோடிக் குழகர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றம் பணிந்து மதுரையின் எல்லையை அடைந்தார், மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து ஊர் எல்லையில் வரவேற்குமாறு குலச்சிறை யாரை அனுப்பியிருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந் தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகை யிலிருந்து இறங்கி அரசியார்க்கும் அமைச்சர்க்கும் திருவருளால் நன்மைகள் விளைக என வாழ்த்தினார். குலச்சிறையார் இன்று தாங்கள் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையோம். இனி எங்கள் நாட்டில் திருநீற்றொளி விளங்குவது உறுதி என முகமனுரை கூறி, மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதைத் தெரிவித்தார். மேலும் மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி அதுவே திருவால வாய் எனக் கூறக்கேட்டு மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறை யாருடன் வலங்கொண்டு பணிந்து நீலமாமிடற்று எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ மதுரையை தரிசித்த பலன் கிடைக்கும் Audio: https://www.youtube.com/watch?v=vCNP3lGfb-E
நீல மாமிடற் றால வாயிலான் பால தாயினார் ஞால மாள்வரே. | [1] |
ஞால மேழுமாம் ஆல வாயிலார் சீல மேசொலீர் காலன் வீடவே. | [2] |
ஆல நீழலார் ஆல வாயிலார் கால காலனார் பால தாமினே. | [3] |
அந்த மில்புகழ் எந்தை யாலவாய் பந்தி யார்கழல் சிந்தை செய்ம்மினே. | [4] |
ஆட லேற்றினான் கூட லாலவாய் பாடி யேமனம் நாடி வாழ்மினே. | [5] |
அண்ண லாலவாய் நண்ணி னான்றனை எண்ணி யேதொழத் திண்ண மின்பமே. | [6] |
அம்பொ னாலவாய் நம்ப னார்கழல் நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே. | [7] |
அரக்க னார்வலி நெருக்க னாலவாய் உரைக்கு முள்ளத்தார்க் கிரக்க முண்மையே. | [8] |
அருவ னாலவாய் மருவி னான்றனை இருவ ரேத்தநின் றுருவ மோங்குமே. | [9] |
ஆர நாகமாம் சீர னாலவாய்த் தேர மண்செற்ற வீர னென்பரே. | [10] |
அடிக ளாலவாய்ப் படிகொள் சம்பந்தன் முடிவி லின்றமிழ் செடிக ணீக்குமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.098  
நன்று உடையானை, தீயது இலானை,
பண் - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி (திருத்தலம் திருச்சிராப்பள்ளி ; அருள்தரு மட்டுவார்குழலம்மை உடனுறை அருள்மிகு தாயுமானேசுவரர் திருவடிகள் போற்றி )
சுக பிரசவம் அமைவதற்கு ஓதவேண்டிய பதிகம் Audio: https://sivaya.org/audio/1.098 Nantruudayanai.mp3
Audio: https://sivaya.org/audio/1.098 nandurudaiyanai.mp3
Audio: https://www.youtube.com/watch?v=bgfBxgqq_lY
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச் சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே. | [1] |
கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான் செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே. | [2] |
மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல் செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச் சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும் எந்தம்மடிக ளடியார்க்கல்ல லில்லையே. | [3] |
துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச் சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக் கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம் பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே. | [4] |
கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றும் சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித் தலைவரை நாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள் நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே. | [5] |
வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார் தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில் ஐயமுங்கொள்வ ராரிவர்செய்கை யறிவாரே. | [6] |
வேயுயர்சாரற் கருவிரலூகம் விளையாடும் சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார் பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார் தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. | [7] |
மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன் தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார் சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால் சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே. | [8] |
அரப்பள்ளியானு மலருறைவானு மறியாமைக் கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும் இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டா லிகழாரே. | [9] |
நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை ஊணாப்பகலுண் டோதுவோர்க ளுரைக்குஞ்சொல் பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார் சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. | [10] |
தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன் ஞானசம்பந்த னலமிகுபாட லிவைவல்லார் வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.116  
அவ் வினைக்கு இவ் வினை
பண் - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் (திருத்தலம் பொது -திருநீலகண்டப்பதிகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பாச்சிலாச் சிராமத்துப் பரமனைப் பணிந்து போற்றிய ஞான சம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான தலங்களை வணங்கிக் கொண்டு கொங்கு நாட்டிலுள்ள கொடிமாடச் செங்குன்றூரைச் சென்றடைந்தார். அங்கு விளங்கும் மாதொரு பாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் ஆனதால் அந்நிலத்தின் இயல்புப்படி பனி நோய் என்னும் குளிர் காய்ச்சல் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீல கண்டப் பெருமானைப் போற்றி அவ்வினைக்கு இவ்வினை என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்கட்கே யன்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.
விஷ சுரம் , விஷக்கடி முதலியன ம்ற்றும் தொண்டையில் உள்ள கோளாறுகள் நீங்குவதற்கும் , செய்வினை , பில்லி , சூனியம் பாதிக்காமல் இருக்கவும் ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=EELVXS3xdRY
Audio: https://www.youtube.com/watch?v=MpLvZhSMyNc
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். | [1] |
காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம் தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். | [2] |
முலைத்தட மூழ்கிய போகங் களுமற் றெவையுமெல்லாம் விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர் இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர் சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். | [3] |
விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். | [4] |
மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோளுடையீர் கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம் செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். | [5] |
மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப் பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம் பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். | [6] |
இப்பாடல் கிடைக்கவில்லை. | [7] |
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம் செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். | [8] |
நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாதுசெய்து தோற்ற முடைய வடியு முடியுந் தொடர்வரியீர் தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம் சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். | [9] |
சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும் பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பற்றும்விட்டார் பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம் தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். | [10] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.126  
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
பண் - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் (திருத்தலம் சீர்காழி ; அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
திருஜால ஜதியில் அமைந்த இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ நல்ல இசை ஞானம் வளரும் Audio: https://www.youtube.com/watch?v=k79jeHXwR6w
பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்ற வும்பரப் பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ் சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ் சேர்வார்நாணா ணீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ் சந்தித்தே யிந்தப்பார் சனங்கணின்று தங்கணாற் றாமேகாணா வாழ்வாரத் தகவுசெய்த வனதிடங் கந்தத்தா லெண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக் காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே. | [1] |
பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்தவெண்பொடிப் பீடார்நீடார் மாடாரும் பிறைநுத லரிவையொடும் உச்சத்தா னச்சிப்போ றொடர்ந்தடர்ந்த வெங்கணே றூராவூரா நீள்வீதிப் பயில்வொடு மொலிசெயிசை வச்சத்தா னச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார் வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங் கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங் காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே. | [2] |
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின் சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ டங்கைச்சேர் வின்றிக்கே யடைந்துடைந்த வெண்டலைப் பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும் பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின் போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங் கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. | [3] |
அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத் தாறேவேறே வானாள்வா ரவரவ ரிடமதெலாம் மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரு மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த விஞ்சிசூழ் மூவாமூதூர் மூதூரா முனிவுசெய்த வனதிடங் கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. | [4] |
திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச் சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப் போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கடிறஞ் சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத் தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங் கைக்கப்பேர் யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக் காடேயோடா வூரேசேர் கழுமல வளநகரே. | [5] |
செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ் சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய் ஒற்றைச்சேர் முற்றற்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக் கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகவிறையைப் பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும் பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய்த வனதிடங் கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக் காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே. | [6] |
பத்திப்பேர் வித்திட்டே பரந்தவைம் புலன்கள்வாய்ப் பாலேபோகா மேகாவாப் பகையறும் வகைநினையா முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய் மூடாவூடா நாலந்தக் கரணமு மொருநெறியாய்ச் சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் சேர்வார்தாமே தானாகச் செயுமவ னுறையுமிடங் கத்திட்டோர் சட்டங்கங் கலந்திலங்கு நற்பொருள் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. | [7] |
செம்பைச்சே ரிஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற் சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன் இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற் பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விர லவணிறுவிட் டம்பொற்பூண் வென்றித்தோ ளழிந்துவந்த னஞ்செய்தாற் காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங் கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக் காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே. | [8] |
பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப் பானாமாறா னாமேயப் பறவையி னுருவுகொள ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ னோதானோதா னஃதுணரா துருவின தடிமுடியுஞ் சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின் றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங் கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. | [9] |
தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத் தாமேபேணா தேநாளுஞ் சமணொடு உழல்பவரும் இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க் கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப் புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும் போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங் கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. | [10] |
கஞ்சத்தே னுண்டிட்டே களித்துவண்டு சண்பகக் கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத் தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள் எஞ்சத்தேய் வின்றிக்கே யிமைத்திசைத்த மைத்தகொண் டேழேயேழே நாலேமூன் றியலிசை யிசையியல்பா வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர் மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதன் மடவரலே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.128  
ஓர் உரு ஆயினை; மான்
பண் - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கல்வியில் சிறந்து விளங்க Audio: https://sivaya.org/audio/1.128 Oor Uru Aayinai.mp3
Audio: https://www.youtube.com/watch?v=rfRTjyK3Eck
ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ டொருவ னாகி நின்றனை 5. ஓரா னீழ லொண்கழ லிரண்டும் முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை இருநதி யரவமோ டொருமதி சூடினை ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் 10 நாற்கான் மான்மறி யைந்தலை யரவம் ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத் திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை ஒருதனு விருகால் வளைய வாங்கி முப்புரத் தோடு நானில மஞ்சக் 15 கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை ஐம்புல னாலா மந்தக் கரணம் முக்குண மிருவளி யொருங்கிய வானோர் ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20 நான்மறை யோதி யைவகை வேள்வி அமைத்தா றங்க முதலெழுத் தோதி வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை 25 இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த தோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை 30 வரபுர மொன்றுணர் சிரபுரத் துறைந்தனை ஒருமலை யெடுத்த விருதிற லரக்கன் விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப் பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை 35 ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும் ஊழியு முணராக் காழி யமர்ந்தனை எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை ஆறு பதமு மைந்தமர் கல்வியும் மறைமுத னான்கும் 40 மூன்று காலமுந் தோன்ற நின்றனை இருமையி னொருமையு மொருமையின் பெருமையும் மறுவிலா மறையோர் கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணிய னறியும் 45 அனைய தன்மையை யாதலி னின்னை நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.130  
புலன் ஐந்தும் பொறி கலங்கி,
பண் - மேகராகக்குறிஞ்சி கவாம்போதி நீலாம்பரி காஞ்சனபௌலி (திருத்தலம் திருவையாறு ; அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=rZnYYLAHzqE
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே. | [1] |
விடலேறு படநாக மரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும் அடலேறொன் றதுவேறி யஞ்சொலீர் பலியென்னு மடிகள்கோயில் கடலேறித் திரைமோதிக் காவிரியி னுடன்வந்து கங்குல்வைகித் திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் கீன்றலைக்குந் திருவையாறே. | [2] |
கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில் கொங்காளப் பொழினுழைந்து கூர்வாயா லிறகுலர்த்திக் கூதனீங்கிச் செங்கானல் வெண்குருகு பைங்கான லிரைதேருந் திருவையாறே. | [3] |
ஊன்பாயு முடைதலைகொண் டூருரின் பலிக்குழல்வா ருமையாள்பங்கர் தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் தழலுருவர் தங்குங்கோயில் மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள்தோறும் தேன்பாய மீன்பாயச் செழுங்கமல மொட்டலருந் திருவையாறே. | [4] |
நீரோடு கூவிளமு நிலாமதியும் வெள்ளெருக்கு நிறைந்தகொன்றைத் தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில் காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித் தேரோடு மரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே. | [5] |
வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறிகாட்டும் விகிர்தனாகிப் பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில் காந்தார மிசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித் தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே. | [6] |
நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில் குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே. | [7] |
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த வரக்கர்கோன் றலைகள்பத்தும் மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில் இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ விளமேதி யிரிந்தங்கோடிச் செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே. | [8] |
மேலோடி விசும்பணவி வியனிலத்தை மிகவகழ்ந்து மிக்குநாடும் மாலோடு நான்முகனு மறியாத வகைநின்றான் மன்னுங்கோயில் கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே. | [9] |
குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா மிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர் எண்டோளர் முக்கண்ண ரெம்மீச ரிறைவரினி தமருங்கோயில் செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே. | [10] |
அன்னமலி பொழில்புடைசூ ழையாற்றெம் பெருமானை யந்தண்காழி மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல் இன்னிசையா லிவைபத்து மிசையுங்கா லீசனடி யேத்துவார்கள் தன்னிசையோ டமருலகிற் றவநெறிசென் றெய்துவார் தாழாதன்றே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
1.136  
மாதர் மடப்பிடியும் மட அன்னமும்
பண் - யாழ்முரி தீரசங்கராபரணம் அடாணா (திருத்தலம் தருமபுரம் ; அருள்தரு பண் - யாழ்மூரி உடனுறை அருள்மிகு திருதருமபுரம் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தர் திருக்கோழம்பம் வைகல் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருத்தருமபுரம் சென்றடைந்தார். தருமபுரம் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த ஊர், ஆதலின் அங்கு வாழும் அவரது சுற்றத்தார் ஞானசம்பந்தரையும், யாழ்ப்பாண ரையும் அன்புடன் வரவேற்றுப் போற்றினர். பாணர், தம் உறவினர் களோடு உரையாடுகையில், அவர்கள் ஞானசம்பந்தரின் திருப்பதிக இசையைப் பாணர் உடனிருந்து யாழில் வாசித்து வருதலினாலேயே திருப்பதிக இசை சிறப்படைகிறது என முகமன் உரை கூறினர். அதைக் கேட்டு மனம் பொறாது ஞானசம்பந்தரை வணங்கித் திருப்பதிக இசை யாழில் அடங்காதது என்பதனை உறவினர்கள் உணருமாறு செய்தருள வேண்டுமெனப் பணிந்தார். ஞானசம்பந்தர் கண்டத்திலும் கருவி யிலும் அடங்காத இசைக் கூறுடைய மாதர் மடப்பிடி என்ற திருப் பதிகத்தை அருளிச் செய்தார். Audio: https://www.youtube.com/watch?v=AjrbP2xSNMw
Audio: https://www.youtube.com/watch?v=cppKI-Gvd4g
மாதர்ம டப்பிடியும் மட வன்னமு மன்னதோர் நடை யுடைம் மலைமக டுணையென மகிழ்வர் பூதவி னப்படைநின் றிசைபாடவு மாடுவ ரவர்படர் சடைந்நெடு முடியதொர் புனலர் வேதமொ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்டிரை யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே தாதவிழ் புன்னை தயங் கும லர்ச்சிறைவண்டறை யெழில் பொழில் குயில் பயில்தருமபு ரம்பதியே. | [1] |
பொங்குந டைப்புகலில் விடை யாமவ ரூர்திவெண் பொடி யணி தடங் கொண்மார் புபூணநூல் புரள மங்குலி டைத்தவழும் மதி சூடுவ ராடுவர் வளங் கிளர் புனலர வம்வைகிய சடையர் சங்குக டற்றிரையா லுதை யுண்டுச ரிந்திரிந் தொசிந் தசைந் திசைந் துசே ரும்வெண்மணற் குவைமேல் தங்குக திர்ம்மணிநித் தில மெல்லிரு ளொல்கநின் றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே. | [2] |
விண்ணுறு மால்வரைபோல் விடை யேறுவ ராறுசூ டுவர் விரி சுரியொளி கொடோடுநின் றிலங்கக் கண்ணுற நின்றொளிருங் கதிர் வெண்மதிக் கண்ணியர் கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப் பெண்ணுற நின்றவர் தம் முரு வம்மயன் மாறொழவ் வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார் தண்ணிதழ் முல்லையொடெண் ணிதழ் மௌவன்ம ருங்கலர் கருங் கழிந் நெருங் குநற் றருமபு ரம்பதியே. | [3] |
வாருறு மென்முலைநன் னுத லேழையொ டாடுவர் வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர் காருற நின்றலரும் மலர்க் கொன்றையங் கண்ணியர் கடுவ் விடை கொடி வெடி கொள்காடுறை பதியர் பாருற விண்ணுலகம் பர வப்படு வோரவர் படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார் தாருறு நல்லரவம் மலர் துன்னிய தாதுதிர் தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே. | [4] |
நேரும வர்க்குணரப் புகி லில்லைநெ டுஞ்சடைக் கடும் புனல் படர்ந் திடம் படுவ்வதொர் நிலையர் பேரும வர்க்கெனையா யிர முன்னைப்பி றப்பிறப் பிலா தவ ருடற் றடர்த் தபெற்றியா ரறிவார் ஆரம வர்க்கழல்வா யதொர் நாகம ழஃகுறவ் வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல் தாரம வர்க்கிமவான் மக ளூர்வது போர்விடை கடிபடு செடி பொழிற் றருமபு ரம்பதியே. | [5] |
கூழையங் கோதைகுலா யவ டம்பிணை புல்கமல் குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய் மாழையொண் கண்மடவா ளையொர் பாகம கிழ்ந்தவர் வலம் மலிபடை விடை கொடிகொடும் மழுவ்வாள் யாழையும் மெள்கிடவே ழிசை வண்டுமு ரன்றினந் துவன் றிமென் சிறஃகறை யுறந்நறவ்வி ரியுந்நல் தாழையு ஞாழலுந்நீ டிய கானலி னள்ளலி சைபுள்ளினந் துயில் பயி றருமபு ரம்பதியே. | [6] |
தேமரு வார்குழலன் னந டைப்பெடை மான்விழித் திருந் திழை பொருந் துமே னிசெங்கதிர் விரியத் தூமரு செஞ்சடையிற் றுதை வெண்மதி துன்றுகொன் றைதொல்புனல் சிரங் கரந் துரித்ததோ லுடையர் காமரு தண்கழிநீ டிய கானல கண்டகங் கடல் லடை கழி யிழி யமுண்டகத் தயலே தாமரை சேர்குவளைப் படு கிற்கழு நீர்மலர் வெறி கமழ் செறிவ் வயற் றருமபு ரம்பதியே. | [7] |
தூவண நீறகலம் பொலி யவ்விரை புல்கமல் குமென் மலர் வரை புரை திரள்புயம் மணிவர் கோவண மும்முழையின் னத ளும்முடை யாடையர் கொலைம் மலி படை யொர்சூ லமேந்திய குழகர் பாவண மாவலறத் தலை பத்துடை யவ்வரக் கனவ் வலி யொர்கவ் வைசெய் தருள்புரி தலைவர் தாவண வேறுடையெம் மடி கட்கிடம் வன்றடங் கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே. | [8] |
வார்மலி மென்முலைமா தொரு பாகம தாகுவர் வளங் கிளர் மதி யர வம்வைகிய சடையர் கூர்மலி சூலமும்வெண் மழு வும்மவர் வெல்படை குனி சிலைதனிம் மலை யதேந்திய குழகர் ஆர்மலி யாழிகொள்செல் வனு மல்லிகொ டாமரைம் மிசை யவன் னடிம் முடி யளவுதா மறியார் தார்மலி கொன்றையலங் கலு கந்தவர் தங்கிடந் தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே. | [9] |
புத்தர்க டத்துவர்மொய்த் துறி புல்கிய கையர்பொய்ம் மொழிந் தழி வில்பெற் றியுற் றநற்றவர் புலவோர் பத்தர்க ளத்தவமெய்ப் பயனாக வுகந்தவர் நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர் முத்தன வெண்ணகையொண் மலை மாதுமை பொன்னணி புணர்ம் முலை யிணை துணை யணைவதும் பிரியார் தத்தரு வித்திரளுந் திய மால்கட லோதம்வந் தடர்ந் திடுந் தடம்பொழிற் றருமபு ரம்பதியே. | [10] |
பொன்னெடு நன்மணிமா ளிகை சூழ்விழ வம்மலீ பொரூஉம் புன றிரூஉ வமர் புகல்லியென் றுலகில் தன்னொடு நேர்பிறவில் பதி ஞானசம் பந்தனஃ துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபுரம் பதியைப் பின்னெடு வார்சடையிற் பிறை யும்மர வும்முடை யவன் பிணை துணை கழல் கள்பேணுத லுரியார் இன்னெடு நன்னுலகெய் துவ ரெய்திய போகமும் முறு வர்கள் ளிடர் பிணி துயரணைவ் விலரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.016  
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று
பண் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா (திருத்தலம் எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) ; அருள்தரு யாழ்மொழியம்மை உடனுறை அருள்மிகு மணவாளநாயகர் திருவடிகள் போற்றி )
திருமணம் கைகூட ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=3iP3choR434
அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. | [1] |
விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய நெதியானை நீள்சடை மேனிகழ் வித்தவான் மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே. | [2] |
எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய இப்பாலா யெனையு மாள வுரியானை வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே. | [3] |
விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம் உடையானை யூழிதோ றூழி யுளதாய படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே. | [4] |
எறியார்பூங் கொன்றையி னோடு மிளமத்தம் வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச் செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே. | [5] |
மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம் பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி இழியாமை யேத்தவல் லார்க்கெய்து மின்பமே. | [6] |
எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக் கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப் பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே. | [7] |
எடுத்தானை யெழின்முடி யெட்டு மிரண்டுந்தோள் கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை மடுத்தார வண்டிசை பாடு மணஞ்சேரி பிடித்தாரப் பேணவல் லார்பெரி யோர்களே. | [8] |
சொல்லானைத் தோற்றங்கண் டானு நெடுமாலும் கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி எல்லாமா மெம்பெரு மான்கழ லேத்துமே. | [9] |
சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர் சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே. | [10] |
கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த தண்ணார்சீர் ஞானசம் பந்தன் றமிழ்மாலை மண்ணாரு மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி பண்ணாரப் பாடவல்லார்க் கில்லை பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.018  
சடையாய்! எனுமால்; சரண் நீ!
பண் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா (திருத்தலம் திருமருகல் ; அருள்தரு வண்டுவார்குழலி உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணர் திருவடிகள் போற்றி )
வைப்பூரிலுள்ள தாமன் என்போன் என் தந்தை. அவனுக்கு மகளிர் எழுவர். அரவு தீண்டப்பட்டவன் என் தாய்மாமன். என் தந்தை தன் மகளிருள் மூத்தவளை மாமனுக்குத் தருவதாகக் கூறிப் பொரு ளாசையால் பிறன் ஒருவனுக்கு மணம் செய்வித்தார், அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஏழாவது பெண்ணாகிய நான் என்னையும் இவ்வாறே வேறு ஒருவருக்கு மணம் செய்வித்துத் தன் மருகனைத் தந்தை தளர்வுறச் செய்வார் என்ற எண்ணத்தால் உறவினர்க்கும் தெரியாமல் இவரோடு போந்து மணம் முடித்து வாழ எண்ணினேன். வழியிடையே இவ்வூரில் அரவு தீண்டி இவரும் இறந்தார். கடல் நடுவே கலம் கவிழ்ந்த நாய்கன் போலத் துன்பத்துக்கு ஆளானேன். இந்நிலையில் என் சுற்றத்தார் போல என்பால் பரிவு காட்டி அருள் செய்கின்றீர்கள்! என்று கூறிய பெண்ணின் ஆற்றாமையைக் கேட்டுத் திருவுளம் இரங்கிய ஞான சம்பந்தர் மருகற் பெருமான் ஆலயம் சென்று பணிந்து உன் பெயர் கூறி ஒள்ளிழையாள் உளம் மெலிந்து வருந்துதல் அருட் கடலாகிய உனக்கு அழகோ என முறையிடும் நிலையில் சடையாயெனுமால் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞான சம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
திருமணம் விரைவில் நிறைவேற ஓத வேண்டிய பதிகம். Audio: https://sivaya.org/audio/2.018 sadaiyai enumaal.mp3
Audio: https://www.youtube.com/watch?v=f_ZJk-kJhbA
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால்வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே. | [1] |
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் முந்தா யெனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே. | [2] |
அறையார் கழலும் அழல்வா யரவும் பிறையார் சடையும் உடையாய் பெரிய மறையார் மருகல் மகிழ்வா யிவளை இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே. | [3] |
ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம் பலிநீ திரிவாய் பழியில் புகழாய் மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே. | [4] |
துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன மணிநீ லகண்டம் உடையாய் மருகல் கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன் அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே. | [5] |
பலரும் பரவப் படுவாய் சடைமேல் மலரும் பிறையொன் றுடையாய் மருகல் புலருந் தனையுந் துயிலாள் புடைபோந் தலரும் படுமோ அடியா ளிவளே. | [6] |
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவா ளுடையாய் மருகற் பெருமான் தொழுவா ளிவளைத் துயராக் கினையே. | [7] |
இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத் துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய் வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான் அலங்கல் இவளை அலராக் கினையே. | [8] |
எரியார் சடையும் அடியும் இருவர் தெரியா ததொர்தீத் திரளா யவனே மரியார் பிரியா மருகற் பெருமான் அரியாள் இவளை அயர்வாக் கினையே. | [9] |
அறிவில் சமணும் அலர்சாக் கியரும் நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார் மறியேந் துகையாய் மருகற் பெருமான் நெறியார் குழலி நிறைநீக் கினையே. | [10] |
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான் உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால் இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார் வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.031  
சுற்றமொடு பற்று அவை துயக்குஅற
பண் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா (திருத்தலம் கருப்பறியலூர் (தலைஞாயிறு) ; அருள்தரு கோல்வளையம்மை உடனுறை அருள்மிகு குற்றம்பொறுத்தநாதர் திருவடிகள் போற்றி )
கல்வியில் திறம்பெற்று உயர்வதற்கு ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=oBVEIdDfMwg
சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள் மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக் கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. | [1] |
வண்டணைசெய் கொன்றையது வார்சடைகண்மேலே கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும் விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவொ ரம்பால் கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே | [2] |
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆகப் போதினொடு போது, மலர், கொண்டு புனைகின்ற நாதன் என, நள் இருள் முன் ஆடு, குழை தாழும் காதவன் இருப்பது கருப்பறியலூரே. | [3] |
மடம் படு மலைக்குஇறைவன்மங்கை ஒருபங்கன், உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத் தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒருகாலால் கடந்தவன், இருப்பது கருப்பறியலூரே. | [4] |
ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும் கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே. | [5] |
விண்ணவர்கள்வெற்புஅரசு பெற்ற மகள், மெய்த் தேன் பண் அமரும் மென்மொழியினாளை, அணைவிப்பான் எண்ணி வரு காமன் உடல் வேவ, எரி காலும் கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே. | [6] |
ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர் சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத் தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக் காதினன் இருப்பது கருப்பறியலூரே. | [7] |
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப் பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கைநகர் வேந்தற்கு ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ, மேல்நாள் காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே. | [8] |
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை கரந்து, ஒர் சடைமேல் மிசை உகந்து அவளை வைத்து, நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே. | [9] |
அற்றம் மறையா அமணர், ஆதம் இலி புத்தர், சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு, குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில் கற்றென இருப்பது கருப்பறியலூரே. | [10] |
நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன், கலந்தவர் கருப்பறியல் மேய கடவுளைப் பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று, வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.033  
ஏடு மலி கொன்றை, அரவு,
பண் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா (திருத்தலம் திருநள்ளாறு ; அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=cwZC0zEYn14
ஏடுமலி கொன்றையர விந்துவிள வன்னி மாடவல செஞ்சடையெ மைந்தனிட மென்பர் கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை நாடுமலி வாசமது வீசியநள் ளாறே. | [1] |
விண்ணியல் பிறைப்பிள வறைப்புனன் முடித்த புண்ணிய னிருக்குமிட மென்பர்புவி தன்மேல் பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள் நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே. | [2] |
விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத் துளங்கொள விருத்திய வொருத்தனிட மென்பர் வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே. | [3] |
கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச் செக்கரவர் சேருமிட மென்பர்தட மூழ்கிப் புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரு நண்ணி நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே. | [4] |
நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார் வஞ்சம தறுத்தருளு மற்றவனை வானோர் அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த நஞ்சமுது செய்தவனி ருப்பிடநள் ளாறே. | [5] |
பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங் காலனுடன் மாளமு னுதைத்தவர னூராம் கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர் நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே. | [6] |
நீதியர் நெடுந்தகையர் நீண்மலையர் பாவை பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும் ஓதியர னாமமு முணர்த்திடுநள் ளாறே. | [7] |
கடுத்துவ லரக்கன்மு னெருக்கிவரை தன்னை எடுத்தவன் முடித்தலைகள் பத்துமிகு தோளும் அடர்த்தவர் தமக்கிடம தென்பர்அளி பாட நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே. | [8] |
உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம் பயந்தவ னினைப்பரிய பண்பனிட மென்பர் வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும் நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே. | [9] |
சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும் பந்தனை யறுத்தருள நின்றபர மன்னூர் மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச் சந்தம்விர விப்பொழின் முழங்கியநள் ளாறே. | [10] |
ஆடலர வார்சடைய னாயிழைதன் னோடும் நாடுமலி வெய்திட விருந்தவனள் ளாற்றை மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல் பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.037  
சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்
பண் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழி மிழலையிலிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு போற்றத் திருமறைக் காடு அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகினார் கள். வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக் கதவுகள் திறக்கப்படாதிருத்தலையும் மக்கள் வேறோர் பக்கத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருதலையும் கண்ட ஞான சம்பந்தர் வேதவனப் பெருமானை உரிய வாயில் வழியே சென்று வழிபட வேண்டுமெனத் திருவுளத்தெண்ணி அப்பரைப் பார்த்து இக்கதவுகள் திறக்கத் தாங்கள் திருப்பதிகம் பாடியருளுக என வேண்டினார். அப்பர் பண்ணினேர் மொழியாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாட அப்பதிகப் பொருட் சுவையில் ஈடுபட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் ஆலயம் சென்று மறைக்காட்டுறையும் மணாளனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமென வேண்டினார். ஞானசம்பந்தர் சதுரம் மறை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார். முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொண்டது. ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைந்தனர். Audio: https://sivaya.org/audio/2.037 chathuram maraithaan.mp3
Audio: https://www.youtube.com/watch?v=_NNuFxcpUok
சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன் கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே. | [1] |
சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும் வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா மங்கை யுமைபா கமுமா கவிதென்கொல் கங்கை சடைமே லடைவித் தகருத்தே. | [2] |
குரவங் குருக்கத் திகள்புன் னைகண்ஞாழல் மருவும் பொழில்சூழ் மறைக் காட் டுறைமைந்தா சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல் அரவம் மதியோ டடைவித் தலழகே. | [3] |
படர்செம் பவளத் தொடுபன் மலர்முத்தம் மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா உடலம் முமைபங் கமதாகியு மென்கொல் கடனஞ் சமுதா வதுவுண் டகருத்தே. | [4] |
வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா ஏனோர் தொழுதேத் தவிருந் தநீயென்கொல் கானார் கடுவே டுவனா னகருத்தே. | [5] |
பலகா லங்கள்வே தங்கள்பா தங்கள்போற்றி மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல் தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே. | [6] |
வேலா வலயத் தயலே மிளிர்வெய்தும் சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா மாலோ டயனிந் திரனஞ் சமுனென்கொல் காலார் சிலைக்கா மனைக்காய்ந் தகருத்தே. | [7] |
கலங்கொள் கடலோ தமுலாவு கரைமேல் வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா இலங்கை யுடையா னடர்ப்பட் டிடரெய்த அலங்கல் விரலூன் றியருள் செய்தவாறே. | [8] |
கோனென் றுபல்கோ டியுருத் திரர்போற்றும் தேனம் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா ஏனங் கழுகா னவருன் னைமுனென்கொல் வானந் தலமண் டியுங்கண் டிலாவாறே. | [9] |
வேதம் பலவோ மம்வியந் தடிபோற்ற ஓதம் முலவும் மறைக்காட் டிலுறைவாய் ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல் ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே. | [10] |
காழிந் நகரான் கலைஞான சம்பந்தன் வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார் வாழி யுலகோர் தொழவா னடைவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.039  
ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
பண் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா (திருத்தலம் சீர்காழி ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருக்ஷேத்திரக் கோவை Audio: https://www.youtube.com/watch?v=5rJFwc-Bt_0
ஆரூர்தில்லை யம்பலம் வல்லந்நல்லம் வடகச்சியு மச்சிறு பாக்கநல்ல கூரூர்குட வாயில் குடந்தைவெண்ணி கடல்சூழ்கழிப் பாலைதென் கோடிபீடார் நீரூர்வய னின்றியூர் குன்றியூருங் குருகாவையூர் நாரையூர் நீடுகானப் பேரூர்நன் னீள்வய னெய்த்தானமும் பிதற்றாய்பிறை சூடிதன் பேரிடமே. | [1] |
அண்ணாமலை யீங்கோயு மத்திமுத்தா றகலாமுது குன்றங் கொடுங்குன்றமுங் கண்ணார்கழுக் குன்றங் கயிலை கோணம் பயில்கற்குடி காளத்தி வாட்போக்கியும் பண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணிநின்றே எண்ணாயிர வும்பகலு மிடும்பைக்கட னீந்தலாங் காரணமே. | [2] |
அட்டானமென் றோதிய நாலிரண்டு மழகன்னுறை காவனைத் துந்துறைகள் எட்டாந்திரு மூர்த்தியின் காடொன்பதுங் குளமூன்றுங் களமஞ்சும் பாடிநான்கும் மட்டார்குழ லாண்மலை மங்கைபங்கன் மதிக்கும்மிட மாகிய பாழிமூன்றும் சிட்டானவன் பாசூரென் றேவிரும்பா யரும்பாவங்க ளாயின தேய்ந்தறவே. | [3] |
அறப்பள்ளி யகத்தியான் பள்ளிவெள்ளைப் பொடிப்பூசி ஆறணிவானமர் காட்டுப்பள்ளி சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப் பிறப்பில்லவன் பள்ளிவெள் ளச்சடையான் விரும்பும்மிடைப் பள்ளிவண் சக்கரமால் உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி யுணராய்மட நெஞ்சமே யுன்னிநின்றே. | [4] |
இப்பாடல் கிடைக்கவில்லை. ஆறைவட மாகற லம்பரையா றணியார்பெரு வேளுர் விளமர்தெங்கூர் சேறைதுலை புகலூ ரகலா திவைகாதலித் தானவன் சேர்பதியே | [5] |
மனவஞ்சர்மற் றோடமுன் மாதராரு மதிகூர் திருக்கூடலி லாலவாயும் இனவஞ்சொ லிலாவிடை மாமருது மிரும்பைப்பதி மாகாளம் வெற்றியூரும் கனமஞ்சின மால்விடை யான்விரும்புங் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர் தனமென்சொலிற் றஞ்சமென் றேநினைமின் றவமாமல மாயின தானறுமே. | [6] |
மாட்டூர்மடப் பாச்சி லாச்சிராம மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி காட்டூர்கடம் பூர்படம் பக்கங்கொட்டுங் கடலொற்றியூர் மற்றுறை யூரவையும் கோட்டூர்திரு வாமாத்தூர் கோழம்பமுங் கொடுங்கோ வலூர்திருக் குணவாயில் ******** | [7] |
* * குலாவுதிங்கட்சடையான் குளிரும் பரிதிநியமம் போற்றூரடி யார்வழி பாடொழியாத்தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் காற்றூர்வரை யன்றெடுத் தான்முடிதோ ணெரித்தானுறை கோயிலென்றென் றுநீகருதே. | [8] |
நெற்குன்றமோத் தூர்நிறை நீர்மருக னெடுவாயில் குறும்பலா நீடுதிரு நற்குன்றம் வலம்புரந் நாகேச்சுர நளிர்சோலையுஞ் சேனைமா காளம்வாய்மூர் கற்குன்றமொன் றேந்தி மழைதடுத்த கடல்வண்ணனு மாமல ரோனுங்காணாச் சொற்கென்றுந் தொலைவிலா தானுறையுங் குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே. | [9] |
குத்தங்குடி வேதி குடிபுனல்சூழ் குருந்தங்குடி தேவன் குடிமருவும் அத்தங்குடி தண்டிரு வண்குடியு மலம்புஞ்சலந் தன்சடை வைத்துகந்த நித்தன்னிம லனுமை யோடுங்கூட நெடுங்கால முறைவிட மென்று சொல்லாப் புத்தர்புறங் கூறிய புன்சமணர் நெடும்பொய் களைவிட்டு நினைந்துய்மினே. | [10] |
அம்மானை யருந்தவ மாகிநின்ற வமரர்பெரு மான்பதியான வுன்னிக் கொய்ம்மாமலர்ச் சோலை குலாவுகொச்சைக் கிறைவன் சிவஞானசம் பந்தன் சொன்ன இம்மாலையீ ரைந்து மிருநிலத்தி லிரவும்பக லுந்நினைந் தேத்திநின்று விம்மாவெரு வாவிரும்பும் மடியார் விதியார் பிரியார் சிவன்சேவடிக்கே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.040  
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
பண் - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=70vp6cYffLI
Audio: https://www.youtube.com/watch?v=os6HVe6Y7So
எம்பிரா னெனக்கமுதம் ஆவானுந் தன்னடைந்தார் தம்பிரா னாவானுந் தழலேந்து கையானுங் கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன் வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே. | [1] |
தாமென்றும் மனந்தளராத் தகுதியரா யுலகத்துக் காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான் ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே. | [2] |
நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் றிருவடியே உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல் அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை யெப்போதும் பன்னஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே. | [3] |
சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங் கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந் தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை நாநாளு நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே. | [4] |
கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி பெண்ணிதமா முருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான் விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி எண்ணுதலாஞ் செல்வத்தை யியல்பாக வறிந்தோமே. | [5] |
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க் கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமா னெருதேறிக் கொங்கேயு மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ் சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் றன்மைகளே. | [6] |
சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன் அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை யடிபணிந்தால் நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே. | [7] |
எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள் நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான் உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத் தரித்தமன மெப்போதும் பெறுவார்தாந் தக்காரே. | [8] |
கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய் அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான் றெரியாதா னிருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர உரியார்தா மேழுலகும் உடனாள வுரியாரே. | [9] |
உடையிலார் சீவரத்தார் தன்பெருமை யுணர்வரியான் முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன் பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ் சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே. | [10] |
தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக் கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார் பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.047  
மட்டு இட்ட புன்னை அம்கானல்
பண் - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி (திருத்தலம் திருமயிலை (மயிலாப்பூர்) ; அருள்தரு கற்பகவல்லியம்மை உடனுறை அருள்மிகு கபாலீசுவரர் திருவடிகள் போற்றி )
மயிலாப்பூரில் வணிகர் குலத்தில் எல்லையில் செல்வம் உடையவராய் செம்மையே புரிமனத்தினராய் வணிகர் குலத்தில் சிவநேசன் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், அறிந்த பெரியவர். அவர் ஞானசம்பந்தரது பெருமைகளைக் கேள்வியுற்று அவர்பால் எல்லை யில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு ஒரு பெண் மகவு இருந் தாள். அழகிற் சிறந்த அப்பெண்ணுக்குப் பூம்பாவை எனப் பெய ரிட்டார். அப்பெண்ணும் மணப்பருவம் எய்திய நிலையில் இருந்தாள். ஞானசம்பந்தர் மதுரை சென்று பரசமயம் நிராகரித்துப் பாண்டி நாட்டில் சைவ சமயத்தை நிலைநிறுத்தி வந்த செய்தி கேட்டு என்னையும், என்மகளையும் என் செல்வத்தையும் அவருக்கே உடமையாக்கினேன்? என மொழிந்தார். இந்நிலையில் ஞானசம்பந் தருக்கு உரியள் என, சிவநேசர் மொழிந்திருந்த பூம்பாவை பூஞ்சோலை யில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி இறந்தாள். சிவநேசர் மிகவும் வருந்தியவராய் அப்பெண்ணை உயிருடன் ஒப்புவிக்கும் புண்ணியம் அமையவில்லை. ஆயினும் அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதை யேனும் ஒப்புவிப்போம் என்று பேணிவந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூர் வழிபாடு முடித்து மயிலாப் பூருக்கு எழுந்தருளும் செய்தி கேட்டு வரவேற்க எதிரே வந்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார் கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியை யும் அவரிடம் கூறினர். ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி வழிபாடாற்றிப் புறத்தே போந்தவர் சிவநேசரை அழைத்து அவர் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன்னே வைக்கச் செய்து மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப் பதிகமாகிய மட்டிட்ட புன்னை எனத் திருப்பதிகம் தொடங்கிப் பத்தாவது பாடல் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உலகவர் வியக்க உயிர் பெற்றுக் குடம் உடைய வெளிப்பட்டு ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமென வேண்டினார்.
பலவகை உடற்பிணிகள் அகல ஓத வேண்டிய பதிகம் Audio: https://sivaya.org/audio/2.047 matitita punnai.mp3
Audio: https://www.youtube.com/watch?v=TW2gdkaWAzQ
மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். | [1] |
மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான் ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். | [2] |
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். | [3] |
ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக் கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான் ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். | [4] |
மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான் நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். | [5] |
மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான் அடலானே றூரு மடிக ளடிபரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். | [6] |
மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான் பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். | [7] |
தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான் கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான் பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள் கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய். | [8] |
நற்றா மரைமலர்மே னான்முகனு நாரணனும் முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக் கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான் பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய். | [9] |
உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும் இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில் கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன் பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். | [10] |
கானமர் சோலைக் கபாலீச் சரமமர்ந்தான் தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான் ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார் வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.048  
கண் காட்டும் நுதலானும், கனல்
பண் - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி (திருத்தலம் திருவெண்காடு ; அருள்தரு பிரமவித்தியாநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுவேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
மக்கட் செல்வம் வாய்க்க, வாதத்திறமை, எழுத்தாற்றல், தத்துவஞானத் தெளிவைப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=BIiW3xaWvB0
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே. | [1] |
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. | [2] |
மண்ணொடுநீ ரனல்காலோ டாகாய மதியிரவி எண்ணில்வரு மியமான னிகபரமு மெண்டிசையும் பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன் விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே. | [3] |
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின் மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக் கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே. | [4] |
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் றிருவடிக்கீழ் மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன் மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் றூதர் ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே. | [5] |
தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன் ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தா னுறைகோயில் பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே. | [6] |
சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும் முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே. | [7] |
பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த உன்மத்த னுரநெரித்தன் றருள்செய்தா னுறைகோயில் கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடன் முழங்க விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே. | [8] |
கள்ளார்செங் கமலத்தான் கடற்கிடந்தா னெனவிவர்கள் ஒள்ளாண்மை கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான் வெள்ளானை தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென் றுள்ளாடி யுருகாதா ருணர்வுடைமை யுணரோமே. | [9] |
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும் பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின் வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென் றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே. | [10] |
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் றமிழ்ஞான சம்பந்தன் விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப் பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார் மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.066  
மந்திரம் ஆவது நீறு; வானவர்
பண் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
சமணர்கள் அச்சமுற்றார்கள். ஆயினும் அதனை மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி உங்கள் சமயக் கொள்கைகளைக் கூறுங்கள் எனக்கூறினர். அரசியார் கொடிய சமணர்கள் நடுவில் இப் பாலகரை நாம் அழைத்தது தவறோ என வருந்திச் சமணர்களை நோக்கி மன்னனின் நோயை முதலில் தணிக்க முயலுங்கள். நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணைநிற்க வாதில் வெல்வோம் என்றார். சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை நாங்கள் குணப்படுத்துகிறோம் என்று பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் நோய் மேலும் கூடியது. ஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திரு நீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப் பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது. மன்னன் எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து யான் உய்ந்தேன் என்று போற்றினான்.
வெப்பம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், உடல் சூடு நீங்க ஓதவேண்டிய பதிகம் Audio: https://sivaya.org/audio/2.066 மந்திரம் ஆவது நீறு.mp3
Audio: https://www.youtube.com/watch?v=n2Uf5Es4A10
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே. | [1] |
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே. | [2] |
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே. | [3] |
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே. | [4] |
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே. | [5] |
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே. | [6] |
எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே. | [7] |
இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே. | [8] |
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே. | [9] |
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே. | [10] |
ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.083  
நீல நல் மாமிடற்றன்; இறைவன்;
பண் - பியந்தைக்காந்தாரம் கரகரப்பிரியா நவரோசு கன்னடகௌலா (திருத்தலம் திருக்கொச்சைவயம் (சீர்காழி) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://sivaya.org/audio/2.083 NeelaMaaMidatran.mp3
Audio: https://www.youtube.com/watch?v=4-qqCFEZS0E
நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில் சேலன கண்ணிவண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான் வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை விழவோசை வேத வொலியின் சாலநல் வேலையோசை தருமாட வீதி கொடியாடு கொச்சை வயமே. | [1] |
விடையுடை யப்பனொப்பி னடமாட வல்ல விகிர்தத் துருக்கொள் விமலன் சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள் தகவைத்த சோதி பதிதான் மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து கமலத்து வைகும் வயல்சூழ் கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் வளர்கின்ற கொச்சை வயமே. | [2] |
படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை களைவிக்கும் எங்கள் பரமன் இடமுடை வெண்தலைக்கை பலிகொள்ளும்இன்பன் இடமாய வேர்கொள் பதிதான் நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடு நளிர்சோலை கோலு கனகக் குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல மறையோது கொச்சை வயமே. | [3] |
எண்டிசை பாலரெங்கு மிகலிப் புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகிப் பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு பணிவுற்ற பாதர் பதிதான் மண்டிய வண்டன்மிண்டி வருநீர பொன்னி வயல்பாய வாளை குழுமிக் குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன வளர்கின்ற கொச்சை வயமே. | [4] |
பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர னொடுதோழ மைக்கொள் பகவன் இனியன வல்லவற்றை யினிதாக நல்கும் இறைவன் னிடங்கொள் பதிதான் முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் வளர் தூம மோடி யணவிக் குனிமதி மூடிநீடு முயர்வான் மறைத்து நிறைகின்ற கொச்சை வயமே. | [5] |
புலியதள் கோவணங்க ளுடையாடை யாக வுடையா னினைக்கு மளவில் நலிதரு முப்புரங்க ளெரிசெய்த நாத னலமா விருந்த நகர்தான் கலிகெட வந்தணாளர் கலைமேவு சிந்தை யுடையார் நிறைந்து வளரப் பொலிதரு மண்டபங்க ளுயர்மாட நீடு வரைமேவு கொச்சை வயமே. | [6] |
வண்டமர் பங்கயத்து வளர்வானும் வைய முழுதுண்ட மாலு மிகலிக் கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்து மறியாத சோதி பதிதான் நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து விரைதேர போது மதுவிற் புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து வயன்மேவு கொச்சை வயமே. | [8] |
கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்ட ரிடுசீவ ரத்தி னுடையார் மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல விகிர்தத் துருக்கொள் விமலன் பையுடை நாகவாயில் எயிறார மிக்க குரவம் பயின்று மலரச் செய்யினில் நீலமொட்டு விரியக்கமழ்ந்து மணநாறு கொச்சை வயமே. | [9] |
இறைவனை ஒப்பிலாத வொளிமேனி யானை யுலகங்க ளேழு முடனே மறைதரு வெள்ளமேவி வளர்கோயின் மன்னி யினிதா விருந்த மணியைக் குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த தமிழ்மாலை பாடுமவர் போய் அறைகழ லீசனாளு நகர்மேவி யென்றும் அழகா விருப்ப தறிவே | [10] |
இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள் ஏழும் உடனே மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை, குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ்மாலை பாடுமவர், போய், அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா இருப்பது அறிவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.085  
வேய் உறு தோளி பங்கன்,
பண் - பியந்தைக்காந்தாரம் கரகரப்பிரியா நவரோசு கன்னடகௌலா (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந் தது. சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க் கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத் தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது? எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார்.
சனி, இராகு, கேது பெயர்ச்சி, கோள்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ ஓத வேண்டிய பதிகம். Audio: https://www.youtube.com/watch?v=oF4wlCt8je0
வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. | [1] |
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. | [2] |
உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. | [3] |
மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே | [4] |
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும் அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே | [5] |
வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே | [6] |
செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே | [7] |
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே | [8] |
பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே | [9] |
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே | [10] |
தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.090  
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு
பண் - பியந்தைக்காந்தாரம் கரகரப்பிரியா நவரோசு கன்னடகௌலா (திருத்தலம் திருநெல்வாயில் அரத்துறை ; அருள்தரு ஆனந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு அரத்துறைநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://sivaya.org/audio/2.090 EnthaiIsan EmPerumaan.mp3
Audio: https://www.youtube.com/watch?v=ClMAJFSSalA
Audio: https://www.youtube.com/watch?v=uu81f7lC1h8
எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச் சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால் கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல் அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. | [1] |
ஈர வார்சடை தன்மேல் இளம்பிறை யணிந்தவெம் பெருமான் சீருஞ் செல்வமு மேத்தாச் சிதடர்கள் தொழச்செல்வ தன்றால் வாரி மாமல ருந்தி வருபுன னிவாமல்கு கரைமேல் ஆருஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. | [2] |
பிணி கலந்தபுன் சடைமேற் பிறையணி சிவனெனப் பேணிப் பணி கலந்துசெய் யாத பாவிகள் தொழச்செல்வ தன்றால் மணி கலந்துபொன் னுந்தி வருபுன னிவாமல்கு கரைமேல் அணி கலந்தநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. | [3] |
துன்னவாடையொன் றுடுத்துத் தூயவெண் ணீற்றின ராகி உன்னி நைபவர்க் கல்லா ல் ஒன்றுங்கை கூடுவ தன்றால் பொன்னு மாமணி யுந்திப் பொருபுன னிவாமல்கு கரைமேல் அன்ன மாருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே | [4] |
வெருகு ரிஞ்சுவெங் காட்டில் ஆடிய விமலனென் றுள்கி உருகி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றால் முருகு ரிஞ்சுபூஞ் சோலை மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந் தருகு ரிஞ்சுநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. | [5] |
உரவு நீர்சடைக் கரந்த வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப் பரவி நைபவர்க் கல்லாற் பரிந்துகை கூடுவ தன்றால் குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல் அரவ மாருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. | [6] |
நீல மாமணி மிடற்று நீறணி சிவனெனப் பேணும் சீல மாந்தர்கட் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால் கோல மாமல ருந்திக் குளிர்புன னிவாமல்கு கரைமேல் ஆலுஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. | [7] |
செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி யிராவண னலற அழுந்த வூன்றிய விரலான் போற்றியென் பார்க்கல்ல தருளான் கொழுங்க னிசுமந் துந்திக் குளிர்புன னிவாமல்கு கரைமேல் அழுந்துஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. | [8] |
நுணங்கு நூலயன் மாலும் இருவரும் நோக்கரி யானை வணங்கி நைபவர்க் கல்லால் வந்துகை கூடுவ தன்றால் மணங்க மழ்ந்துபொன் னுந்தி வருபுன னிவாமல்கு கரைமேல் அணங்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. | [9] |
சாக்கி யப்படு வாருஞ் சமண்படு வார்களும் மற்றும் பாக்கி யப்பட கில்லாப் பாவிகள் தொழச்செல்வ தன்றால் பூக்க மழ்ந்துபொன் னுந்திப் பொருபுன னிவாமல்கு கரைமேல் ஆர்க்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. | [10] |
கறையி னார்பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன் அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள்தம் அருளை முறைமை யாற்சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப் பறையு மையுற வில்லை பாட்டிவை பத்தும்வல் லார்க்கே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.098  
வரைத்தலைப் பசும் பொனோடு அருங்
பண் - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் (திருத்தலம் திருத்துருத்தி ; அருள்தரு முகிழாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வேதேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=wC9RryMFjDE
வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்க ளுந்திவந் திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக் கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய் உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே. | [1] |
அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளம் தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக் கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம் எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகில் நல்லமே. | [2] |
கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச் சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய் பொங்கிலங்கு பூணநூ லுருத்திரா துருத்திபுக் கெங்குநின் னிடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ. | [3] |
கருத்தினாலொர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம் அருத்தியாற்றம் மல்லல்சொல்லி யையமேற்ப தன்றியும் ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டு யோகியாய் இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாய மென்பதே. | [4] |
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமா றிலாதவென்னை மையல்செய்திம் மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படு முடம்புவிட் டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே. | [5] |
வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில் துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய் மயிற்கெதிர்ந் தணங்குசாயன் மாதொர்பாக மாகமூ வெயிற்கெதிர்ந் தொரம்பினால் எரித்தவில்லி யல்லையே. | [6] |
கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர் துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய் அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல் மணிப்படும்பை நாகநீ மகிழ்ந்தவண்ண லல்லையே. | [7] |
சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன் இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக வெண்ணினாய் கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை அடற்பட வடுக்கலில் லடர்த்தவண்ண லல்லையே. | [8] |
களங்குளிர்ந் திலங்குபோது காதலானு மாலுமாய் வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார் துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே. | [9] |
புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினம் துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம் பித்தர்பித்த னைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே. | [10] |
கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ் சுற்றுமுற்று மாயினா னவன்பகர்ந்த சொற்களால் பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே குற்றமுற்று மின்மையிற் குணங்கள்வந்து கூடுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.099  
இன்று நன்று, நாளை நன்று
பண் - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=CrD_aLf3ntE
இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற விச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே. | [1] |
அல்லன்மிக்க வாழ்க்கையை யாதரித் திராதுநீர் நல்லதோர் நெறியினை நாடுதுந் நடம்மினோ வில்லையன்ன வாணுதல் வெள்வளையொர் பாகமாங் கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே. | [2] |
துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர் தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின் அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல் கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே | [3] |
பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை உண்டுமக் குரைப்பனா னொல்லை நீ ரெழுமினோ மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதொர் பாகமாக் கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே. | [4] |
முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா தின்னநீரி டும்பையின் மூழ்கிறீ ரெழும்மினோ பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட வாடலான் கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே. | [5] |
ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப் பாவமெத் தனையுநீர் செய்தொரு பயனிலைக் காவன்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக் கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே. | [6] |
ஏணழிந்த வாழ்க்கையை யின்பமென் றிருந்துநீர் மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக் கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே. | [7] |
மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர் பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ வெற்றிகொள் தசமுகன் விறல்கெட விருந்ததோர் குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே. | [8] |
மங்குநோ யுறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன் செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர் கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே. | [9] |
தட்டொடு தழைமயிற் பீலிகொள் சமணரும் பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை விட்டபுன் சடையினான் மேதகும் முழவொடும் கொட்டமைந்த வாடலான் கோடிகாவு சேர்மினே. | [10] |
கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம் பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.106  
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே!
பண் - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் (திருத்தலம் திருவலஞ்சுழி ; அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு சித்தீசநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://sivaya.org/audio/2.106 Enna Punniyam.mp3
Audio: https://www.youtube.com/watch?v=cMWzX_dVUv0
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே. | [1] |
விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை விரிகடல் வருநஞ்சம் உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய விறைவனை யுலகத்தில் வண்டு வாழ்குழன் மங்கையொர் பங்கனை வலஞ்சுழி யிடமாகக் கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ டினிதிருந் தமையாலே. | [2] |
திருந்த லார்புரந் தீயெழச் செறுவன விறலின்கண் அடியாரைப் பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணிநோய்க்கு மருந்து மாவன மந்திர மாவன வலஞ்சுழி யிடமாக இருந்த நாயக னிமையவ ரேத்திய விணையடித் தலந்தானே. | [3] |
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கன் றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் தினிதருள் பெருமானார் மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி யிடமகிழ்ந் தருங்கானத் தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய வற்புத மறியோமே. | [4] |
மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலா மெரியுரு வொருபாகம் பெண்ண ராணெனத் தெரிவரும் வடிவினர் பெருங்கடற் பவளம்போல் வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம்புக்க எண்ண ராகிலு மெனைப்பல வியம்புவ ரிணையடி தொழுவாரே. | [5] |
ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் மேனியர் மடமாதர் இருவ ராதரிப் பார்பல பூதமும் பேய்களு மடையாளம் அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் தகந்தொறும் பலிக்கென்று வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே வரிவளை கவர்ந்தாரே. | [6] |
குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங் குலவிய நெய்த்தானம் என்றிவ் வூர்களி லோமென்று மியம்புவ ரிமையவர் பணிகேட்பார் அன்றி யூர்தமக் குள்ளன வறிகிலோம் வலஞ்சுழி யரனார்பால் சென்ற வூர்தனிற் றலைப்பட லாமென்று சேயிழை தளர்வாமே. | [7] |
குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி தோளிரு பதுமூன்றி மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் வலஞ்சுழி யெம்மானைப் பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே. | [8] |
அழல தோம்பிய வலர்மிசை யண்ணலு மரவணைத் துயின்றானும் கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் மாண்பமர் தடக்கையில் மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி வலங்கொடு பாதத்தால் சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு துன்பங்கள் களைவாரே. | [9] |
அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர் தவம்புரிந் தவஞ்செய்வார் நெறிய லாதன கூறுவர் மற்றவை தேறன்மின் மாறாநீர் மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப் பிறிவி லாதவர் பெறுகதி பேசிடி லளவறுப் பொண்ணாதே. | [10] |
மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழி நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் நவிற்றிய தமிழ்மாலை ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் கேட்டுகந் தவர்தம்மை வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.112  
மாது ஓர் கூறு உகந்து,
பண் - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் (திருத்தலம் திருவாடானை ; அருள்தரு அம்பாயிரவல்லியம்மை உடனுறை அருள்மிகு ஆதிரத்தினேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://sivaya.org/audio/2.112 Maathor kooruganthu.mp3
Audio: https://www.youtube.com/watch?v=_VfzpCKqXOY
மாதோர்கூறுகந் தேறதேறிய ஆதியானுறை யாடானை போதினாற்புனைந் தேத்துவார்தமை வாதியாவினை மாயுமே. | [1] |
வாடல்வெண்டலை யங்கையேந்திநின் றாடலானுறை யாடானை தோடுலாமலர் தூவிக்கைதொழ வீடுநுங்கள் வினைகளே. | [2] |
மங்கைகூறினன் மான்மறியுடை அங்கையானுறை யாடானை தங்கையாற்றொழு தேத்தவல்லவர் மங்குநோய்பிணி மாயுமே. | [3] |
சுண்ணநீறணி மார்பிற்றோல்புனை அண்ணலானுறை யாடானை வண்ணமாமலர் தூவிக்கைதொழ எண்ணுவாரிட ரேகுமே. | [4] |
கொய்யணிம்மலர்க் கொன்றைசூடிய ஐயன்மேவிய வாடானை கையணிம்மல ரால்வணங்கிட வெய்யவல்வினை வீடுமே. | [5] |
வானிளம்மதி மல்குவார்சடை ஆனஞ்சாடல னாடானை தேனணிம்மலர் சேர்த்தமுன்செய்த ஊனமுள்ள வொழியுமே. | [6] |
துலங்குவெண்மழு வேந்திச்சூழ்சடை அலங்கலானுறை யாடானை நலங்கொண்மாமலர் தூவிநாடொறும் வலங்கொள்வார்வினை மாயுமே. | [7] |
வெந்தநீறணி மார்பிற்றோல்புனை அந்தமில்லவ னாடானை கந்தமாமலர் தூவிக்கைதொழும் சிந்தையார்வினை தேயுமே. | [8] |
மறைவலாரொடு வானவர்தொழு தறையுந்தண்புன லாடானை உறையும்ஈசனை யேத்தத்தீவினை பறையுநல்வினை பற்றுமே. | [9] |
மாயனும்மல ரானுங்கைதொழ ஆயவந்தண னாடானை தூயமாமலர் தூவிக்கைதொழத் தீயவல்வினை தீருமே. | [10] |
வீடினார்மலி வெங்கடத்துநின் றாடலானுறை யாடானை நாடிஞானசம் பந்தன்செந்தமிழ் பாடநோய்பிணி பாறுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.114  
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு
பண் - செவ்வழி ரசிகப்ரியா எதுகுல காம்போதி இஷ்டாங்கிணி (திருத்தலம் திருக்கேதாரம் ; அருள்தரு கௌரியம்மை உடனுறை அருள்மிகு கேதாரேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=FNR8RErV8cE
தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால் வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக் கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே. | [1] |
பாதம்விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே வேதநான்கும் பதினெட்டொ டாறும் விரித்தார்க்கிடம் தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினம் கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே. | [2] |
முந்திவந்து புரோதாய மூழ்கி முனிகள்பலர் எந்தைபெம்மா னெனநின்றி றைஞ்சும் மிடமென்பரால் மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக் கெந்தநாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே. | [3] |
உள்ளமிக்கார் குதிரைம் முகத்தார் ஒருகாலர்கள் எள்கலில்லா இமையோர்கள் சேரும் மிடமென்பரால் பிள்ளைதுள்ளிக் கிள்ளைபயில்வ கேட்டுப் பிரியாதுபோய்க் கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே. | [4] |
ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால் வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும் இடமென்பரால் மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே. | [5] |
நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கி நீள்வரைதன்மேல் தேறுசிந்தை யுடையார்கள் சேரும் இடமென்பரால் ஏறிமாவின் கனியும்பலா வின்இருஞ் சுளைகளும் கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே. | [6] |
மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி வானோர்தொழத் தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க் கிடமென்பரால் உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக்கல் லறைகண்மேல் கிடந்தவேங்கை சினமாமுகஞ் செய்யுங் கேதாரமே. | [7] |
அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால் வெருவவூன்றி விரலா லடர்த்தார்க் கிடமென்பரால் குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல் கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே. | [8] |
ஆழ்ந்துகாணா ருயர்ந்தெய்த கில்லார் அலமந்தவர் தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க் கிடமென்பரால் வீழ்ந்துசெற்றுந் நிழற்கிரங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக் கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே. | [9] |
கடுக்கள்தின்று கழிமீன் கவர்வார்கண் மாசுடம்பினர் இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணா விடமென்பரால் அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங் கவர்வினைகளைக் கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே. | [10] |
வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான் ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர் வேந்தராகி யுலகாண்டு வீடுகதி பெறுவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.117  
மண்டு கங்கை சடையில் கரந்தும்,
பண் - செவ்வழி ரசிகப்ரியா எதுகுல காம்போதி இஷ்டாங்கிணி (திருத்தலம் திருஇரும்பைமாகாளம் ; அருள்தரு குயிலம்மை உடனுறை அருள்மிகு மாகாளேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://sivaya.org/audio/2.117 Mandu Gangai.mp3
Audio: https://www.youtube.com/watch?v=TJPLRSQLiNc
மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான் கொண்டகையாற் புரமூன் றெரித்த குழகன்னிடம் எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே. | [1] |
வேதவித்தாய் வெள்ளைநீறு பூசி வினையாயின கோதுவித்தாய் நீறெழக் கொடிமா மதிலாயின ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் இரும்பைதனுள் மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே. | [2] |
வெந்தநீறும் எலும்பும் அணிந்த விடையூர்தியான் எந்தைபெம்மா னிடம்எழில் கொள்சோலை யிரும்பைதனுள் கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில் மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே. | [3] |
நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள் அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம் எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள் மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. | [4] |
பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள் கூசவானை யுரித்தபெரு மான்குறை வெண்மதி ஈசனெங்கள் இறைவன் னிடம்போல் இரும்பைதனுள் மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே. | [5] |
குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள் மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே. | [6] |
பொங்குசெங்கண் அரவும் மதியும் புரிபுன்சடைத் தங்கவைத்த பெருமானென நின்றவர் தாழ்விடம் எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள் மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. | [7] |
நட்டத்தோடு நரியாடு கானத்தெரி யாடுவான் அட்டமூர்த்தி யழல்போ லுருவன் அழகாகவே இட்டமாக இருக்கும் இடம்போல் இரும்பைதனுள் வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே. | [8] |
அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான் இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள் மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே. | [9] |
அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம் குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் இரும்பைதனுள் மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே. | [10] |
எந்தையெம்மான் இடம்எழில் கொள்சோலை யிரும்பைதனுள் மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில் அந்தமில்லா அனலாடு வானையணி ஞானசம் பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார்பழி போகுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.001  
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
பண் - காந்தாரபஞ்சமம் கனகாங்கி கேதார கெளளை கர்நாடக சுத்த சவேரி (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=GHo7AfG3tfA
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத சிற்றம்பலம் நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே! பாடினாய், மறையோடு பல்கீதமும்! பல்சடைப் பனி கால் கதிர் வெண்திங்கள் சூடினாய்! அருளாய், சுருங்க எம தொல்வினையே! | [1] |
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய்! எருது ஏறினாய்! நுதல் பட்டமே புனைவாய்! இசை பாடுவ பாரிடமா, நட்டமே நவில்வாய்! மறையோர் தில்லை, நல்லவர், பிரியாத சிற்றம்பலம் இட்டமா உறைவாய்! இவை மேவியது என்னை கொலோ | [2] |
ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம் நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனே பாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்ச டைப்பனி கால்கதிர் வெண்டிங்கள் சூடி னாய்அரு ளாய்சுருங்கஎம தொல்வினையே. | [3] |
கொட்ட மேகம ழும்குழ லாளொடு கூடி னாய்எரு தேறி னாய்நுதற் பட்ட மேபுனை வாய்இசை பாடுவ பாரிடமா நட்ட மேநவில் வாய்மறை யோர்தில்லை நல்ல வர்பிரி யாதசிற் றம்பலம் இட்ட மாஉறை வாய்இவை மேவிய தென்னைகொலோ. | [4] |
நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல நெற்றி மேல்உற்ற கண்ணி னார்பற்று சூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார் சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழக் கோலத் தாய்அரு ளாய்உன காரணம் கூறுதுமே. | [5] |
கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போலமு கத்திரண் டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான் கம்ப லைத்தெழு காமுறு காளையர் காத லால்கழற் சேவடி கைதொழ அம்ப லத்துறை வான்அடி யார்க்கடை யாவினையே. | [6] |
தொல்லை யார்அமு துண்ணநஞ் சுண்டதோர் தூம ணிமிட றாபகு வாயதோர் பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்கா தில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழ இல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே. | [7] |
ஆகந் தோய்அணி கொன்றை யாய்அனல் அங்கை யாய்அம ரர்க்கம ராவுமை பாகந் தோய்பக வாபலி யேற்றுழல் பண்டரங்கா மாகந் தோய்பொழில் மல்குசிற் றம்பலம் மன்னி னாய்மழு வாளி னாய்அழல் நாகந் தோய்அரை யாய்அடி யாரைநண் ணாவினையே. | [8] |
சாதி யார்பளிங் கின்னொடு வெள்ளிய சங்க வார்குழை யாய்திக ழப்படும் வேதி யாவிகிர் தாவிழ வாரணி தில்லைதன்னுள் ஆதி யாய்க்கிடம் ஆயசிற் றம்பலம் அங்கை யால்தொழ வல்லடி யார்களை வாதி யாதகலும்நலி யாமலி தீவினையே. | [9] |
வேயி னார்பணைத் தோளியொ டாடலை வேண்டி னாய்விகிர் தாஉயிர் கட்கமு தாயி னாய்இடு காட்டெரி யாடல்அ மர்ந்தவனே தீயி னார்கணை யால்புரம் மூன்றெய்த செம்மை யாய்திகழ் கின்றசிற் றம்பலம் மேயி னாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே. | [10] |
தாரி னார்விரி கொன்றை யாய்மதி தாங்கு நீள்சடை யாய்தலை வாநல்ல தேரி னார்மறு கின்திரு வாரணி தில்லைதன்னுள் சீரி னால்வழி பாடொழி யாததோர் செம்மை யால்அழ காயசிற் றம்பலம் ஏரி னால்அமர்ந் தாய்உன சீரடி யேத்துதுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.004  
இடரினும், தளரினும், எனது உறு
பண் - காந்தாரபஞ்சமம் கனகாங்கி கேதார கெளளை கர்நாடக சுத்த சவேரி (திருத்தலம் திருவாவடுதுறை ; அருள்தரு ஒப்பிலாமுலையம்மை உடனுறை அருள்மிகு மாசிலாமணியீசுவரர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தர் பட்டீச்சுரத்திலிருந்து புறப்பட்டுப் பல தலங்களையும் வணங்கியவராய்த் திருவாவடுதுறை வந்தடைந்தார். அதுபோது சிவபாத இருதயர், தான் வேள்வி செய்தற்கு ஏற்ற காலம் இதுவாகும். அதற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் இடரினும் தளரினும் என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார். சிவபூதம் ஒன்று ஆயிரம் பொன்னடங்கிய பொற்கிழி ஒன்றை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து இப்பொற்கிழி எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி, இறைவர் இக்கிழியை உமக்கு வழங்குமாறு அளித்துள்ளார் எனக் கூறி மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழி யனுப்பி வைத்தார்.
பொருளாதார நிலை சீர் பெருவதற்க்கும் , வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம் Audio: https://sivaya.org/audio/3.004 idarinum thalarinum.mp3
Audio: https://www.youtube.com/watch?v=HR13vYitroI
Audio: https://www.youtube.com/watch?v=Xbb0koiLuSg
இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. | [1] |
வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. | [2] |
நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. | [3] |
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. | [4] |
கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. | [5] |
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. | [6] |
வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. | [7] |
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. | [8] |
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. | [9] |
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப் புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. | [10] |
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார் வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.005  
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க
பண் - காந்தாரபஞ்சமம் கனகாங்கி கேதார கெளளை கர்நாடக சுத்த சவேரி (திருத்தலம் திருப்பூந்தராய் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=tJUB5BtwJ8Y
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் மிக்க செம்மை விமலன் வியன்கழல் சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி நன்ற தாகிய நம்பன் தானே. | [1] |
புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய் வெள்ளம் தாங்கு விகிர்தன் அடிதொழ ஞாலத் தில்உயர் வார்உள்கும் நன்னெறி மூலம் ஆய முதலவன் தானே. | [2] |
வேந்த ராய்உல காள விருப்புறின் பூந்த ராய்நகர் மேயவன் பொற்கழல் நீதி யால்நினைந் தேத்தி உள்கிடச் சாதி யாவினை யான தானே. | [3] |
பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய் ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச் சிந்தை நோயவை தீர நல்கிடும் இந்து வார்சடை யெம்இ றையே. | [4] |
பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய் மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட நுந்தம் மேல்வினையோட வீடுசெய் எந்தை யாயஎம் மீசன் தானே. | [5] |
பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய் நாதன் சேவடி நாளும் நவின்றிட நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல் பில்கு வார்சடைப் பிஞ்ஞ கனே. | [6] |
புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய் பற்றிவாழும் பரமனைப் பாடிடப் பாவம் ஆயின தீரப் பணித்திடுஞ் சேவ தேறிய செல்வன் தானே. | [7] |
போத கத்துரி போர்த்தவன் பூந்தராய் காத லித்தான் கழல்விரல் ஒன்றினால் அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள் பெருக்கி நின்றஎம் பிஞ்ஞ கனே. | [8] |
மத்தம் ஆன இருவர் மருவொணா அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய் ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை மாளு மாறருள் செய்யுந் தானே. | [9] |
பொருத்த மில்சமண் சாக்கியப் பொய்கடிந் திருத்தல் செய்தபிரான் இமை யோர்தொழப் பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை ஏந்து மான்மறி யெம்இ றையே. | [10] |
புந்தி யான்மிக நல்லவர் பூந்தராய் அந்தம் இல்எம் அடிகளை ஞானசம் பந்தன் மாலைகொண் டேத்தி வாழும்நும் பந்த மார்வினை பாறி டுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.022  
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
பண் - காந்தாரபஞ்சமம் கனகாங்கி கேதார கெளளை கர்நாடக சுத்த சவேரி (திருத்தலம் சீர்காழி ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தருக்கு ஏழாவது வயது தொடங்கியது. வேதியர்கள் தங்கள் குலமரபை எடுத்துக்கூறி இருபிறப்பாளர் நிலையை விளக்கி அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச் செய்து மறை நான்கும் தந்தோம் என்றனர். பிள்ளையார் இறையருளால் எல்லாக் கலையுணர்வுகளையும் ஓதாது உணந்தவர். ஆதலின் வேதங்களின் பல பகுதிகளையும் அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில் தங்கட்கிருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, துஞ்சலும் துஞ்சல் என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும் உணர்த்தி யருளினார்.
ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம். பஞ்சாக்கரத் திருப்பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=Pi5cJXxeoVQ
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற் றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே. | [1] |
மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே. | [2] |
ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர் ஞான விளக்கினை யேற்றி நன்புலத் தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர் ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே. | [3] |
நல்லவர் தீயர் எனாது நச்சினர் செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத் தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே. | [4] |
கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத் தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில் தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே. | [5] |
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே. | [6] |
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும் மாடு கொடுப்பன மன்னு மாநடம் ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே. | [7] |
வண்டம ரோதி மடந்தை பேணின பண்டை யிராவணன் பாடி உய்ந்தன தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க் கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே. | [8] |
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச் சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும் பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட் கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே. | [9] |
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறணி வார்வி னைப்பகைக் கத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே. | [10] |
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை கற்றவன் காழியர் மன்னன் உன்னிய அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத் துற்றன வல்லவர் உம்ப ராவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.024  
மண்ணின் நல்ல வண்ணம் வாழல்
பண் - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி (திருத்தலம் திருக்கழுமலம் (சீர்காழி) ; அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருக்கும் நாளில் அவரைக் காண விரும்பிய சிவபாத இருதயர் மதுரை வந்தார். அப்பொழுது ஞானசம்பந்தர் அவரைப் பார்த்து அருந்தவத்தீர் குழந்தைப் பருவத்தில் எனக்குப் பொற்கிண்ணத்தில் பாலளித்து அருள் புரிந்த தோணிபுரப்பெருந்தகை எம்பெருமாட்டியோடு இனிதாக இருந்ததே? என நலம் உசாவும் முறையில் மண்ணில் நல்ல வண்ணம் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
திருமணம் மற்றும் சுப நிகழ்வுகலில் வாழ்த்துவதற்கான பாடல். அமைதியுடனும் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம் Audio: https://sivaya.org/audio/3.024 Mannanil Nalla Vannam.mp3
Audio: https://www.youtube.com/watch?v=EFcH79qtezA
Audio: https://www.youtube.com/watch?v=zpZCGZOpaeY
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே. | [1] |
போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத் தாதையார் முனிவுறத் தான்எனை யாண்டவன் காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே. | [2] |
தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம் வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக் கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப் பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே. | [3] |
அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடும் கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப் பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே. | [4] |
அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும் கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப் பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. | [5] |
மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச் சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும் பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே. | [6] |
குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடும் கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப் பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே. | [7] |
அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே கருக்குவா ளருள்செய்தான் கழுமல வளநகர்ப் பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே. | [8] |
நெடியவன் பிரமனும் நினைப்பரி தாய்அவர் அடியொடு முடியறி யாஅழல் உருவினன் கடிகமழ் பொழில்அணி கழுமல வளநகர்ப் பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே. | [9] |
தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம் ஆருறு சொற்களைந் தடியிணை அடைந்துய்ம்மின் காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப் பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே. | [10] |
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப் பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ் விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.033  
நீர் இடைத் துயின்றவன், தம்பி,
பண் - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி (திருத்தலம் திருவுசாத்தானம் (கோவிலூர்) ; அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=nUrPk4HHz-Y
நீரிடைத் துயின்றவன் றம்பிநீள் சாம்புவான் போருடைச் சுக்கிரீ வன்அநு மான்றொழக் காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம் சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே. | [1] |
கொல்லையே றுடையவன் கோவண ஆடையன் பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார் முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ் தில்லையா னுறைவிடந் திருவுசாத் தானமே. | [2] |
தாமலார் போலவே தக்கனார் வேள்வியை ஊமனார் தங்கனா வாக்கினா னொருநொடிக் காமனா ருடல்கெடக் காய்ந்தவெங் கண்ணுதல் சேமமா வுறைவிடந் திருவுசாத் தானமே. | [3] |
மறிதரு கரத்தினான் மால்விடை யேறியான் குறிதரு கோலநற் குணத்தினா ரடிதொழ நெறிதரு வேதியர் நித்தலு நியமஞ்செய் செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே. | [4] |
பண்டிரைத் தயனுமா லும்பல பத்தர்கள் தொண்டிரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொலக் கொண்டிரைக் கொடியொடுங் குருகினி னல்லினம் தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே. | [7] |
மடவரல் பங்கினன் மலைதனை மதியாது சடசட வெடுத்தவன் தலைபத்து நெரிதர அடர்தர வூன்றியங் கேயவற் கருள்செய்தான் திடமென வுறைவிடந் திருவுசாத் தானமே. | [8] |
ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்கும் காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான் பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடம் சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே. | [9] |
கானமார் வாழ்க்கையான் காரமண் டேரர்சொல் ஊனமாக் கொண்டுநீ ருரைமினுய் யவெனில் வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில் தேனமா மதியந்தோய் திருவுசாத் தானமே. | [10] |
வரைதிரிந் திழியுநீர் வளவயற் புகலிமன் திரைதிரிந் தெறிகடற் றிருவுசாத் தானரை உரைதெரிந் துணருஞ்சம் பந்தனொண் தமிழ்வல்லார் நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.046  
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை
பண் - கௌசிகம் (திருத்தலம் திருக்கருகாவூர் ; அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
குழத்தைப் பேறு- கருக் கலையாமல் பாதுகாக்க ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=uSnIymbkLcs
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக் கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம் அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. | [1] |
விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க் கமுத நீழலக லாததோர் செல்வமாம் கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர் அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. | [2] |
பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக் குழக ரென்றுகுழை யாவழை யாவரும் கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம் அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. | [3] |
பொடிமெய் பூசிமலர் கொய்து புணர்ந்துடன் செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர் கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம் அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. | [4] |
மைய லின்றிமலர் கொய்துவ ணங்கிடச் செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர் கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம் ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே . | [5] |
மாசில் தொண்டர்மலர் கொண்டுவ ணங்கிட ஆசை யாரவரு ணல்கிய செல்வத்தர் காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம் ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே. | [6] |
வெந்த நீறுமெய் பூசிய வேதியன் சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன் கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம் எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே. | [7] |
பண்ணி னேர்மொழி யாளையோர் பாகனார் மண்ணு கோலம்முடை யம்மல ரானொடும் கண்ண னேடவரி யார்கரு காவூரெம் அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. | [9] |
போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல் தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின் கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம் ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. | [10] |
கலவ மஞ்ஞையுல வுங்கரு காவூர் நிலவு பாட லுடையான்றன நீள்கழல் குலவு ஞானசம் பந்தன செந்தமிழ் சொலவ லாரவர் தொல்வினை தீருமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.049  
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்
பண் - கௌசிகம் (திருத்தலம் நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில் ( வைகாசி மூலம் ) ஒரே இடத்தில் முக்தி அடைந்தனர்
நம் தீவினைகள் அகல, நாம் செய்த பாவங்கள் நீங்க, மற்றும் இறைவன் அடி கிடைக்க Audio: https://www.youtube.com/watch?v=5dzknic0_uA
Audio: https://www.youtube.com/watch?v=RYMXxRvZB8I
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே. | [1] |
நம்பு வாரவர் நாவி னவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது வொப்பது செம்பொ னார்தில கம்முல குக்கெலாம் நம்பன் நாமம் நமச்சி வாயவே. | [2] |
நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார் தக்க வானவ ராத்தகு விப்பது நக்கன் நாமம் நமச்சி வாயவே. | [3] |
இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால் நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால் நியமந் தானினை வார்க்கினி யானெற்றி நயனன் நாமம் நமச்சி வாயவே. | [4] |
கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள் இல்லா ரேனு மியம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே. | [5] |
மந்த ரம்மன பாவங்கண் மேவிய பந்த னையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால் நந்தி நாமம் நமச்சி வாயவே. | [6] |
நரக மேழ்புக நாடின ராயினும் உரைசெய் வாயின ராயி னுருத்திரர் விரவி யேபுகு வித்திடு மென்பரால் வரதன் நாமம் நமச்சி வாயவே. | [7] |
இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல் தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை நலங்கொள் நாமம் நமச்சி வாயவே. | [8] |
போதன் போதன கண்ணனு மண்ணல்தன் பாதந் தான்முடி நேடிய பண்பராய் யாதுங் காண்பரி தாகி யலந்தவர் ஓதும் நாமம் நமச்சி வாயவே. | [9] |
கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள் வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால் விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய் நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே. | [10] |
நந்தி நாமம் நமச்சிவா யவெனும் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாசம் அறுக்கவல் லார்களே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.051  
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
பண் - கௌசிகம் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர் அந்தணர் முதலானோர் வருகையை அறிந்த சமணர் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டனர். தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்க அநுமதி பெற்றனர். சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை. அதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். ஒருபகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் தெரிவித்தனர். இத்தீ அரசன் முறை செய்யாமை யால் நேர்ந்ததாகும், ஆதலால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறையாயினும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகுக என்று கூறி செய்யனே திரு என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
பகைவர்கள் தொல்லைகள் நீங்க , நெருப்பு தொல்லைகளில் இருந்து விடுபட, சிறை வாசம் தடுக்க, சிறையில் இருந்து விடுபட ஓதவேண்டிய பதிகம் Audio: https://sivaya.org/audio/3.051 Seyyanae ThiruAalavaay.mp3
Audio: https://www.youtube.com/watch?v=FKdAEZH4Pms
செய்ய னேதிரு வாலவாய் மேவிய ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப் பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர் பைய வேசென்று பாண்டியற் காகவே. | [1] |
சித்த னேதிரு வாலவாய் மேவிய அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை எத்த ராமம ணர்கொளு வுஞ்சுடர் பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே. | [2] |
தக்கன் வேள்வி தகர்த்தரு ளாலவாய்ச் சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை எக்க ராமம ணர்கொளு வுஞ்சுடர் பக்க மேசென்று பாண்டியற் காகவே. | [3] |
சிட்ட னேதிரு வாலவாய் மேவிய அட்டமூர்த்திய னேயஞ்ச லென்றருள் துட்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர் பட்டி மன்றென்னன் பாண்டியற் காகவே. | [4] |
நண்ண லார்புர மூன்றெரி யாலவாய் அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர் பண்ணி யற்றமிழ்ப் பாண்டியற் காகவே. | [5] |
தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும் அஞ்ச லென்றரு ளாலவா யண்ணலே வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர் பஞ்ச வன்தென்னன் பாண்டியற்காகவே. | [6] |
செங்கண் வெள்விடை யாய்திரு வாலவாய் அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக் கங்கு லாரமண் கைய ரிடுங்கனல் பங்கமில் தென்னன் பாண்டியற் காகவே. | [7] |
தூர்த்தன் வீரந் தொலைத்தரு ளாலவாய் ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை ஏத்தி லாவம ணர்கொளு வுஞ்சுடர் பார்த்தி வன்தென்னன் பாண்டியற்காகவே. | [8] |
தாவி னானயன் றானறி யாவகை மேவி னாய்திரு வாலவா யாயருள் தூவி லாவம ணர்கொளு வுஞ்சுடர் பாவி னான்தென்னன் பாண்டியற்காகவே. | [9] |
எண்டி சைக்கெழி லாலவாய் மேவிய அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக் குண்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர் பண்டிமன் தென்னன் பாண்டியற்காகவே. | [10] |
அப்ப னாலவா யாதி யருளினால் வெப்பம் தென்னவன் மேலுற மேதினிக் கொப்ப ஞானசம் பந்த னுரைபத்தும் செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.054  
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
பண் - கௌசிகம் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான். ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் அஸ்தி நாஸ்தி என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.
கூன் நிமிற Audio: https://www.youtube.com/watch?v=ArwIB72oZ48
வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. | [1] |
அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர் எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும் கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும் பெரிய ராரறி வாரவர் பெற்றியே. | [2] |
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால் எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ. | [3] |
ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும் கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார். | [4] |
ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின் சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே. | [5] |
ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம் பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக் கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில் நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே. | [6] |
கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே. | [7] |
வேத முதல்வன் முதலாக விளங்கி வையம் ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப் பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே. | [8] |
பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப் பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப் போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே. | [9] |
மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும் பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக் காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே. | [10] |
அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும் தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை [ தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில் பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே. | [11] |
நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தனல்ல எல்லார்களும்பரவு மீசனை யேத்து பாடல் பல்லார் களும் மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும் வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே. | [12] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.067  
சுரர் உலகு, நரர்கள் பயில்
பண் - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் அந்த நகரத்தில் பல நாட்கள் தங்கி பல வகையான பதிகங்கள் பாடினார். இந்த பதிகம் பன்னிரண்டு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் சீர்காழி நகரின் ஒரு பெயர் வந்த வரலாற்றினை கூறுவதால், வழிமொழிப் பதிகம் என பெயர் வந்தது. பாடல்களிலும் முன்பகுதியில் இறைவனது சிறப்பும் பின்பகுதியில் அந்த பெயர் வந்ததற்கான விரிவான தலபுராண வரலாறும் கொடுக்கப்பட்டுள்ளன. தலத்தின் பன்னிரண்டு பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயற்றப்பட்ட பாடல் எனினும், வழக்கமாக தான் குறிப்பிடும் இராவணின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம், சமணர்களை பற்றிய குறிப்பு மற்றும் பதிகத்தை ஓதுவதால் கிடைக்கும் பலங்கள் ஆகியவையும் இந்த பதிகத்தில் குறிப்பிடப் படுகின்றன. வேகமான சந்தமுடைய பாடல்கள் என்பதால் முடுகு விராகம் என்று இந்த பதிகம் அழைக்கப் படுகின்றது. சீர்காழியின் இந்த பன்னிரண்டு பெயர்களும் மந்திரம் என்பதால் இந்த பெயர்களை இந்த பதிகத்தில் கொடுத்துள்ள வரிசைப் படியே சொல்ல வேண்டும். Audio: https://www.youtube.com/watch?v=7yjD5f5r-uk
சுரருலகு நரர்கள்பயி றரணிதல முரணழிய வரணமதின்முப் புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம் வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற் பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே. | [1] |
தாணுமிகு வாணிசைகொ டாணுவியர் பேணுமது காணுமளவிற் கோணுநுத னீணயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையே ஏணுகரி பூணழிய வாணியல்கொண் மாணிபதி சேணமரர்கோன் வேணுவினை யேணிநகர் காணிறிவி காணநடு வேணுபுரமே. | [2] |
பகலொளிசெய் நகமணியை முகைமலரை நிகழ்சரண வகவுமுனிவர்க் ககலமலி சகலகலை மிகவுரைசெய் முகமுடைய பகவனிடமாம் பகைகளையும் வகையிலறு முகவிறையை மிகவருள நிகரிலிமையோர் புகவுலகு புகழவெழி றிகழநிக ழலர்பெருகு புகலிநகரே. | [3] |
அங்கண்மதி கங்கைநதி வெங்கணர வங்களெழி றங்குமிதழித் துங்கமலர் தங்குசடை யங்கிநிக ரெங்களிறை தங்குமிடமாம் வெங்கதிர்வி ளங்குலக மெங்குமெதிர் பொங்கெரிபு லன்கள்களைவோர் வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர ணங்கள்பணி வெங்குருவதே. | [4] |
ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர் தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன் பாணியமர் பூணவருண் மாணுபிர மாணியிட மேணிமுறையிற் பாணியுல காளமிக வாணின்மலி தோணிநிகர் தோணிபுரமே. | [5] |
நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென் றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம் அராமிசை யிராதெழி றராயர பராயண வராகவுருவா தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே. | [6] |
அரணையுறு முரணர்பலர் மரணம்வர விரணமதி லரமலிபடைக் கரம்விசிறு விரகனமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம் பரவமுது விரவவிடல் புரளமுறு மரவையரி சிரமரியவச் சிரமரன சரணமவை பரவவிரு கிரகமமர் சிரபுரமதே. | [7] |
அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரன்மா மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற னுறவருளு மிறைவனிடமாங் குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் நிறையருள முறையொடுவரும் புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே. | [8] |
விண்பயில மண்பகிரி வண்பிரம னெண்பெரிய பண்படைகொண்மால் கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டனிடமாம் மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படரவச் சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே. | [9] |
பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங் கீழிசைகொண் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக் காழியசில் காழிசெய வேழுலகி லூழிவளர் காழிநகரே. | [10] |
நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான் மெய்ச்சிர மணைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம் மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரதக் கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்க ணச்சிமிடை கொச்சைநகரே. | [11] |
ஒழுகலரி தழிகலியி லுழியுலகு பழிபெருகு வழியைநினையா முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத் தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப் பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகண் மொழிதகையவே. | [12] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.072  
விங்கு விளை கழனி, மிகு
பண் - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி (திருத்தலம் திருமாகறல் ; அருள்தரு புவனநாயகியம்மை உடனுறை அருள்மிகு அடைக்கலங்காத்தநாதர் திருவடிகள் போற்றி )
எலும்பு முறிவு குணம் அடைவதற்கும் , இளம்பிள்ளை வாதம் , பக்க வாத நோய்கள் தீர்வதற்கு ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=KazBwKsulkI
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம் மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி நீடுபொழின் மாகறலுளான் கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான் செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே. | [1] |
கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவி னெய்தியழகார் மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான் இலையின்மலி வேல்நுனைய சூலம்வல னேந்தியெரி புன்சடையினுள் அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே. | [2] |
காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர் மாலைவழி பாடுசெய்து மாதவர்க ளேத்திமகிழ் மாகறலுளான் தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகமசை யாவழகிதாப் பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே. | [3] |
இங்குகதிர் முத்தினொடு பொன்மணிக ளுந்தியெழின் மெய்யுளுடனே மங்கையரு மைந்தர்களு மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான் கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே நுங்கள்வினை தீரமிக வேத்திவழி பாடுநுகரா வெழுமினே. | [4] |
துஞ்சுநறு நீலமிரு ணீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய் மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கணட மாடமலி மாகறலுளான் வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர்மழு வாளன் வளரும் நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே. | [5] |
மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய் இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான் மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே. | [6] |
வெய்யவினை நெறிகள்செல வந்தணையு மேல்வினைகள் வீட்டலுறுவீர் மைகொள்விரி கானன்மது வார்கழனி மாகறலு ளானெழிலதார் கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார் ஐயனடி சேர்பவரை யஞ்சியடை யாவினைக ளகலுமிகவே. | [7] |
தூசுதுகி னீள்கொடிகண் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே மாசுபடு செய்கைமிக மாதவர்க ளோதிமலி மாகறலுளான் பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார் பூசுபொடி யீசனென வேத்தவினை நிற்றலில போகுமுடனே. | [8] |
தூயவிரி தாமரைக ணெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண் பாயவரி வண்டுபல பண்முரலு மோசைபயின் மாகறலுளான் சாயவிர லூன்றியவி ராவணன தன்மைகெட நின்றபெருமான் ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை யாயினவு மகல்வதெளிதே. | [9] |
காலினல பைங்கழல்க ணீண்முடியின் மேலுணர்வு காமுறவினார் மாலுமல ரானுமறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான் நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய் ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே. | [10] |
கடைகொணெடு மாடமிக வோங்குகமழ் வீதிமலி காழியவர்கோன் அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தனுரையால் மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின் மாகறலுளா னடியையே உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைக ளொல்குமுடனே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.078  
நீறு, வரி ஆடு அரவொடு,
பண் - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி (திருத்தலம் திருவேதிகுடி ; அருள்தரு மங்கையர்க்கரசியம்மை உடனுறை அருள்மிகு வேதபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=QWAjJTbfqv0
நீறுவரி யாடரவொ டாமைமன வென்புநிரை பூண்பரிடபம் ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ லாதிய ரிருந்தவிடமாம் தாறுவிரி பூகமலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில் வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே. | [1] |
சொற்பிரிவி லாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை மற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத் துற்பரிய நஞ்சமுத மாகமு னயின்றவ ரியன்றதொகுசீர் வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே. | [2] |
போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல் வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர் சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நூலர்வரி தோலருடைமேல் வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே. | [3] |
காடர்கரி காலர்கனல் கையரனன் மெய்யருடல் செய்யர்செவியில் தோடர்தெரி கீளர்சரி கோவணவ ராவணவர் தொல்லைநகர்தான் பாடலுடை யார்களடி யார்கண்மல ரோடுபுனல் கொண்டுபணிவார் வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே. | [4] |
சொக்கர்துணை மிக்கவெயி லுக்கற முனிந்துதொழு மூவர்மகிழத் தக்கவருள் பக்கமுற வைத்தவர னாரினிது தங்குநகர்தான் கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலாம் மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே. | [5] |
செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த் தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியு மண்ணலிடமாம் வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழி விலாதவகையார் வெய்யமொழி தண்புலவ ருக்குரைசெ யாதவவர் வேதிகுடியே. | [6] |
உன்னியிரு போதுமடி பேணுமடி யார்தமிட ரொல்கவருளித் துன்னியொரு நால்வருட னானிழ லிருந்ததுணை வன்றனிடமாம் கன்னியரொ டாடவர்கண் மாமணம் விரும்பியரு மங்கலமிக மின்னியலு நுண்ணிடைநன் மங்கைய ரியற்றுபதி வேதிகுடியே. | [7] |
உரக்கரநெ ருப்பெழநெ ருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள் அரக்கனை யடர்த்தவனி சைக்கினிது நல்கியரு ளங்கணனிடம் முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரு மாடவரு மொய்த்த கலவை விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே. | [8] |
பூவின்மிசை யந்தணனொ டாழிபொலி யங்கையனு நேடவெரியாய்த் தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம் பாவலர்க ளோசையியல் கேள்விய தறாதகொடை யாளர்பயில்வாம் மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே. | [9] |
வஞ்சமணர் தேரர்மதி கேடர்த மனத்தறிவி லாதவர்மொழி தஞ்சமென வென்றுமுண ராதவடி யார்கருது சைவனிடமாம் அஞ்சுபுலன் வென்றறு வகைப்பொரு டெரிந்தெழு விசைக்கிளவியால் வெஞ்சின மொழித்தவர்கண் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே. | [10] |
கந்தமலி தண்பொழினன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம் பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதி கழலே சிந்தைசெய வல்லவர்க ணல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர் அந்தவுல கெய்தியர சாளுமது வேசரத மாணைநமதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.092  
மருந்து அவை; மந்திரம், மறுமை
பண் - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி (திருத்தலம் திருநெல்வேலி ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://sivaya.org/audio/3.092 Marunthavai Manthiram.mp3
Audio: https://www.youtube.com/watch?v=y7lNMHc4Tas
மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை மற்றுமெல்லாம் அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூம் செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலி யுறை செல்வர்தாமே. | [1] |
என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச் சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளு மியல்பதுவே துன்றுதண் பொழினுழைந் தெழுவிய கேதகைப் போதளைந்து தென்றல்வந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே. | [2] |
பொறிகிள ரரவமும் போழிள மதியமுங்கங் கையென்னும் நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக் கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலும் செறிபொழி றழுவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே. | [3] |
காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும் பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி ஈண்டுமா மாடங்கண் மாளிகை மீதெழு கொடிமதியம் தீண்டிவந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே. | [4] |
ஏனவெண் கொம்பொடு மெழில்திகழ் மத்தமு மிளவரவும் கூனல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார் ஆனினல் ஐந்துகந் தாடுவர் பாடுவ ரருமறைகள் தேனில்வண் டமர்பொழிற் றிருநெல்வேலி யுறைசெல்வர் தாமே. | [5] |
வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர் பொடியணி மார்பினர் புலியத ளாடையர் பொங்கரவர் வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார் செடிபடு பொழிலணி திருநெல்வேலி யுறை செல்வர் தாமே. | [6] |
அக்குலா மரையினர் திரையுலா முடியின ரடிகளன்று தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள்செம்மை புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டுபண் முரலுஞ்சோலைத் திக்கெலாம் புகழுறுந் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே. | [7] |
முந்திமா விலங்கலன் றெடுத்தவன் முடிகடோ ணெரிதரவே உந்திமா மலரடி யொருவிர லுகிர்நுதி யாலடர்த்தார் கந்தமார் தருபொழின் மந்திகள் பாய்தர மதுத்திவலை சிந்துபூந் துறைகமழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே. | [8] |
பைங்கண்வா ளரவணை யவனொடு பனிமல ரோனுங்காணா தங்கணா வருளென வவரவர் முறைமுறை யிறைஞ்சநின்றார் சங்கநான் மறையவர் நிறைதர வரிவைய ராடல்பேணத் திங்கணாள் விழமல்கு திருநெல்வேலி யுறை செல்வர் தாமே. | [9] |
துவருறு விரிதுகி லாடையர் வேடமில் சமணரென்னும் அவருறு சிறுசொலை யவமென நினையுமெம் மண்ணலார்தாம் கவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத் திவருறு மதிதவழ் திருநெல்வேலி யுறை செல்வர் தாமே. | [10] |
பெருந்தண்மா மலர்மிசை யயனவ னனையவர் பேணுகல்வித் திருந்துமா மறையவர் திருநெல்வேலி யுறை செல்வர்தம்மைப் பொருந்துநீர்த் தடமல்கு புகலியுண் ஞானசம் பந்தன்சொன்ன அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் கெடு மருவினையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.108  
வேத வேள்வியை நிந்தனை செய்து
பண் - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க வேத வேள்வியை என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.
வழக்குகளில் வெற்றி பெற, கடன் தொல்லைகள் நீங்கி, கடன் பெறாமலே வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=JEAsR66LDzw
வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லியமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பாதி மாதுட னாய பரமனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே | [1] |
வைதி கத்தின் வழியொழு காதவக் கைத வம்முடைக் காரமண் தேரரை எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே மைதி கழ்தரு மாமணி கண்டனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே. | [2] |
மறைவ ழக்கமி லாதமா பாவிகள் பறித லைக்கையர் பாயுடுப் பார்களை முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே மறியு லாங்கையின் மாமழு வாளனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே. | [3] |
அறுத்த வங்கமா றாயின நீர்மையைக் கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடும் செறுத்து வாதுசெயத்திரு வுள்ளமே முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே. | [4] |
அந்த ணாளர் புரியு மருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே வெந்த நீற தணியும் விகிர்தனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே. | [5] |
வேட்டு வேள்விசெ யும்பொரு ளைவிளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே காட்டி லானை யுரித்தவெங் கள்வனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே. | [6] |
அழல தோம்பு மருமறை யோர்திறம் விழல தென்னு மருகர் திறத்திறம் கழல வாதுசெ யத்திரு வுள்ளமே தழலி லங்கு திருவுருச் சைவனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே. | [7] |
நீற்று மேனிய ராயினர் மேலுற்ற காற்றுக் கொள்ளவு நில்லா வமணரைத் தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே ஆற்ற வாள ரக்கற்கு மருளினாய் ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே. | [8] |
நீல மேனி யமணர் திறத்துநின் சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே மாலு நான்முக னுங்காண் பரியதோர் கோல மேனிய தாகிய குன்றமே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே. | [9] |
அன்று முப்புரஞ் செற்ற வழகநின் துன்று பொற்கழல் பேணா வருகரைத் தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே கன்று சாக்கியர் காணாத் தலைவனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயி லுறையுமெம் மாதியே. | [10] |
கூட லாலவாய்க் கோனை விடைகொண்டு வாடன் மேனி யமணரை வாட்டிட மாடக் காழிச்சம் பந்தன் மதித்தவிப் பாடல் வல்லவர் பாக்கிய வாளரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.117  
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
பண் - கௌசிகம் (திருத்தலம் திருப்பிரமபுரம் (சீர்காழி) ; அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=wEt3BJdWfIo
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. | [1] |
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா. | [2] |
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா. | [3] |
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ. | [4] |
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா. | [5] |
மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே. | [6] |
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ. | [7] |
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே. | [8] |
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா. | [9] |
வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே. | [10] |
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.120  
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
பண் - புறநீர்மை ஹரிகாம்போஜி பூபாளம் காமாஜ் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
Audio: https://sivaya.org/audio/3.120 Mangayarkarasi.mp3
Audio: https://www.youtube.com/watch?v=z2C_j--RpY8
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த ஆலவா யாவது மிதுவே. | [1] |
வெற்றவே யடியா ரடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும் கொற்றவன் றனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும் ஒற்றைவெள் விடைய னும்பரார் தலைவ னுலகினி லியற்கையை யொழித்திட் டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற வாலவா யாவது மிதுவே. | [2] |
செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன்றிரு நீற்றினை வளர்க்கும் பந்தணை விரலாள் பாண்டிமா தேவி பணிசெயப் பாரிடை நிலவும் சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந் தண்ணெருக் கம்மலர் வன்னி அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே. | [3] |
கணங்களாய் வரினுந் தமியராய் வரினு மடியவர் தங்களைக் கண்டால் குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங் கோபுரஞ் சூழ்மணிக் கோயில் மணங்கமழ் கொன்றை வாளரா மதியம் வன்னிவன் கூவிள மாலை அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே. | [4] |
செய்யதா மரைமே லன்னமே அனைய சேயிழை திருநுதற் செல்வி பையரா வல்குற் பாண்டிமா தேவி நாடொறும் பணிந்தினி தேத்த வெய்யவேற் சூலம் பாசமங் குசமான் விரிகதிர் மழுவுடன் றரித்த ஐயனா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே. | [5] |
நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற குலமில ராகக் குலமதுண் டாகத் தவம்பணி குலச்சிறை பரவும் கலைமலி கரத்தன் மூவிலை வேலன் கரியுரி மூடிய கண்டன் அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே. | [6] |
முத்தின்றாழ் வடமுஞ் சந்தனக் குழம்பு நீறுந்தன் மார்பினின் முயங்கப் பத்தியார் கின்ற பாண்டிமா தேவி பாங்கொடு பணிசெய நின்ற சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே சுடர்மர கதமடுத் தாற்போல் அத்தனா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே. | [7] |
நாவணங் கியல்பா மஞ்செழுத் தோதி நல்லராய் நல்லியல் பாகும் கோவணம் பூதி சாதனங் கண்டாற் றொழுதெழு குலச்சிறை போற்ற ஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ ளிருபது நெரிதர வூன்றி ஆவணங் கொண்ட சடைமுடி யண்ண லாலவா யாவது மிதுவே. | [8] |
மண்ணெலா நிகழ மன்னனாய் மன்னு மணிமுடிச் சோழன்றன் மகளாம் பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ விண்ணுளா ரிருவர் கீழொடு மேலு மளப்பரி தாம்வகை நின்ற அண்ணலா ருமையோ டின்புறு கின்ற வாலவா யாவது மிதுவே. | [9] |
தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந் தொழுதுதன் குணத்தினைக் குலாவக் கண்டுநா டோறு மின்புறு கின்ற குலச்சிறை கருதி நின்றேத்தக் குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள் குறியின்க ணெறியிடை வாரா அண்டநா யகன்றா னமர்ந்துவீற் றிருந்த வாலவா யாவது மிதுவே. | [10] |
பன்னலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை யெனுமிவர் பணியும் அந்நலம் பெறுசீ ராலவா யீசன் றிருவடி யாங்கவை போற்றிக் கன்னலம் பெரிய காழியுண் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண் டின்னலம் பாட வல்லவ ரிமையோ ரேத்தவீற் றிருப்பவ ரினிதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.123  
நிரை கழல் அரவம் சிலம்பு
பண் - புறநீர்மை ஹரிகாம்போஜி பூபாளம் காமாஜ் (திருத்தலம் திருக்கோணமலை ; அருள்தரு மாதுமையம்மை உடனுறை அருள்மிகு கோணீசர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=EwSCSulZrO4
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே. | [1] |
கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர் பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க் கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே. | [2] |
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார் கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேல் தனித்தபே ருருவ விழித்தழ னாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக் குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே. | [3] |
பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர் தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ் சுமந்து கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமா மலையமர்ந் தாரே. | [4] |
தாயினு நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பா னீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே. | [5] |
பரிந்துநன் மனத்தால் வழிபடுமாணி தன்னுயிர் மேல்வரும் கூற்றைத் திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா ளுடையார் விரிந்துயர் மௌவன் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண் பகத்தின் குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமா மலையமர்ந் தாரே. | [6] |
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே. | [8] |
அருவரா தொருகை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன் இருவரு மறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும் குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே. | [9] |
நின்றுணுஞ் சமணுமிருந்துணுந் தேரு நெறியலா தனபுறங் கூற வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபான் மெல்லிய லொடுமுட னாகித் துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே. | [10] |
குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக் கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன் உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர் சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.125  
கல் ஊர்ப் பெரு மணம்
பண் - அந்தாளிக்குறிஞ்சி யாகப்பிரியா சாமா கலாவதி (திருத்தலம் திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) ; அருள்தரு நங்கையுமைநாயகியம்மை உடனுறை அருள்மிகு சிவலோகத்தியாகேசர் திருவடிகள் போற்றி )
சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் என்பாரின் மகளை மணம் பேசி நிச்சயித்தார். நல்லூர் மணவிழா வினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய நாளில் தோணிபுரத் தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து போற்றினார். உறவினர் கள் வேண்டக் கோயிலின் பக்கத்தே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தித் திருவடிகளைத் தூய நீரால் விளக்கி அந்நன்னீரை உட்கொண்டு அனைவர் மேலும் தெளித்து, ஞான சம்பந்தரை நோக்கி யான் பெற்ற அருநிதிப் பாவையை ஆளுடைய பிள்ளையார்க்கு அளித்தேன் என உரைத்தார். மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்பால் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். ஞானசம்பந்தர் காதலியாரைக் கைப்பற்றித் தீவலம் வரும்போது விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்னும் நினைவினராய் இருவினைக்கு வித்தாகிய இந்த இல்லறம் நம்மைச் சூழ்ந்து கொண்டதே இனி இவளோடும் அந்தமில் சிவன்தாளை அடைவோம் என உறுதி கொண்டு திருப்பெருமணக் கோயிலை அடைந்தார். இறைவன் திருமுன் நின்று கல்லூர்ப் பெருமணம் வேண்டா எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். Audio: https://www.youtube.com/watch?v=28Azl8Dg42c
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம் பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர் நல்லூர்ப் பெருமண மேயநம் பானே. | [1] |
தருமண லோதஞ்சேர் தண்கட னித்திலம் பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள் வருமணங் கூட்டி மணஞ்செயு நல்லூர்ப் பெருமணத் தான்பெண்ணோர் பாகங் கொண்டானே. | [2] |
அன்புறு சிந்தைய ராகி யடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின் றின்புறு மெந்தை யிணையடி யேத்துவார் துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே. | [3] |
வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது கொல்லியல் வேழத் துரிவிரி கோவணம் நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம் புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே. | [4] |
ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண் ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம் வேறுகந் தீருமை கூறுகந் தீரே. | [5] |
சிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப் பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது நட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத் திட்டப்பட் டாலொத்தி ராலெம் பிரானிரே. | [6] |
மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே. | [7] |
தக்கிருந் தீரன்று தாளா லரக்கனை உக்கிருந் தொல்க வுயர்வரைக் கீழிட்டு நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம் புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே. | [8] |
ஏலுந்தண் டாமரை யானு மியல்புடை மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம் போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே. | [9] |
ஆத ரமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும் பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின் நாதனை நல்லூர்ப் பெருமண மேவிய வேதன தாள்தொழ வீடெளி தாமே. | [10] |
நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன் பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க் கறும்பழி பாவ மவல மிலரே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.001  
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல
பண் - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
மருள்நீக்கியார், தனது சிறுவயதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்தார். மருள்நீக்கியாரின் சகோதரி திலகவதியார் ஆதரவாக இருந்தார். வாழ்க்கையில் பிடிப்பு ஏதும் இல்லாத நிலையில் சமண சமயத்துக் கொள்கைகள் அவரை ஈர்த்தன. சமண சமயக் கொள்கைகளை எளிதில் கற்றுத் தேர்ந்த மருள்நீக்கியார், சமணர்களின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டு தருமசேனர் என்று அழைக்கப்பட்டு கடலூரை அடுத்துள்ள பாடலிபுத்திரத்தில் வாழ்ந்து வந்தார். ஒரு கட்டதில், தருமசேனருக்கு கொடிய சூலைநோய் ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலியால் துடித்த அவருக்கு சமண சமய மந்திரங்களும் தந்திரங்களும், மற்ற மருத்துவமும் பலன் ஏதும் அளிக்கவில்லை. சமணர்கள் செய்த மருத்துவங்கள் மந்திரங்கள் ஏதும் பலனளிக்காத நிலையில், இரவோடு இரவாக யாரும் அறியாமல் தமது தமக்கையார் இருக்கும் திருவதிகை சென்றார். திலகவதியார், சிவபிரானின் கழல்களை வணங்கி அவருக்கு பணி செய்து உய்யலாம் என்று கூறித் தேற்றி, நமச்சிவாய என்ற மந்திரத்தை ஓதி அவருக்கு திருநீறு அளித்தார். திருக்கோயிலை வலம் வந்த மருள்நீக்கியார், தரையில் விழுந்து பெருமானை வணங்கிய பின்னர் அவரது சன்னதியில் நின்று கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தை பாடினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ வயிற்று வலி, குடல் தொடர்பான அனைத்து தொல்லைகள் நீங்கும் Audio: https://www.youtube.com/watch?v=MKE6sESuM58
Audio: https://www.youtube.com/watch?v=wbaVZ2UdQLY
கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன் ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. | [1] |
நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர் அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. | [2] |
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர் துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண் டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. | [3] |
முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப் பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர் தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான் அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. | [4] |
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன் வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. | [5] |
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன் உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய் அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. | [6] |
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால் வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர் பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான் அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. | [7] |
வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால் சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான் கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. | [8] |
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர் துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர் என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில் அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. | [9] |
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய் ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய் வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய் ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.002  
சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த்
பண் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
பிறகு சமணர்கள் ஒன்றுகூடி மன்னனிடம் சென்று நம் சமயச் சார்பில் பெற்ற சாதகத்தால் இவன் சாவாது பிழைத்திருக்கின்றான், இனி விடம் ஊட்டுவதே தரத்தக்க தண்டனை என்று கூறினர். அரசனும் இசைந்தனன். கொலை பாதகத்திற்கும் அஞ்சாத அக்கொடி யோர் விடங்கலந்த பாற்சோற்றைத் திருநாவுக்கரசர்க்கு அளித்து உண்ணும்படிச் செய்தனர். எம்பிரான் அடியார்க்கு நஞ்சும் அமுதாம் என்றுகூறி அதை உண்டு எவ்விதத் தீங்கும் அடையாமல் விளங்கினார் அடிகள். திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலவிடம் சிவபெரு மானுக்கு அமுதமாக ஆயிற்று. அவனடியார்க்கு நஞ்சு அமுதாயிற்று. நஞ்சும் இவனுக்கு அமுதாயிற்று. இவன் பிழைப்பானாகில் இனி, நமக்கு இறுதி வருவது உறுதி என்றெண்ணி முன்போல் அரசன் பாற் சென்று நம் சமயத்திற் கற்ற மந்திர வலிமையால் உயிர் பிழைத் தான், அவன் இறவாதிருந்தால் எங்கள் உயிரும் நும் அரசாட்சியும் அழிவது திண்ணம், என்று கூறினர். மத யானையை விடுத்து இடறச் செய்வதே தண்டனை என்று தீர்மானிக்கப்பெற்றது. குன்றுபோல் விளங்கிய மதயானை கூடத்தை விட்டுப் புறப்பட்டது. பயங்கரமான அந்த யானை திருநாவுக்கரசரை இன்று காலால் இடறிச் சிதறிவிடும் என்றே எல்லோரும் எண்ணினர். திருநாவுக்கரசர் சுண்ணவெண் சந்தனச்சாந்தும் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி யானையுரித்த பிரான் கழல்போற்றியிருந்தார். மதயானை மும்முறை வலம்வந்து வீழ்ந்து வணங்கித் தன்னை ஏவிய பாகரையும் சமணரையும் மிதித்துக் கொன்று சென்றது.
அபாயகரமான விஷங்கள், விஷ உணவு இவற்றின் இருந்து தப்பிக்க Audio: https://www.youtube.com/watch?v=eLvO4-nL_ZU
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும் வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும் அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. | [1] |
பூண்டதொர் கேழ லெயிறும் பொன்றிக ழாமை புரள நீண்டதிண் டோள்வலஞ் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும் காண்டகு புள்ளின் சிறகுங் கலந்த கட்டங்கக் கொடியும் ஈண்டு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. | [2] |
ஒத்த வடத்திள நாக முருத்திர பட்ட மிரண்டும் முத்து வடக்கண் டிகையு முளைத்தெழு மூவிலை வேலும் சித்த வடமு மதிகைச் சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து தத்துங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. | [3] |
மடமான் மறிபொற் கலையு மழுப்பாம் பொருகையில் வீணை குடமால் வரையதிண் டோளுங் குனிசிலைக் கூத்தின் பயில்வும் இடமால் தழுவிய பாக மிருநில னேற்ற சுவடும் தடமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. | [4] |
பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும் வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும் நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. | [5] |
கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும் பரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும் அரங்கிடை நூலறி வாள ரறியப் படாததொர் கூத்தும் நிரந்த கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. | [6] |
கொலைவரி வேங்கை யதளுங் குவவோ டிலங்குபொற் றோடும் விலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும் மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணியார்ந் திலங்கு மிடறும் உலவு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. | [7] |
ஆடல் புரிந்த நிலையும் அரையி லசைத்த அரவும் பாடல் பயின்றபல் பூதம் பல்லா யிரங்கொள் கருவி நாடற் கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து ஓடுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. | [8] |
சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும் யாழின் மொழியவ ளஞ்ச அஞ்சா தருவரை போன்ற வேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து தாழுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. | [9] |
நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை உரங்களெல் லாங்கொண் டெடுத்தா னொன்பது மொன்று மலற வரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து நிரம்பு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.003  
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான்
பண் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா (திருத்தலம் திருவையாறு ; அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
வடதிசைப் பெருந்தலங்களாக வழியில் உள்ள திருப்பருப்பதம் முதலான தலங்களைத் தரிசித்துக்கொண்டு அடியார்களை விடுத்துத் தனியே இரவுபகலாய், காடுமேடு, மலை, மணல் பரப்புக்களில் நடந்துசென்றார். கால்களால் நடக்கலற்றாது கைகளால் தாவிச் சென்றார். கைகளும் மணிக்கட்டு வரை தேய்ந்தன. மார்பினால் உந்திச் சென்றார். என்புகளும் தேய்ந்து முறிந்தன. எப்படியும் கயிலைநாதனைக் கண்டு இன்புற வேண்டும் என்ற வேட்கையால் புரண்டு புரண்டு சென்று உடலுறுப்புக்கள் முழுதும் தேய்ந்து ஓரிடத்தில் செயலற்றுத் தங்கிக் கிடந்தார். பெருமான் ஒரு முனிவர் வேடம் பூண்டு எதிரே நின்று, திருக்கயிலை மானிடர் சென்றடைதற்கு எளிதோ? திரும்பிச் செல்லும், இதுவே தக்கது என்று கூற அப்பரும், என்னை ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என்று உறுதி மொழிந்தார். முனிவராய் வந்த பெருமான் மறைந்து அசரீரியாய் நாவினுக்கரசனே! எழுந்திரு என்று கூறினன். அப்பொழுதே உடல் நலம் பெற்று நாவுக்கரசர் எழுந்து பணிந்து அண்ணலே, கயிலையில் நின்திருக்கோலம் நண்ணி நான்தொழ நயந்தருள்புரி எனப் பணிந்தார். பெருமான் மீண்டும் அசரீரியாய் இத் தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றை அடைந்து நாம் திருக்கயிலையில் வீற்றிருக்கும் காட்சியைக் காண்க என்று கூறினன். அவ்வாறே அப்பரும் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே அத்தடாகத்தில் மூழ்கி எழுந்தனர். திருவையாற்றில் உள்ள தடாகத்தில் திருநாவுக்கரசர் எழுந்தார். ஐயாற்றிறைவரை வணங்கப் புகுமளவில் அங்குள்ள உயிர்கள் அனைத்தும் சத்தியும் சிவமுமாம் காட்சிகளைக் காட்டின. அப்பெருங் கோயில் கயிலைங்கிரியாய்க் காட்சி அளித்தது. திருமால், பிரமன், இந்திரன் முதலானோர் போற்ற வேதம் முழங்க, விண்ணவர், சித்தர் வித்யாதரர்களுடன் மாதவர் முனிவர் போன்ற இறைவன் அம்பிகையோடு எழுந்தருளியிருக்கும் அருட்காட்சி கண்டு ஆனந்தக் கூத்தாடினார்; பாடினார்; பல்வகைப் பாமாலைகளாலும் போற்றிப் பரவிப் புகழ்ந்து மகிழ்ந்தார். பெருமான் கயிலைக் காட்சியை மறைத்தருளினான். திரு நாவுக்கரசர் திகைத்து இதுவும் இறைவன் திருவருளே என்று எண்ணித் தெளிந்து மாதர்ப் பிறைக்கண்ணியானை என்ற திருப்பதிகம் பாடித் தொழுதார். Audio: https://www.youtube.com/watch?v=kGyJHnSZZ48
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | [1] |
போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன் ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | [2] |
எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன் அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | [3] |
பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித் துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன் அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | [4] |
ஏடு மதிக்கண்ணி யானை யேந்திழை யாளொடும் பாடிக் காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன் ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | [5] |
தண்மதிக் கண்ணியி னானைத் தையனல் லாளொடும் பாடி உண்மெலி சிந்தைய னாகி யுணரா வுருகா வருவேன் அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது வண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | [6] |
கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி வடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன் அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போது இடிகுர லன்னதொ ரேன மிசைந்து வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | [7] |
விரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப் பெரும்புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன் அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயா றடைகின்ற போது கருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | [8] |
முற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப் பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன் அற்றருள் பெற்றுநின் றாரோ டையா றடைகின்ற போது நற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | [9] |
திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி எங்கருள் நல்குங்கொ லெந்தை யெனக்கினி யென்னா வருவேன் அங்கிள மங்கைய ராடும் ஐயா றடைகின்ற போது பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | [10] |
வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக் களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிற் கின்றேன் அளவு படாததொ ரன்போ டையா றடைகின்ற போது இளமண நாகு தழுவி யேறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.009  
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு
பண் - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி (திருத்தலம் பொது - திருஅங்கமாலை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உடல் உறுப்புகள் நலம் பெற ஓத வேண்டிய பதிகம் Audio: https://sivaya.org/audio/4.009 தலையே, நீ வணங்காய்.mp3
Audio: https://www.youtube.com/watch?v=YNtyl_vCMWI
தலையே நீவணங்காய் - தலை மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய். | [1] |
கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ. | [2] |
செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும் செவிகாள் கேண்மின்களோ. | [3] |
மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை மூக்கே நீமுரலாய். | [4] |
வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை வாயே வாழ்த்துகண்டாய். | [5] |
நெஞ்சே நீநினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சா டும்மலை மங்கை மணாளனை நெஞ்சே நீநினையாய். | [6] |
கைகாள் கூப்பித்தொழீர் - கடி மாமலர் தூவிநின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழீர். | [7] |
ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ் ஆக்கை யாற்பயனென். | [8] |
கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில் கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென். | [9] |
உற்றா ராருளரோ - வுயிர் கொண்டு போம்பொழுது குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் குற்றா ராருளரோ. | [10] |
இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச் சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு இறுமாந் திருப்பன்கொலோ. | [11] |
தேடிக் கண்டுகொண்டேன் - திரு மாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே தேடிக் கண்டுகொண்டேன். | [12] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.011  
சொல்-துணை வேதியன், சோதி வானவன், பொன்துணைத்
பண் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா (திருத்தலம் பொது - நமசிவாயத் திருப்பதிகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
யானைக்குத் தப்பி ஓடிய சமணர் மன்னவனிடம் சென்றனர். பலவாறு வீழ்ந்து புலம்பினர். பல்லவனும் இனி என்செய்வது என்று வினவினான். அவன் அழிந்தால்தான் நம் அவமானம் தீரும்; எனவே கல்லோடு கட்டிக் கடலில் தள்ளுவதே வழி என்று சமணர் கூறினர். அவ்வாறே பல்லவனும் பணித்தான். கொலையாளர்களும் திருநாவுக் கரசரைக் கல்லோடு பிணைத்துக் கடலில் தள்ளித் திரும்பினர். திருநாவுக்கரசர் சொற்றுணை வேதியன் என்று தொடங்கித் திருப்பதிகம்பாடி திருவைந்தெழுத்தின் பெருமையைத் திருப்பதிகத்தால் அருளிச் செய்தார். இருவினைக் கயிறுகளால் மும்மலக் கல்லில் கட்டிப் பிறவிப் பெருங்கடலில் போடப்பெற்ற உயிர்களைக் கரையேற்றவல்ல திருவைந்தெழுத்தின் பெருமையால் கல் தெப்பமாகக் கடலில் மிதந்தது. கயிறு அறுந்தது. கடல் மன்னனாகிய வருணன் திருநாவுக்கரசரை அலைகளாகிய கைகளால் திருமுடிமேல் தாங்கிக் கொண்டுவந்து திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தின் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தான்.
கொடிய மிருகங்கள், மனிதர்களளிடம் இருந்து தப்பிக்க Audio: https://www.youtube.com/watch?v=GcaDjvjf6fA
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. | [1] |
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கல நமச்சி வாயவே. | [2] |
விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. | [3] |
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. | [4] |
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கல நமச்சி வாயவே. | [5] |
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமில னாடொறு நல்கு வானலன் குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. | [6] |
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினே னாடிற்று நமச்சி வாயவே. | [7] |
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. | [8] |
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாத றிண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே. | [9] |
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.013  
விடகிலேன், அடிநாயேன்; வேண்டியக் கால்
பண் - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி (திருத்தலம் திருவையாறு ; அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=LtFr6FRYsgI
விடகிலே னடிநாயேன் வேண்டியக்கா லியாதொன்றும் இடகிலே னமணர்கள்த மறவுரைகேட் டலமந்தேன் தொடர்கின்றே னுன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான் அடைகின்றே னையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே. | [1] |
செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர் கொம்பமருங் கொடிமருங்குற் கோல்வளையா ளொருபாகர் வம்பவிழு மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த அம்பவள வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே. | [2] |
நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின் துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும் அணியானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே. | [3] |
ஊழித்தீ யாய்நின்றா யுள்குவா ருள்ளத்தாய் வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம் ஆழித்தீ யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே. | [4] |
சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே உடையானே யுடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும் அடையானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே. | [5] |
நீரானே தீயானே நெதியானே கதியானே ஊரானே யுலகானே யுடலானே யுயிரானே பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென் றாராத வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே. | [6] |
கண்ணானாய் மணியானாய் கருத்தானா யருத்தானாய் எண்ணானா யெழுத்தானா யெழுத்தினுக்கோ ரியல்பானாய் விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே அண்ணான வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே. | [7] |
மின்னானா யுருமானாய் வேதத்தின் பொருளானாய் பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய் நின்னானா ரிருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி அன்னானே யையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே. | [8] |
முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப் பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த எத்திசையும் வானவர்க ளெம்பெருமா னெனவிறைஞ்சும் அத்திசையா மையாறார்க் காளாய்நா னுய்ந்தேனே. | [9] |
கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத் திருவிரலா லுதைகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி யென்றேத்தும் அருவரைசூ ழையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.015  
பற்று அற்றார் சேர் பழம்
பண் - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா (திருத்தலம் பாவநாசத் திருப்பதிகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சேத்திரக்கோவை Audio: https://sivaya.org/audio/4.015 - பற்று அற்றார் சேர்.mp3
Audio: https://sivaya.org/audio/4.015 Patru Atrraar.mp3
Audio: https://www.youtube.com/watch?v=eUlIEsCnKo4
பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச் சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த ஒற்றி யூரெ முத்தமனை யுள்ளத் துள்ளேவைத்தேனே. | [1] |
ஆனைக் காவி லணங்கினை யாரூர் நிலாய வம்மானைக் கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே. | [2] |
மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கு மருந்தினை அதிகை மூதூ ரரசினை யையா றமர்ந்த வையனை விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ள நிறைந்ததே. | [3] |
புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூ ரிலங்கு பொன்னினை உறந்தை யோங்கு சிராப்பள்ளி யுலகம் விளக்கு ஞாயிற்றைக் கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை அறஞ்சூ ழதிகை வீரட்டத் தரிமா னேற்றை யடைந்தேனே. | [4] |
கோலக் காவிற் குருமணியைக் குடமூக் குறையும் விடமுணியை ஆலங் காட்டி லந்தேனை யமரர் சென்னி யாய்மலரைப் பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச் சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே. | [5] |
மருக லுறைமா ணிக்கத்தை வலஞ்சு ழி( ய் )யின் மாலையைக் கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப் பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரிய திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே. | [6] |
எழிலா ரிராச சிங்கத்தை யிராமேச் சுரத்தெ மெழிலேற்றைக் குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனை நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை அழலார் வண்ணத் தம்மானை யன்பி லணைத்து வைத்தேனே. | [7] |
மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையு மணாளனை ஆலைக் கரும்பி னின்சாற்றை யண்ணா மலையெம் மண்ணலைச் சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே. | [8] |
சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை ஆற்றிற் பழனத் தம்மானை யால வாயெம் மருமணியை நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ணெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத் தோற்றக் கடலையட லேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே. | [9] |
புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப் பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியின் மேய புராணனை வைத்தே னென்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே. | [10] |
முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை அந்திச் செவ்வான் படியானை யரக்க னாற்ற லழித்தானைச் சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிச்சேர்த்தி எந்தை பெம்மா னென்னெம்மா னென்பார் பாவநாசமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.018  
ஒன்று கொல் ஆம் அவர்
பண் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா (திருத்தலம் பொது - விடந்தீர்த்தத் திருப்பதிகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திங்களூரில் அப்பூதி அடிகள் என்பார் திருநாவுக்கரசர் பெருமையைக் கேள்வியுற்று திருநாவுக்கரசர் பெயரில் பல தர்மங்களை செய்து வந்தார். திங்களூர் வந்த திருநாவுக்கரசர். அப்பூதிஅடிகளைப் பற்றி கேள்வி பட்டு, அப்பூதியின் வீடு அடைந்தார். வந்தவர் திருநாவுக்கரசர் என்றவுடன், அப்பூதி வீடே மிகுந்த மகிழ்வுடன் அமுது தயார் செய்தார்கள். தம் மூத்தமகனாராகிய மூத்த திருநாவுக்கரசை அழைத்துத் திருவமுது படைக்க வாழைக் குருத்து அரிந்து வருமாறு அனுப்பினார். அப்போது விஷநாகம் ஒன்று மூத்த திருநாவுக்கரசைத் தீண்டி உயிர் துறந்தார். மகன் இறந்ததையும் பொருட்படுத்தாது அப்பிள்ளையை ஒருபால் மறைய வைத்து அப்பரடிகளுக்கு விருந்தூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்பூதி அடிகள், திருநாவுக்கரசரை விருந்துண்ண அழைத்து வந்து அமர்த்தி வணங்கித் திருநீறுபெற்றார். மூத்த திருநாவுக் கரசை அழையும் என்று அப்பர் கூற, இப்போது அவன் இங்கு உதவான் என்று அப்பூதிகூறினார். திருநாவுக்கரசர் நிகழ்ந்ததறிந்து மூத்த திருநாவுக்கரசைத் திருக்கோயிலுக்குமுன் எடுத்துவரச் செய்து இறை யருளால் உயிர்பெற்றெழும்வண்ணம் ஒன்றுகொலாம் என்ற திருப் பதிகம் பாடியருளினர்.
ஒவ்வாமை, பாம்பு, பூரான் விஷம் மற்றும் விஷக்கடி நீங்குவதற்கு ஓத வேண்டிய பதிகம் Audio: https://sivaya.org/audio/4.018 ondru kolaam avaravar.mp3
Audio: https://www.youtube.com/watch?v=cT31jKOzFW0
ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது ஒன்றுகொ லாமவ ரூர்வது தானே. | [1] |
இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம் இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண் இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு இரண்டுகொ லாமவ ரெய்தின தாமே. | [2] |
மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை மூன்றுகொ லாங்கணை கையது வின்னாண் மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே. | [3] |
நாலுகொ லாமவர் தம்முக மாவன நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும் நாலுகொ லாமவ ரூர்தியின் பாதங்கள் நாலுகொ லாமறை பாடினதாமே. | [4] |
அஞ்சுகொ லாமவ ராடர வின்படம் அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை அஞ்சுகொ லாமவ ராடின தாமே. | [5] |
ஆறுகொ லாமவ ரங்கம் படைத்தன ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம் ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால் ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே. | [6] |
ஏழுகொ லாமவ ரூழி படைத்தன ஏழுகொ லாமவர் கண்ட விருங்கடல் ஏழுகொ லாமவ ராளு முலகங்கள் ஏழுகொ லாமிசை யாக்கின தாமே. | [7] |
எட்டுக்கொ லாமவ ரீறில் பெருங்குணம் எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர் எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே. | [8] |
ஒன்பது போலவர் வாசல் வகுத்தன ஒன்பது போலவர் மார்பினி னூலிழை ஒன்பது போலவர் கோலக் குழற்சடை ஒன்பது போலவர் பாரிடந் தானே. | [9] |
பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல் பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.063  
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள்
பண் - திருநேரிசை (திருத்தலம் திருவண்ணாமலை ; அருள்தரு உண்ணாமுலையம்மை உடனுறை அருள்மிகு அருணாசலேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=fkS7G-zK1CU
ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே. | [1] |
பண்டனை வென்ற வின்சொற் பாவையோர் பங்க நீல கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா அண்டனே யமரர் கோவே யணியணா மலை யுளானே தொண்டனே னுன்னை யல்லாற் சொல்லுமா சொல்லி லேனே. | [2] |
உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம் பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே. | [3] |
பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீறா செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க அம்பொனே கொழித்து வீழு மணியணா மலையு ளானே என்பொனே யுன்னை யல்லா லேதுநா னினைவி லேனே. | [4] |
பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா மறைவலா விறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா அறைகழ லமர ரேத்து மணியணா மலையு ளானே இறைவனே யுன்னை யல்லால் யாதுநா னினைவி லேனே. | [5] |
புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக் கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா அரிகுல மலிந்தவண்ணா மலையுளா யலரின்மிக்க வரிமிகு வண்டுபண்செய் பாதநான் மறப்பிலேனே. | [6] |
இரவியு மதியும் விண்ணு மிருநிலம் புனலுங் காற்றும் உரகமார் பவன மெட்டுந் திசையொளி யுருவ மானாய் அரவுமிழ் மணிகொள்சோதி யணியணா மலையுளானே பரவுநின் பாதமல்லாற் பரமநான் பற்றிலேனே. | [7] |
பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை யீந்தாய் நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய் ஆர்த்துவந் தீண்டு கொண்ட லணியணா மலையு ளானே தீர்த்தனே நின்றன் பாதத் திறமலாற் றிறமி லேனே. | [8] |
பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையு ணின்றாய் ஆலுநீர் கொண்டல் பூக மணியணா மலையு ளானே வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே. | [9] |
இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த வெம்மான் உரத்தினால் வரையை யூக்க வொருவிர னுதியி னாலே அரக்கனை நெரித்த வண்ணா மலையுளா யமர ரேறே சிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.094  
ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும்
பண் - திருவிருத்தம் (திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) ; அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டேசுவரர் திருவடிகள் போற்றி )
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவனடியார்கள் இச் செய்தி கேட்டு மகிழ்ந்தனர். எல்லோரும்கூடி அரஹர முழக்கம் செய்து திரு நாவுக்கரசரை வரவேற்றனர். திருநாவுக்கரசர் அடியார் கூட்டத்தோடு திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானை ஈன்றாளுமாய் என்று தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றிப் பரவினார்.
கடல் மற்றும் நீரினால் வரும் துன்பங்களில் இருந்து தப்பிக்க Audio: https://www.youtube.com/watch?v=D2gzNhT2Uj8
Audio: https://www.youtube.com/watch?v=pTj6oWlvx_U
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே. | [1] |
பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றும் சுற்றா யலைகடன் மூடினுங் கண்டேன் புகனமக்கு உற்றா னுமையவட் கன்பன் றிருப்பா திரிப்புலியூர் முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன மொய்கழலே. | [2] |
விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தா னினிநமக்கிங் கடையா வவல மருவினை சாரா நமனையஞ்சோம் புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர் உடையா னடிய ரடியடி யோங்கட் கரியதுண்டே. | [3] |
மாயமெல் லாமுற்ற விட்டிரு ணீங்க மலைமகட்கே நேயநிலாவ விருந்தா னவன்றன் றிருவடிக்கே தேயமெல் லாநின் றிறைஞ்சுந் திருப்பாதிரிப்புலியூர் மேயநல் லான்மலர்ப் பாதமென் சிந்தையு ணின்றனவே. | [4] |
வைத்த பொருணமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச் சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால் மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர் அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் பேதைநெஞ்சே. | [5] |
கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால் திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே. | [6] |
எண்ணா தமர ரிரக்கப் பரவையு ணஞ்சையுண்டாய் திண்ணா ரசுரர் திரிபுரந் தீயெழச் செற்றவனே பண்ணார்ந் தமைந்த பொருள்கள் பயில்பா திரிப்புலியூர்க் கண்ணார் நுதலாய் கழனங் கருத்தி லுடையனவே. | [7] |
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே. | [8] |
மண்பாத லம்புக்கு மால்கடன் மூடிமற் றேழுலகும் விண்பா றிசைகெட் டிருசுடர் வீழினு மஞ்சனெஞ்சே திண்பா னமக்கொன்று கண்டோந் திருப்பா திரிப்புலியூர்க் கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே. | [9] |
திருந்தா வமணர் தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த பொருந்தா வரக்க னுடனெரித் தாய்பா திரிப்புலியூர் இருந்தா யடியே னினிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.096  
கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம்
பண் - திருவிருத்தம் (திருத்தலம் திருச்சத்திமுற்றம் ; அருள்தரு சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு வீழியழகர் திருவடிகள் போற்றி )
திருச்சத்திமுற்றத்துப் பெருமானாகிய சிவக்கொழுந்தீசனைப் பணிந்து கோவாய்முடுகி என்று தொடங்கி கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என்தலைமேற் சூட்டியருளுக என்று திருவடி தீகை்ஷ செய்யுமாறு வேண்டினர். Audio: https://www.youtube.com/watch?v=lH-R3BTHJ4Q
கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடில் மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் குந்தழற்கைத் தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | [1] |
காய்ந்தா யனங்க னுடலம் பொடிபடக் காலனைமுன் பாய்ந்தா யுயிர்செகப் பாதம் பணிவார்தம் பல்பிறவி ஆய்ந்தாய்ந் தறுப்பா யடியேற் கருளாயுன் னன்பர்சிந்தை சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | [2] |
பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் புகலழிப்ப மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி அத்தா வடியே னடைக்கலங் கண்டா யமரர்கடம் சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | [3] |
நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் நீணிலத்தொன் றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் தாண்டுகொண்டாய் வில்லேர் புருவத் துமையாள் கணவா விடிற்கெடுவேன் செல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | [4] |
கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் கருப்புவியில் தெருவிற் புகுந்தேன் றிகைத்தடி யேனைத் திகைப்பொழிவி உருவிற் றிகழு முமையாள் கணவா விடிற்கெடுவேன் திருவிற் பொலிசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | [5] |
வெம்மை நமன்றமர் மிக்கு விரவி விழுப்பதன்முன் இம்மையுன் றாளென்றன் னெஞ்சத் தெழுதிவை யீங்கிகழில் அம்மை யடியேற் கருளுதி யென்பதிங் காரறிவார் செம்மை தருசத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | [6] |
விட்டார் புரங்க ளொருநொடி வேவவொர் வெங்கணையால் சுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள் தும்பிபம்பும் மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்தருளும் சிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | [7] |
இகழ்ந்தவன் வேள்வி யழித்திட் டிமையோர் பொறையிரப்ப நிகழ்ந்திட வன்றே விசயமுங் கொண்டது நீலகண்டா புகழ்ந்த வடியேன்றன் புன்மைகள் தீரப் புரிந்துநல்காய் திகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | [8] |
தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் சரண்புகுந்தேன் எக்காத லெப்பய னுன்றிற மல்லா லெனக்குளதே மிக்கார் திலையுள் விருப்பா மிகவட மேருவென்னும் திக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | [9] |
பொறித்தே ரரக்கன் பொருப்பெடுப்புற்றவன் பொன்முடிதோள் இறத்தா ளொருவிர லூன்றிட் டலற விரங்கியொள்வாள் குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் கொடுவினைநோய் செறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.109  
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று
பண் - திருவிருத்தம் (திருத்தலம் திருத்தூங்கானைமாடம் ; அருள்தரு கருணைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மால்வணங்குமீசர் திருவடிகள் போற்றி )
திருப்பெண்ணாகடத்துத் தூங்கானைமாடம் என்னும் திருக் கோயிலில் உள்ள பெருமானைப் பணிந்து சமண் சமயத் தொடக்குண்ட உடல் தூய்மைபெற இடபக்குறி சூலக்குறி பொறித்தருள வேண்டினார். பொன்னார் திருவடிக்கு என்று தொடங்கித் திருவடிக்கு விண்ணப்ப மும் தெரிவித்தார். இறைவன் திருவருளால் சிவபூதம் ஒன்று வந்து திருநாவுக்கரசர் தோள்களில் இடபக்குறி சூலக்குறி பொறித்தது. திருநாவுக்கரசர் சிவபிரான் திருவருளை வியந்து மகிழ்ந்து உய்ந்தேன் என்று பணிந்தார்.
கடந்த கால துயற சம்பவங்களில் இருந்து மீள Audio: https://www.youtube.com/watch?v=PjnXvyDvdyM
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல் துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே. | [1] |
ஆவா சிறுதொண்ட னென்னினைந் தானென் றரும்பிணிநோய் காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி காதல்செய்வார் தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் தாமரையின் பூவார் கடந்தையுட் டூங்கானை மாடத்தெம் புண்ணியனே. | [2] |
இப்பாடல் கிடைக்கவில்லை. | [3] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.001  
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பண் - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
சிவபெருமான் திருவருளால், பெண்ணாகடம் தலத்தில் தனது உடலில் சூலம் மற்றும் இடபக் குறிகள் பொறிக்கப் பெற்ற பின்னர் அப்பர் பிரான் தில்லை வந்தடைந்தார். பத்தனாய் பாடமாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடி சில நாட்கள் தில்லைப் பதியில் உழவாரப் பணி செய்துவந்தார். சிவபிரான் தன்னுடன் நேரில் பேசி அருளியதால் மிகவும் அகமகிழ்ந்த அப்பர் பிரான், தில்லையில் உழவாரப் பணிகள் செய்த போது பாடிய பதிகம் இது. உள்ளத்தில் இருந்து எழுந்த அன்பொடு செய்யப்பட்ட பணி என்பதால், கண்களிலிருந்து பொழிந்த ஆனந்தக் கண்ணீர், உடலில் பூசப்பட்டிருந்த திருநீற்றுடன் கலந்து வண்டலாக மாறியது என்று சேக்கிழார் கூறுகின்றார். சிதம்பரத்தில் அன்னதானம் இன்றும் சிறப்பாக நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பிரான் காலத்திலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று இருக்கவேண்டும் அதனால் தான் அன்னம் பாலிக்கும் என்று இந்தப் பதிகத்தினை தொடங்குகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தினமும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் கோயில் தில்லைச் சிற்றம்பலம்.
சாப்பாடு குறைவின்றி கிடைக்க. உணவிற்கு முன் கூற வேண்டிய பாடல். Audio: https://www.youtube.com/watch?v=X012Z-pSPW4
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே. | [1] |
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர் சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன் பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே. | [2] |
அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர் எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர் சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம் திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே. | [3] |
அல்ல லென்செயும் அருவினை யென்செயும் தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க் கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே. | [4] |
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம் நான்நி லாவி யிருப்பனென் னாதனைத் தேன்நி லாவிய சிற்றம் பலவனார் வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே. | [5] |
சிட்டர் வானவர் சென்று வரங்கொளும் சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச் சிட்டர் பாலணு கான்செறு காலனே. | [6] |
ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர் திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார் விருத்த னாரிளை யார்விட முண்டவெம் அருத்த னாரடி யாரை யறிவரே. | [7] |
விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு எண்நி றைந்த இருவர்க் கறிவொணாக் கண்நி றைந்த கடிபொழி லம்பலத் துள்நி றைந்துநின் றாடு மொருவனே. | [8] |
வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம் வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன் தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே. | [9] |
நாடி நாரணன் நான்முக னென்றிவர் தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத் தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே. | [10] |
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன் சதுரன் சிற்றம் பலவன் திருமலை அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.002  
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
பண் - திருக்குறுந்தொகை வாசஸ்பதி சிவரஞ்சனி
(திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
அன்னம் பாலிக்கும் என்று தொடங்கும் பதிகத்தையும் பாடிய பின்னர், அருகில் இருக்கும் வேட்களம், கழிப்பாலை ஆகிய தலங்களில் உள்ள இறைவனை வழிபட்டு, பதிகங்கள் அருளிய பின்னர் மறுபடியும் தில்லைக் கூத்தனைக் காண ஆர்வம் கொண்டார். கழிப்பாலைத் தலத்திலிருந்து தில்லை வரும் வழியில், தில்லைப் பெருமானை மறந்து வாழ்வினில் உய்வினை அடைய முடியாது என்ற பொருள் படும் இந்த பதிகத்தைப் பாடியவாறே தில்லை வந்து சேர்கின்றார். Audio: https://www.youtube.com/watch?v=8AFLlyMIz3k
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன் நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன் அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத் தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ. | [1] |
தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை மூர்த்தி யைமுத லாய ஒருவனைப் பார்த்த னுக்கருள் செய்தசிற் றம்பலக் கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ. | [2] |
கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி இட்ட மாயிடு காட்டெரி யாடுவான் சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ. | [3] |
மாணி பால்கறந் தாட்டி வழிபட நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவென் ஆணியைச் செம்பொ னம்பலத் துள்நின்ற தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ. | [4] |
பித்த னைப்பெருங் காடரங் காவுடை முத்த னைமுளை வெண்மதி சூடியைச் சித்தனைச் செம்பொ னம்பலத் துள்நின்ற அத்த னையடி யேன்மறந் துய்வனோ. | [5] |
நீதி யைநிறை வைமறை நான்குடன் ஓதி யையொரு வர்க்கும் அறிவொணாச் சோதி யைச்சுடர்ச் செம்பொனி னம்பலத் தாதி யையடி யேன்மறந் துய்வனோ. | [6] |
மைகொள் கண்டனெண் தோளன்முக் கண்ணினன் பைகொள் பாம்பரை யார்த்த பரமனார் செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள் ஐய னையடி யேன்மறந் துய்வனோ. | [7] |
முழுதும் வானுல கத்துள தேவர்கள் தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால் எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை இழுதை யேன்மறந் தெங்ஙன முய்வனோ. | [8] |
காரு லாமலர்க் கொன்றையந் தாரனை வாரு லாமுலை மங்கைம ணாளனைத் தேரு லாவிய தில்லையுட் கூத்தனை ஆர்கி லாஅமு தைமறந் துய்வனோ. | [9] |
ஓங்கு மால்வரை யேந்தலுற் றான்சிரம் வீங்கி விம்முற வூன்றிய தாளினான் தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப் பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.010  
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
திருப்புகலூரில் சந்தித்துக் கொண்ட அப்பர் பிரானும், ஞானசம்பந்தப் பெருமானும் திருவீழிமிழலை முதலான பல தலங்களுக்கு, இருவரும் சேர்ந்து சென்றனர். பல தலங்கள் சேர்ந்து தரிசித்த பின்னர் இருவரும் திருமறைக்காடு வந்தடைந்தனர். அப்பர் பிரானும் திருஞான சம்பந்தரும் தங்களது ஊருக்கு வரும் செய்தியினை அறிந்த, திருமறைக்காடு தலத்தில் இருந்த அடியவர்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருவரையும் வரவேற்றனர். கோயிலின் வெளி வாயில் வழியாக உட்புகுந்த இருவரும், திருக்கோயிலை வலம் வந்து உள்வாயில் வந்து சேர்ந்தனர். உள்வாயில் அடைத்து இருப்பதை கண்ணுற்ற இருவரும் வாயிலை வணங்கி நின்றனர். பண்டைய நாளில், வேதங்கள் சிவபிரானை வழிபட்ட பின்னர், கோயில் வாயிற்கதவுகளை திருக்காப்பிட்டு மூடிய நாள் முதலாக, அந்த கதவுகள் மூடியே இருப்பதாக அருகே இருந்த அடியார்கள் கூறினார்கள். மறைகள் ஓதும் பெருமையுடைய அன்பர்கள் பலர் முயன்றும், மூடிய கதவுகள் திறக்கப்படவில்லை என்று கூறிய அடியார்கள், தாங்கள் அனைவரும் திட்டிவாசல் எனப்படும் அருகிலிருந்த சிறிய வாயில் வழியாக திருக்கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபாட்டு வருவதாக கூறினார்கள். இதனைக் கேட்ட ஞானசம்பந்தப் பெருமான் அப்பர் பிரானிடம், தாங்கள் இருவரும் எந்த விதத்திலாவது சிவபிரானிடம் வேண்டி, அடைக்கப்பட்டுள்ள கோயில் கதவுகள் திறக்க வேண்டி இறைவனின் அருளினை நாடி செந்தமிழ்ப் பாடல்கள் பாடவேண்டும் என்று உரைத்தார். அப்பர் பிரான் உடனே ஆளுடையப் பிள்ளையாரை நோக்கி, கதவு திறப்பதற்காக நான் பாடவேண்டும் என்று நீர் விரும்பினால் நான் அவ்வாறே செய்வேன் என்று கூறினார். Audio: https://www.youtube.com/watch?v=2sD4CmYuQBw
பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. | [1] |
ஈண்டு செஞ்சடை யாகத்து ளீசரோ மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும் நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே. | [2] |
அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ சட்ட விக்கத வந்திறப் பிம்மினே. | [3] |
அரிய நான்மறை யோதிய நாவரோ பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ விரிகொள் கோவண ஆடைவிருத்தரோ பெரிய வான்கத வம்பிரி விக்கவே. | [4] |
மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ விலையில் மாமணி வண்ண வுருவரோ தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே. | [5] |
பூக்குந் தாழை புறணி யருகெலாம் ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ ஆர்க்குங் காண்பரி யீரடி கேளுமை நோக்கிக் காணக் கதவைத் திறவுமே. | [6] |
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ அந்த மில்லி யணிமறைக் காடரோ எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட இந்த மாக்கத வம்பிணி நீக்குமே. | [7] |
ஆறு சூடும் அணிமறைக் காடரோ கூறு மாதுமைக் கீந்த குழகரோ ஏற தேறிய எம்பெரு மானிந்த மாறி லாக்கத வம்வலி நீக்குமே. | [8] |
சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ பண்ணி யேறுகந் தேறும் பரமரோ அண்ண லாதி யணிமறைக் காடரோ திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே. | [9] |
விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. | [10] |
அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர் இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ சரக்க விக்கத வந்திறப் பிம்மினே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.042  
நன்று நாள்தொறும் நம் வினை
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருவேட்களம் ; அருள்தரு நல்லநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாசுபதேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=XxDlzhksrI0
நன்று நாடொறும் நம்வினை போயறும் என்று மின்பந் தழைக்கவி ருக்கலாம் சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை துன்று பொற்சடை யானைத் தொழுமினே. | [1] |
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன் பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன் விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு திருப்ப னாகி லெனக்கிட ரில்லையே. | [2] |
வேட்க ளத்துறை வேதிய னெம்மிறை ஆக்க ளேறுவ ரானைஞ்சு மாடுவர் பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால் காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே. | [3] |
அல்ல லில்லை அருவினை தானில்லை மல்கு வெண்பிறை சூடும் மணாளனார் செல்வ னார்திரு வேட்களங் கைதொழ வல்ல ராகில் வழியது காண்மினே. | [4] |
துன்ப மில்லை துயரில்லை யாமினி நம்ப னாகிய நன்மணி கண்டனார் என்பொ னாருறை வேட்கள நன்னகர் இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே. | [5] |
கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர் சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப் பட்ட வல்வினை யாயின பாறுமே. | [6] |
வட்ட மென்முலை யாளுமை பங்கனார் எட்டு மொன்று மிரண்டுமூன் றாயினார் சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு திட்ட மாகி யிருமட நெஞ்சமே. | [7] |
நட்ட மாடிய நம்பனை நாள்தொறும் இட்டத் தாலினி தாக நினைமினோ வட்ட வார்முலை யாளுமை பங்கனார் சிட்ட னார்திரு வேட்களந் தன்னையே. | [8] |
வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண் சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே. | [9] |
சேட னாருறை யுஞ்செழு மாமலை ஓடி ஆங்கெடுத் தான்முடி பத்திற வாட வூன்றி மலரடி வாங்கிய வேட னாருறை வேட்களஞ் சேர்மினே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.053  
கோணல் மா மதி சூடி,
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=orTB0gkFolM
கோணன் மாமதி சூடியோர் கோவணம் நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே. | [1] |
பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி அண்ண லையம ரர்தொழு மாதியைச் சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம் நண்ணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே. | [2] |
உற்ற வர்தம் உறுநோய் களைபவர் பெற்ற மேறும் பிறங்கு சடையினர் சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டம் கற்கி லல்லதென் கண்துயில் கொள்ளுமே. | [3] |
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டம் கற்றா லல்லதென் கண்துயில் கொள்ளுமே. | [4] |
பல்லா ரும்பல தேவர் பணிபவர் நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன் வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டம் கல்லே னாகிலென் கண்துயில் கொள்ளுமே. | [5] |
வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக் கொண்டான் கோல மதியோ டரவமும் விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டம் கண்டா லல்லதென் கண்துயில் கொள்ளுமே. | [6] |
அரையார் கோவண ஆடைய னாறெலாந் திரையா ரொண்புனல் பாய்கெடி லக்கரை விரையார் நீற்றன் விளங்குவீ ரட்டன்பால் கரையே னாகிலென் கண்துயில் கொள்ளுமே. | [7] |
நீறு டைத்தடந் தோளுடை நின்மலன் ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை ஏறு டைக்கொடி யான்திரு வீரட்டம் கூறி லல்லதென் கண்துயில் கொள்ளுமே. | [8] |
செங்கண் மால்விடை யேறிய செல்வனார் பைங்க ணானையி னீருரி போர்த்தவர் அங்கண் ஞாலம தாகிய வீரட்டம் கங்கு லாகவென் கண்துயில் கொள்ளுமே. | [9] |
பூணா ணாரம் பொருந்த வுடையவர் நாணா கவ்வரை வில்லிடை யம்பினால் பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டம் காணே னாகிலென் கண்துயில் கொள்ளுமே. | [10] |
வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கம் திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம் உரையே னாகிலென் கண்துயில் கொள்ளுமே. | [11] |
உலந்தார் வெண்தலை உண்கல னாகவே வலந்தான் மிக்கவவ் வாளரக் கன்றனைச் சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம் புலம்பே னாகிலென் கண்துயில் கொள்ளுமே. | [12] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.067  
படையும் பூதமும் பாம்பும் புல்வாய்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருவாஞ்சியம் ; அருள்தரு வாழவந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு வாஞ்சியநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=ovtRQxKv5ZE
படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள் உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம் புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம் அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே. | [1] |
பறப்பை யும்பசு வும்படுத் துப்பல திறத்த வும்முடை யோர்திக ழும்பதி கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே. | [2] |
புற்றில் ஆடர வோடு புனல்மதி தெற்று செஞ்சடைத் தேவர்பி ரான்பதி சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம் பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே. | [3] |
அங்க மாறும் அருமறை நான்குடன் தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர் செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியம் தங்கு வார்நம் அமரர்க் கமரரே. | [4] |
நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை ஆறு சூடும் அடிக ளுறைபதி மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியம் தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே. | [5] |
அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க் குற்ற நற்றுணை யாவா னுறைபதி தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம் கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே. | [6] |
இப்பாடல் கிடைக்கவில்லை. | [7] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.075  
மரக் கொக்குஆம் என வாய்விட்டு
பண் - திருக்குறுந்தொகை ஹரிகாம்போஜி தேஷ் (திருத்தலம் திருக்குரக்குக்கா ; அருள்தரு கொந்தளநாயகியம்மை உடனுறை அருள்மிகு கொந்தளக்கருணைநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=Ph5jvuLnL0Q
மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர் சரக்குக் காவித் திரிந்தய ராதுகால் பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக் குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே. | [1] |
கட்டா றேகழி காவிரி பாய்வயல் கொட்டா றேபுன லூறு குரக்குக்கா முட்டா றாஅடி யேத்த முயல்பவர்க் கிட்டா றாஇட ரோட எடுக்குமே. | [2] |
கைய னைத்துங் கலந்தெழு காவிரி செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல் கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே. | [3] |
மிக்க னைத்துத் திசையும் அருவிகள் புக்குக் காவிரி போந்த புனற்கரைக் கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா நக்க னைநவில் வார்வினை நாசமே. | [4] |
விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி இட்ட நீர்வய லெங்கும் பரந்திடக் கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா இட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே. | [5] |
மேலை வானவ ரோடு விரிகடல் மாலும் நான்முக னாலும் அளப்பொணாக் கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப் பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே. | [6] |
ஆல நீழ லமர்ந்த அழகனார் கால னையுதை கொண்ட கருத்தனார் கோல மஞ்ஞைக ளாலுங் குரக்குக்காப் பால ருக்கருள் செய்வர் பரிவொடே. | [7] |
செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார் அக்க ரையரெம் மாதி புராணனார் கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா நக்க னைத்தொழ நம்வினை நாசமே. | [8] |
உருகி யூன்குழைந் தேத்தி யெழுமின்நீர் கரிய கண்டன் கழலடி தன்னையே குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா இரவு மெல்லியு மேத்தித் தொழுமினே. | [9] |
இரக்க மின்றி மலையெடுத் தான்முடி உரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடம் குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா வரத்த னைப்பெற வானுல காள்வரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.077  
பூரியா வரும், புண்ணியம்; பொய்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருச்சேறை (உடையார்கோவில்) ; அருள்தரு ஞானவல்லியம்மை உடனுறை அருள்மிகு சென்னெறியப்பர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=lrthL1RMyoY
பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும் கூரி தாய அறிவுகை கூடிடும் சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி நாரி பாகன்றன் நாம நவிலவே. | [1] |
என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே மின்னு வார்சடை வேத விழுப்பொருள் செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி மன்னு சோதிநம் பால்வந்து வைகவே. | [2] |
பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும் சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல் மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே. | [3] |
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர் ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள் சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய ஆட லான்தன் அடியடைந் துய்ம்மினே. | [4] |
எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன் துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன் திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே. | [5] |
தப்பி வானந் தரணிகம் பிக்கிலென் ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென் செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே. | [6] |
வைத்த மாடும் மடந்தைநல் லார்களும் ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார் சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை அத்தர் தாமுள ரஞ்சுவ தென்னுக்கே. | [7] |
குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே. | [8] |
பழகி னால்வரும் பண்டுள சுற்றமும் விழவிடா விடில் வேண்டிய எய்தொணா திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே. | [9] |
பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான் வருந்த வூன்றி மலரடி வாங்கினான் திருந்து சேறையிற் செந்நெறி மேவியங் கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.078  
சங்கு உலாம் முன்கைத் தையல்
பண் - திருக்குறுந்தொகை ஹரிகாம்போஜி தேஷ் (திருத்தலம் திருக்கோடி (கோடிக்கரை) ; அருள்தரு வடிவாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு கோடீசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=mJZCB9wqOjk
சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன் வெங்கு லாமத வேழம் வெகுண்டவன் கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென எங்கி லாததோ ரின்பம்வந் தெய்துமே. | [1] |
வாடி வாழ்வதென் னாவது மாதர்பால் ஓடி வாழ்வினை யுள்கிநீர் நாடொறும் கோடி காவனைக் கூறீரேற் கூறினேன் பாடி காவலிற் பட்டுக் கழிதிரே. | [2] |
முல்லை நன்முறு வல்லுமை பங்கனார் தில்லை யம்பலத் தில்லுறை செல்வனார் கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங் கொல்லை யேத்துவார்க் கூனமொன் றில்லையே. | [3] |
நாவ ளம்பெறு மாறும னன்நன்னுதல் ஆம ளஞ்சொலி யன்புசெ யின்னலால் கோம ளஞ்சடைக் கோடிகா வாவென ஏவ ளின்றெனை யேசுமவ் வேழையே. | [4] |
வீறு தான்பெறு வார்சில ராகிலும் நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேல் கூறு வேன்கோடி காவுளா யென்றுமால் ஏறு வேன்நும்மா லேசப் படுவனோ. | [5] |
நாடி நாரணன் நான்முகன் வானவர் தேடி யேசற வுந்தெரி யாததோர் கோடி காவனைக் கூறாத நாளெலாம் பாடி காவலிற் பட்டுக் கழியுமே. | [6] |
இப்பாடல் கிடைக்கவில்லை. | [7] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.085  
மட்டு வார்குழலாளொடு மால்விடை இட்டமா
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் திருச்சிராப்பள்ளி ; அருள்தரு மட்டுவார்குழலம்மை உடனுறை அருள்மிகு தாயுமானேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=n9abER-qR0M
மட்டு வார்குழ லாளொடு மால்விடை இட்ட மாவுகந் தேறு மிறைவனார் கட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயும் சிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே. | [1] |
அரிய யன்தலை வெட்டிவட் டாடினார் அரிய யன்தொழு தேத்து மரும்பொருள் பெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார் அரிய யன்தொழ அங்கிருப் பார்களே. | [2] |
அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள் திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. | [3] |
இப்பாடல் கிடைக்கவில்லை. | [4] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.090  
மாசு இல் வீணையும், மாலை
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் பொது -தனித் திருக்குறுந்தொகை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தனது தமக்கையார் பின்பற்றும் சைவ சமயத்தைச் சாரவேண்டும் என்பதற்காக தருமசேனர், சூலை நோய் வந்தது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றியதாகவும், சைவ சமயம் சார்ந்ததன் பின்னர் சமண மதத்தை இழிவாக பேசுவதாகவும் மன்னனிடம் முறையிட்ட குருமார்கள், அவரை அழைத்து மன்னன் விசாரணை செய்யவேண்டும் என்று கோரினார்கள். மன்னனும் தனது மந்திரியையும் காவலர்களையும் திருநாவுக்கரசரை விசாரணை செய்ய அழைத்து வர அனுப்பினான். திருவதிகை சென்ற அமைச்சர் திருநாவுக்கரசரை சந்தித்த போது, அவர் நாமார்க்கும் குடியல்லோம் என்று முழங்கினார். தான் துறவி என்பதால் எந்த அரசரின் ஆணையும் தன்னைக் கட்டுபடுத்தாது என்றும், தான் எவருக்கும் குடிமகன் அல்ல என்பதையும் தெரிவித்த திருநாவுக்கரசர் முதலில் மன்னனைக் காண மறுத்தார். அவரை அழைத்துச் செல்லாவிடின் தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்று அவரிடம் தெரிவித்த அமைச்சர், தங்களது உயிரினைக் காப்பாற்றும் பொருட்டு நாவுக்கரசு பெருமானை தங்களுடன் வருமாறு வேண்டவே, நாவுக்கரசர் அவர்களுடன் மன்னனை சந்திக்கச் சென்றார். இதனிடையில் சமண குருமார்கள் நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாய்) இடுவதே அவர் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை என்று மன்னனிடம் கூறவே, மன்னனும் அந்த தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டான். நீற்றறையின் உள்ளே அடிகளாரை இருத்தி, வெளியே தாளிட்டு காவலுக்கு ஆட்களையும் மன்னன் நியமித்தான். நாயனார் ஈசன் அடியவருக்கு துன்பங்களும் வருமோ என்ற நம்பிக்கையில், நீற்றறையின் உள்ளே அமர்ந்தபடியே இந்தப் பதிகத்தை பாடினார். Audio: https://www.youtube.com/watch?v=J7MfBAIcQ04
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே. | [1] |
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. | [2] |
ஆளா காரா ளானாரை யடைந் துய்யார் மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் தோளா தசுரை யோதொழும் பர்செவி வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே. | [3] |
நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர் சுடலை சேர்வது சொற்பிர மாணமே கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால் உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே. | [4] |
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே. | [5] |
குறிக ளும்மடை யாளமுங் கோயிலும் நெறிக ளும்மவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் பொறியீ லீர்மன மென்கொல் புகாததே. | [6] |
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. | [7] |
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண் டுழுத சால்வழி யேயுழு வான்பொருட் டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே. | [8] |
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே. | [9] |
விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.092  
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் பொது -காலபாசத் திருக்குறுந்தொகை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=B9FQAcbnw-g
கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப் பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல் கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக் கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே. | [1] |
நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பர்க்குக் கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக் கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே. | [2] |
கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான் சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார் ஆர்க ளாகிலு மாக அவர்களை நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே. | [3] |
சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன் சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி ஆற்ற வுங்களிப் பட்ட மனத்தராய்ப் போற்றி யென்றுரைப் பார்புடை போகலே. | [4] |
இறையென் சொல்மற வேல்நமன் தூதுவீர் பிறையும் பாம்பு முடைப்பெரு மான்தமர் நறவம் நாறிய நல்நறுஞ் சாந்திலும் நிறைய நீறணி வாரெதிர் செல்லலே. | [5] |
வாம தேவன் வளநகர் வைகலும் காம மொன்றில ராய்க்கை விளக்கொடு தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும் ஏம மும்புனை வாரெதிர் செல்லலே. | [6] |
படையும் பாசமும் பற்றிய கையினீர் அடையன் மின்நம தீச னடியரை விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம் புடைபு காதுநீர் போற்றியே போமினே. | [7] |
விச்சை யாவதும் வேட்கைமை யாவதும் நிச்சல் நீறணி வாரை நினைப்பதே அச்ச மெய்தி யருகணை யாதுநீர் பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே. | [8] |
இன்னங் கேண்மி னிளம்பிறை சூடிய மன்னன் பாதம் மனத்துட னேத்துவார் மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம் தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே. | [9] |
மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச் சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம் ஒற்றை யேறுடை யானடி யேயலால் பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே. | [10] |
அரக்க னீரைந் தலையுமோர் தாளினால் நெருக்கி யூன்றியிட் டான்தமர் நிற்கிலும் சுருக்கெ னாதங்குப் பேர்மின்கண் மற்றுநீர் சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.100  
வேத நாயகன்; வேதியர் நாயகன்; மாதின்
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் பொது -ஆதிபுராணத் திருக்குறுந்தொகை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=lk4SHPhE4ng
வேத நாயகன் வேதியர் நாயகன் மாதின் நாயகன் மாதவர் நாயகன் ஆதி நாயக னாதிரை நாயகன் பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. | [1] |
செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ அத்த னென்றரி யோடு பிரமனும் துத்தி யஞ்செய நின்றநற் சோதியே. | [2] |
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறி லாதவன் ஈச னொருவனே. | [3] |
வாது செய்து மயங்கும் மனத்தராய் ஏது சொல்லுவீ ராகிலு மேழைகாள் யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம் மாதே வன்னலால் தேவர்மற் றில்லையே. | [4] |
கூவ லாமை குரைகட லாமையைக் கூவ லோடொக்கு மோகட லென்றல்போல் பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால் தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே. | [5] |
பேய்வ னத்தமர் வானைப் பிரார்த்தித்தார்க் கீவ னையிமை யோர்முடி தன்னடிச் சாய்வ னைச்சல வார்கள் தமக்குடல் சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே. | [6] |
எரிபெ ருக்குவ ரவ்வெரி யீசன துருவ ருக்கம தாவ துணர்கிலார் அரிய யற்கரி யானை யயர்த்துபோய் நரிவி ருத்தம தாகுவர் நாடரே. | [7] |
அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில் அருக்க னாவா னரனுரு வல்லனோ இருக்கு நான்மறை யீசனை யேதொழும் கருத்தி னைநினை யார்கன் மனவரே. | [8] |
தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர் ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார் பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே. | [9] |
அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள் பெருக்கச் செய்த பிரான் பெருந் தன்மையை அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர் கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.001  
அரியானை, அந்தணர் தம் சிந்தை
பண் - பெரியதிருத்தாண்டகம் (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு சிவகாமியம்மை உடனுறை அருள்மிகு திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=OC5AJDOyUGs
அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. | [1] |
கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக் காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை வானவர்க ளெப்பொழுதும் வணங்கி ஏத்தப் பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. | [2] |
கருமானின் உரியதளே உடையா வீக்கிக் கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. | [3] |
அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும் திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந் திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. | [4] |
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகன்ஞாலத் தகத்துள் தோன்றி வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும் பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப் பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும் பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. | [5] |
கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக் கனவயிரக் குன்றனைய காட்சி யானை அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை அருமறையோ டாறங்க மாயி னானைச் சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச் சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. | [6] |
வரும்பயனை எழுநரம்பி னோசை யானை வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் தன்னைச் சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப் பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. | [7] |
காரானை யீருரிவைப் போர்வை யானைக் காமருபூங் கச்சியே கம்பன் தன்னை ஆரேனும் அடியவர்கட் கணியான் தன்னை அமரர்களுக் கறிவரிய அளவி லானைப் பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில் பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. | [8] |
முற்றாத பால்மதியஞ் சூடி னானை மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச் செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத் திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக் குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக் கூத்தாட வல்லானைக் கோனை ஞானம் பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. | [9] |
காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங் கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணம் சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.006  
அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்)
பண் - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=EudEaUvuF4k
அரவணையான் சிந்தித் தரற்றும்மடி அருமறையான் சென்னிக் கணியாமடி சரவணத்தான் கைதொழுது சாரும்மடி சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி பரவுவார் பாவம் பறைக்கும்மடி பதினெண் கணங்களும் பாடும்மடி திரைவிரவு தென்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. | [1] |
கொடுவினையா ரென்றுங் குறுகாவடி குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி படுமுழவம் பாணி பயிற்றும்மடி பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி கடல்வையங் காப்பான் கருதும்மடி நெடுமதியங் கண்ணி யணிந்தானடி நிறைகெடில வீரட்டம் நீங்காவடி. | [2] |
வைதெழுவார் காமம்பொய் போகாவடி வஞ்ச வலைப்பாடொன் றில்லாவடி கைதொழுது நாமேத்திக் காணும்மடி கணக்கு வழக்கைக் கடந்தவடி நெய்தொழுது நாமேத்தி ஆட்டும்மடி நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி தெய்வப் புனற்கெடில நாடன்னடி திருவீரட் டானத் தெஞ் செல்வன்னடி. | [3] |
அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி அழகெழுத லாகா அருட்சேவடி சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. | [4] |
ஒருகாலத் தொன்றாகி நின்றவடி ஊழிதோ றூழி உயர்ந்தவடி பொருகழலும் பல்சிலம்பும் மார்க்கும்மடி புகழ்வார் புகழ்தகைய வல்லவடி இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி திருவதிகைத் தென்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. | [5] |
திருமகட்குச் செந்தா மரையாமடி சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி புகழ்வார் புகழ்தகைய வல்லவடி உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி உருவென் றுணரப் படாதவடி திருவதிகைத் தென்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. | [6] |
உரைமாலை யெல்லா முடையவடி உரையா லுணரப் படாதவடி வரைமாதை வாடாமை வைக்கும்மடி வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி அரைமாத் திரையி லடங்கும்மடி அகலம் அளக்கிற்பா ரில்லாவடி கரைமாங் கலிக்கெடில நாடன்னடி கமழ்வீரட்டானக் கபாலியடி. | [7] |
நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி நடுவா யுலகநா டாயவடி செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி மறுமதியை மாசு கழுவும்மடி மந்திரமுந் தந்திரமும் ஆயவடி செறிகெடில நாடர் பெருமானடி திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. | [8] |
அணியனவுஞ் சேயனவு மல்லாவடி யடியார்கட் காரமுத மாயவடி பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி பற்றற்றார் பற்றும் பவளவடி மணியடி பொன்னடி மாண்பாமடி மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி தணிபாடு தண்கெடில நாடன்னடி தகைசார்வீ ரட்டத் தலைவன்னடி. | [9] |
அந்தா மரைப்போ தலர்ந்தவடி அரக்கனையும் ஆற்ற லழித்தவடி முந்தாகி முன்னே முளைத்தவடி முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தியடி பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி பவளத் தடவரையே போல்வானடி வெந்தார் சுடலைநீ றாடும்மடி வீரட்டங் காதல் விமலன்னடி. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.018  
வடி ஏறு திரிசூலம் தோன்றும்
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருப்பூவணம் ; அருள்தரு மின்னாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு பூவணநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=CSi8Ue29CLI
வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. | [1] |
ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும் அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும் ஊணாகி யூர்திரிவா னாகித் தோன்றும் ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேல் சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ் செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. | [2] |
கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங் கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும் சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும் அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும் பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. | [3] |
படைமலிந்த மழுவாளும் மானுந் தோன்றும் பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும் நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும் நான்மறையி னொலிதோன்றும் நயனந் தோன்றும் உடைமலிந்த கோவணமும் கீளுந் தோன்றும் மூரல்வெண் சிரமாலை யுலாவித் தோன்றும் புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. | [4] |
மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும் மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும் இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும் இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றும் கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும் புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. | [5] |
பாராழி வட்டத்தார் பரவி யிட்ட பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும் சீராழித் தாமரையின் மலர்க ளன்ன திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும் ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன் உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று போராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. | [6] |
தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ் சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும் மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும் வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும் துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந் தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும் பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. | [7] |
செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றுந் திரிபுரத்தை யெரிசெய்த சிலையுந் தோன்றும் நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும் நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும் மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும் மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும் பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. | [8] |
அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும் அணிகிளரு முருமென்ன அடர்க்குங் கேழல் மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும் மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ் செக்கர்வா னொளிமிக்குத் திகழ்ந்த சோதிப் பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. | [9] |
ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி யன்று தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும் பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று பலபிறவி யறுத்தருளும் பரிசுந் தோன்றும் கோங்கணைந்த கூவிளமும் மதமத் தம்முங் குழற்கணிந்த கொள்கையொடுகோலந் தோன்றும் பூங்கணைவே ளுருவழித்த பொற்புத் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. | [10] |
ஆருருவ உள்குவார் உள்ளத் துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும் வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவந் தோன்றும் நீருருவக் கடலிலங்கை யரக்கர் கோனை நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும் போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.019  
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருஆலவாய் (மதுரை) ; அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=XBV0vMkPOq4
முளைத்தானை யெல்லார்க்கும் முன்னே தோன்றி முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள் வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும் வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் துளைத்தானைச் சுடுசரத்தால் துவள நீறாத் தூமுத்த வெண்முறுவ லுமையோ டாடித் திளைத்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. | [1] |
விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப் பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப் பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக் கரந்துமையோ டுடனாகி யிருந்தான் தன்னைத் தெண்ணிலவு தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. | [2] |
நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை நிலமருவி நீரோடக் கண்டான் தன்னைப் பாற்றிரளைப் பயின்றாட வல்லான் தன்னைப் பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் தன்னைக் காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று கடுங்குரலா யிடிப்பானைக் கண்ணோர் நெற்றித் தீத்திரளைத் தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. | [3] |
வானமிது வெல்லா முடையான் தன்னை வரியரவக் கச்சானை வன்பேய் சூழக் கானமதில் நடமாட வல்லான் தன்னைக் கடைக்கண்ணால் மங்கையையு நோக்கா வென்மேல் ஊனமது வெல்லா மொழித்தான் தன்னை யுணர்வாகி யடியேன துள்ளே நின்ற தேனமுதைத் தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. | [4] |
ஊரானை யுலகேழாய் நின்றான் தன்னை யொற்றைவெண் பிறையானை யுமையோ டென்றும் பேரானைப் பிறர்க்கென்று மரியான் தன்னைப் பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும் ஆரானை அமரர்களுக் கமுதீந் தானை அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும் சீரானைத் தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. | [5] |
மூவனை மூர்த்தியை மூவா மேனி யுடையானை மூவுலகுந் தானே யெங்கும் பாவனைப் பாவ மறுப்பான் தன்னைப் படியெழுத லாகாத மங்கை யோடு மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த தேவனைத் தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. | [6] |
துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைத் துன்பந் துடைத்தாள வல்லான் தன்னை இறந்தார்க ளென்பே யணிந்தான் தன்னை யெல்லி நடமாட வல்லான் தன்னை மறந்தார் மதில்மூன்றும் மாய்த்தான் தன்னை மற்றொருபற் றில்லா அடியேற் கென்றும் சிறந்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. | [7] |
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத் தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச் சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென் தாயானைத் தவமாய தன்மை யானைத் தலையாய தேவாதி தேவர்க் கென்றும் சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. | [8] |
பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் தன்னைப் பழியிலியாய் நஞ்சுண் டமுதீந் தானை வகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை மிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை மேலாய தேவாதி தேவர்க் கென்றும் திகைச்சுடரைத் தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. | [9] |
மலையானை மாமேரு மன்னி னானை வளர்புன் சடையானை வானோர் தங்கள் தலையானை யென்தலையி னுச்சி யென்றுந் தாபித் திருந்தானைத் தானே யெங்கும் துலையாக வொருவரையு மில்லா தானைத் தோன்றாதார் மதில்மூன்றுந் துவள எய்த சிலையானைத் தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. | [10] |
தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் தன்னைத் தொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய் தானைப் பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் தன்னைப் பரிந்தவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை ஆத்தனை யடியேனுக் கன்பன் தன்னை யளவிலாப் பல்லூழி கண்டு நின்ற தீர்த்தனைத் தென்கூடல் திருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.032  
கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
பண் - போற்றித்திருத்தாண்டகம் (திருத்தலம் திருவாரூர் ; அருள்தரு கரும்பனையாளம்மை உடனுறை அருள்மிகு முல்லைவனேசுவரர் திருவடிகள் போற்றி )
சிவார்ச்சனை Audio: https://www.youtube.com/watch?v=c0llPrAgTrM
கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. | [1] |
வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி மதயானை யீருரிவை போர்த்தாய் போற்றி கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி கொல்புலித் தோலாடைக் குழகா போற்றி அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. | [2] |
மலையான் மடந்தை மணாளா போற்றி மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றிமேல் ஒற்றைக்கண் ணுடையாய் போற்றி இலையார்ந்த மூவிலைவே லேந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலு மானாய் போற்றி சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. | [3] |
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி பூதப் படையுடையாய் போற்றி போற்றி மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி மறியேந்து கையானே போற்றி போற்றி உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி உலகுக் கொருவனே போற்றி போற்றி சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. | [4] |
நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. | [5] |
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி அங்கமலத் தயனோடு மாலுங் காணா அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. | [6] |
வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி நால்வேதம் ஆறங்க மானாய் போற்றி செம்பொனே மரகதமே மணியே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. | [7] |
உள்ளமா யுள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. | [8] |
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி திருமாலுக் காழி யளித்தாய் போற்றி சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. | [9] |
பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி அருமந்த தேவர்க் கரசே போற்றி யன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ் சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.054  
ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு; அடியோடு
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்) ; அருள்தரு தையல்நாயகியம்மை உடனுறை அருள்மிகு வைத்தியநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=mpXiqrBMFK4
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு அடியோடு முடியயன்மா லறியா வண்ணம் நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை நேமிவான் படையால்நீ ளுரவோன் ஆகங் கீண்டானைக் கேதாரம் மேவி னானைக் கேடிலியைக் கிளர்பொறிவா ளரவோ டென்பு பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | [1] |
சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே திகழ்ந்தானைச் சிவன்தன்னைத் தேவதேவைக் கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக் குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம் பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப் பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப் போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | [2] |
பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித் தானை எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும் அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப் புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | [3] |
இருளாய வுள்ளத்தி னிருளை நீக்கி யிடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற் சிவலோக நெறியறியச் சிந்தை தந்த அருளானை ஆதிமா தவத்து ளானை ஆறங்க நால்வேதத் தப்பால் நின்ற பொருளானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே. | [4] |
மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத் தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த் தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப் பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | [5] |
அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை அம்பலத்துள் நடமாடும் அழகன் தன்னைக் கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக் கடல்நாகைக் காரோணங் கருதி னானை இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | [6] |
நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி இருப்பவனை யிடைமருதோ டீங்கோய் நீங்கா இறையவனை யெனையாளுங் கயிலை யென்னும் பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | [7] |
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப் பானை மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | [8] |
பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப் படர்சடைமேற் புனல்கரந்த படிறன் தன்னை நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கட் கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங் காரணனை நாரணனைக் கமலத் தோங்கும் புண்ணியனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | [9] |
இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும் எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம் அலைகடலில் ஆலால முண்டு கண்டங் கறுத்தானைக் கண்ணழலாற் காமன் ஆகங் காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை பொறுத்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.055  
வே(ற்)ற்று ஆகி விண் ஆகி
பண் - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி (திருத்தலம் திருக்கயிலாயம் ; அருள்தரு பார்வதியம்மை உடனுறை அருள்மிகு கயிலாயநாதர் திருவடிகள் போற்றி )
சிவார்ச்சனை Audio: https://www.youtube.com/watch?v=7qLrT5FepJ0
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | [1] |
பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி பிறவி யறுக்கும் பிரானே போற்றி வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி கச்சாக நாக மசைத்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | [2] |
மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி திருவாகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றி கருவாகி யோடும் முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | [3] |
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி கானத்தீ யாட லுகந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | [4] |
ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி நீராவி யான நிழலே போற்றி நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி காராகி நின்ற முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | [5] |
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி தேவ ரறியாத தேவே போற்றி புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி பற்றி யுலகை விடாதாய் போற்றி கல்லுயிராய் நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | [6] |
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | [7] |
இமையா துயிரா திருந்தாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி ஊழியே ழான வொருவா போற்றி அமையா வருநஞ்ச மார்ந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி கமையாகி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | [8] |
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | [9] |
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி நீள அகல முடையாய் போற்றி அடியும் முடியு மிகலிப் போற்றி யங்கொன் றறியாமை நின்றாய் போற்றி கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி கடிய உருமொடு மின்னே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | [10] |
உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.070  
தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி, தேவன்குடி,
பண் - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி (திருத்தலம் பொது -க்ஷேத்திரக்கோவை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருக்ஷேத்திரக் கோவை Audio: https://www.youtube.com/watch?v=fvw53cffuNU
தில்லைச்சிற் றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர் கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடி காவும் முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றங் கல்லில் திகழ்சீரார் காளத்தியுங் கயிலாய நாதனையே காண லாமே. | [1] |
ஆரூர்மூ லட்டானம் ஆனைக் காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர் பேரூர் பிரமபுரம் பேரா வூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங் கூரார் குறுக்கைவீ ரட்டா னம்முங் கோட்டூர் குடமூக்குக் கோழம் பமுங் காரார் கழுக்குன்றுங் கானப் பேருங் கயிலாய நாதனையே காண லாமே. | [2] |
இடைமரு தீங்கோ யிராமேச் சரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர் சடைமுடி சாலைக் குடிதக்களூர் தலையாலங் காடு தலைச்சங் காடு கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு கடைமுடி கானூர் கடம்பந் துறை கயிலாய நாதனையே காண லாமே. | [3] |
எச்சி லிளமர் ஏம நல்லூர் இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர் ஆவடு தண்டுறை யழுந்தூர் ஆறை கைச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங் கயிலாய நாதனையே காண லாமே. | [4] |
கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர் கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும் நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவு நின்றியூர் நீடூர் நியம நல்லூர் இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏராரு மேம கூடங் கடம்பை யிளங்கோயில் தன்னி னுள்ளுங் கயிலாய நாதனையே காண லாமே. | [5] |
மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வார ணாசி வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி விளமர் விராடபுரம் வேட்க ளத்தும் பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங் கண்ணை களர்காறை கழிப்பா லையுங் கயிலாய நாதனையே காண லாமே. | [6] |
வீழி மிழலைவெண் காடு வேங்கூர் வேதிகுடி விசய மங்கை வியலூர் ஆழி யகத்தியான் பள்ளி யண்ணா மலையாலங் காடும் அரதைப் பெரும் பாழி பழனம்பனந் தாள்பா தாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண் காழி கடல்நாகைக் காரோ ணத்துங் கயிலாய நாதனையே காண லாமே. | [7] |
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும் மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானங் கேதா ரத்தும் வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும் கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங் கயிலாய நாதனையே காண லாமே. | [8] |
திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி தேவூர் சிரபுரஞ்சிற் றேமம் சேறை கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு அண்டர் தொழும்அதிகை வீரட் டானம் ஐயா றசோகந்தி ஆமாத் தூருங் கண்டியூர் வீரட்டங் கருகா வூருங் கயிலாய நாதனையே காண லாமே. | [9] |
நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை தோணிபுரந் துருத்தி சோமேச் சரம் உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர் ஓமாம் புலியூர்ஓர் ஏட கத்துங் கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங் கயிலாய நாதனையே காண லாமே. | [10] |
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர் வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி நிலமலிநெய்த் தானத்தோ டெத் தானத்தும் நிலவுபெருங் கோயில்பல கண்டால் தொண்டீர் கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற கயிலாய நாதனையே காண லாமே. | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.094  
இரு நிலன் ஆய், தீ
பண் - புறநீர்மை ஹரிகாம்போஜி பூபாளம் காமாஜ் (திருத்தலம் நின்றத் திருத்தாண்டகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=9kNln4y0aWI
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையாய் இன்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. | [1] |
மண்ணாகி விண்ணாகி மலையு மாகி வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக் கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக் கலையாகிக் கலைஞானந் தானே யாகிப் பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப் பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே. | [2] |
கல்லாகிக் களறாகிக் கானு மாகிக் காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப் புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப் புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச் சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச் சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி நெல்லாகி நிலனாகி நீரு மாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. | [3] |
காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க் கனவாகி நனவாகிக் கங்கு லாகிக் கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக் குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய் நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி ஏற்றானா யேறூர்ந்த செல்வ னாகி யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. | [4] |
தீயாகி நீராகித் திண்மை யாகித் திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித் தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித் தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக் காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி நீயாகி நானாகி நேர்மை யாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே. | [5] |
அங்கமா யாதியாய் வேத மாகி அருமறையோ டைம்பூதந் தானே யாகிப் பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப் பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக் கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக் கடலாகி மலையாகிக் கழியு மாகி எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. | [6] |
மாதா பிதாவாகி மக்க ளாகி மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக் கோதா விரியாய்க் குமரி யாகிக் கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப் போதாய மலர்கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே. | [7] |
ஆவாகி ஆவினில் ஐந்து மாகி அறிவாகி அழலாகி அவியு மாகி நாவாகி நாவுக்கோர் உரையு மாகி நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப் பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப் புக்குளால் வாசமாய் நின்றா னாகித் தேவாகித் தேவர் முதலு மாகிச் செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே. | [8] |
நீராகி நீளகலந் தானே யாகி நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப் பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப் பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம் ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம் பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப் பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே. | [9] |
மாலாகி நான்முகனாய் மாபூ தமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப் பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப் பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப் பூலோக புவலோக சுவலோ கமாய்ப் பூதங்க ளாய்ப்புராணன் தானே யாகி ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய் எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.095  
அப்பன் நீ, அம்மை நீ,
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் பொது -தனித் திருத்தாண்டகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=gyQIiJdYqsE
அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ அன்புடைய மாமனும் மாமி யும்நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே. | [1] |
வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல் வெய்ய வினைப்பகையும் பைய நையும் எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம் அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர் செவ்வான வண்ணரென் சிந்தை யாரே. | [2] |
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே. | [3] |
நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள் நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன் கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே. | [4] |
திருக்கோயி லில்லாத திருவி லூரும் திருவெண்ணீ றணியாத திருவி லூரும் பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும் பாங்கினோடு பலதளிக ளில்லா வூரும் விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும் விதானமும் வெண்கொடியு மில்லா வூரும் அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா வூரும் அவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே. | [5] |
திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில் தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில் ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில் உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில் அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில் அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே. | [6] |
நின்னாவார் பிறரின்றி நீயே யானாய் நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய் மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய் மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய் பொன்னானாய் மணியானாய் போக மானாய் பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை என்னானாய் என்னானாய் என்னி னல்லால் ஏழையேன் என்சொல்லி யேத்து கேனே. | [7] |
அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய் அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய் எத்தனையும் அரியைநீ எளியை யானாய் எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய் பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே. | [8] |
குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிதுடையேன் கோல மாய நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன் நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன் வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன் இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன் என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே. | [9] |
சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து தரணியொடு வானாளத் தருவ ரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம் மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில் அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.096  
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக்
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் பொது -தனித் திருத்தாண்டகம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=S2QAPPvNFiw
ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார் அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார் தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார் தலையதனிற் பலிகொண்டார் நிறைவாம் தன்மை வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார் மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார் காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக் கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே. | [1] |
முப்புரிநூல் வரைமார்பின் முயங்கக் கொண்டார் முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச் செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார் செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார் துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார் சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார் அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார் அடியேனை ஆளுடைய அடிக ளாரே. | [2] |
முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு மூசுமிள நாகமுட னாகக் கொண்டார் அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார் வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார் மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார் துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார் சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே. | [3] |
பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார் பூதப் படைகள்புடை சூழக் கொண்டார் அக்கினொடு படஅரவம் அரைமேற் கொண்டார் அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார் கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார் கொடியானை யடலாழிக் கிரையாக் கொண்டார் செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே. | [4] |
அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார் அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார் சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார் சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார் மந்தரம்நற் பொருசிலையா வளைத்துக்கொண்டார் மாகாளன் வாசல்காப் பாகக் கொண்டார் தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார் சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே. | [5] |
பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார் பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார் நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார் நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார் வாரடங்கு வனமுலையார் மைய லாகி வந்திட்ட பலி கொண்டார் வளையுங் கொண்டார் ஊரடங்க வொற்றிநகர் பற்றிக் கொண் டார் உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. | [6] |
அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார் ஆலால வருநஞ்சம் அமுதாக் கொண்டார் கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார் காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார் மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார் மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார் துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார் சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே. | [7] |
படமூக்கப் பாம்பணையா னோடு வானோன் பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார் குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார் கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார் நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார் இடமாக்கி யிடைமருதுங் கொண்டார் பண்டே யென்னைஇந்நாள் ஆட்கொண்ட இறைவர் தாமே. | [8] |
எச்சனிணத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார் இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார் மெச்சன்வியாத் திரன்தலையும் வேறாக் கொண்டார் விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்த உச்சநமன் தாளறுத்தார் சந்திரனை யுதைத்தார் உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம் அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார் அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே. | [9] |
சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார் சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார் உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார் கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார் காபால வேடங் கருதிக் கொண்டார் விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார் வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. | [10] |
குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார் குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார் சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார் தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார் பராபரனென் பதுதமது பேராக் கொண்டார் பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி இராவணனென் றவனைப்பேர் இயம்பக் கொண்டார் இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே | [11] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.098  
நாம் ஆர்க்கும் குடி அல்லோம்;
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் பொது - மறுமாற்றம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருநாவுக்கரசர் சிவநெறி சேர்ந்தசெய்தி சமணர் செவிகட்கு எட்டியது. தம் சமயத்தை நிலைநிறுத்திவந்த தருமசேனர் சைவம் சார்ந்து ஒருவராலும் நீக்கமுடியாத சூலைநோய் நீங்கப் பெற்றார் என்பதை உலகம் அறியின், நம்மதம் அழியும் என்றஞ்சினர். மன்னனுக்கு இச்செய்தியை மறைத்து மொழிந்தனர். தருமசேனர் தம் தமக்கையார் மேற்கொண்டிருக்கும் சமயத்தைச் சார விரும்பிச் சூலை நோய் வந்ததாகப் பொய்கூறிச் சைவராய் நம் மதத்தையும் கடவுளரை யும் இழித்துரைக்கின்றார் என்று பொய்ச்செய்தி சித்திரித்து மெய்யுரை போல் வேந்தனிடம் விளம்பினர். இத்தகைய குற்றத்திற்குத் தரப்படும் தண்டனை யாதென அவர்களையே வினவினான் அரசன். நன்றாகத் தண்டித்து ஒறுக்கவேண்டும் என்றனர் சமணர். மன்னவன் அமைச் சரை வரவழைத்துத் திருநாவுக்கரசரைத் தம்மிடம் அழைத்துவருமாறு அனுப்பினான். அமைச்சரும் திருநாவுக்கரசரிடம் சென்று அரசன் ஆணையை அறிவித்து நின்றார்கள். திருநாவுக்கரசர் சிவபெரு மானுக்கே மீளா ஆளாய் அவன் திருவடிகளையே சிந்திக்கும் நாம் யார்க்கும் அடங்கிவாழும் எளிமையுடையோமல்லம். நமன் வரினும் அஞ்சோம் என்னும் பொருள் பொதிந்த தொடக்கத்தை உடைய நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் மறுமாற்றத் திருத் தாண்டகப் பதிகம் பாடியருளினார். Audio: https://www.youtube.com/watch?v=ySLUSOx0X50
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே. | [1] |
அகலிடமே இடமாக ஊர்கள் தோறும் அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம் புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான் இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம் துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும் சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே. | [2] |
வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம் நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோம் காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக் கன்மனமே நன்மனமாய்க் கரையப் பெற்றோம் பாராண்டு பகடேறி வருவார் சொல்லும் பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே. | [3] |
உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள் உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும் நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம் நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார் நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால் சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே. | [4] |
என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம் இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம் ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார் பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப் புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே. | [5] |
மூவுருவின் முதலுருவாய் இருநான் கான மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர் தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும் செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும் நாவுடையார் நமையாள வுடையா ரன்றே நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான காவலரே யேவி விடுத்தா ரேனுங் கடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே. | [6] |
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத் தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மை யோடும் பொற்புடைய பேசக் கடவோம் பேயர் பேசுவன பேசுதுமே பிழையற் றோமே. | [7] |
ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் தன்னை இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச் சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற நேசனை நித்தலும் நினையப் பெற்றோம் நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன வாசக மெல்லாம் மறந்தோ மன்றே வந்தீரார் மன்னவனா வான்றா னாரே. | [8] |
சடையுடையான் சங்கக் குழையோர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி விடையுடையான் வேங்கை அதள் மேலாடை வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர் உம்மோடு மற்று முளராய் நின்ற படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம் பாசமற வீசும் படியோம் நாமே. | [9] |
நாவார நம்பனையே பாடப் பெற்றோம் நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம் ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன் அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட தேவாதி தேவன் சிவனென் சிந்தை சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும் குணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே. | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.099  
எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் திருப்புகலூர் ; அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினீசுவரர் திருவடிகள் போற்றி )
இறைவன் திருவடி அடையும் காலம் அணித்தாக திருநாவுக் கரசர் திருப்புகலூரிலேயே தங்கியிருந்தார். எல்லாவுலகமும் போற்ற எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ என்று தொடங்கித் திருத்தாண்டகத் திருப்பதிகம் பாடிப் போற்றி நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி ஆண்ட அரசு ஒரு சித்திரைமாதச் சதய நாளில் அண்ணலார் சேவடியை அடைந்து இன்புற்று அமர்ந்தருளினார். Audio: https://www.youtube.com/watch?v=Nc47vuCZpt4
எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால் கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | [1] |
அங்கமே பூண்டாய் அனலா டினாய் ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய் பங்கமொன் றில்லாத படர்சடை யினாய் பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய் சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச் சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன் திருப்புகலூர் மேவிய தேவ தேவே. | [2] |
பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய் பளிக்குக் குழையினாய் பண்ணா ரின்சொல் மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய் மான்மறிகை ஏந்தினாய் வஞ்சக் கள்வர் ஐவரையும் என்மேல் தரவ றுத்தாய் அவர்வேண்டும் காரியமிங் காவ தில்லை பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | [3] |
தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச் சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய் மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும் அருளாகி ஆதியாய் வேத மாகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப் பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | [4] |
நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள் நீங்காமை வைத்துகந்த நீதி யானே பாரேறு படுதலையிற் பலிகொள் வானே பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா காரேறு முகிலனைய கண்டத் தானே கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த போரேறே உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | [5] |
விரிசடையாய் வேதியனே வேத கீதா விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய் திரிபுரங்கள் எரிசெய்த தேவ தேவே திருவாரூர்த் திருமூலட் டானம் மேயாய் மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய் வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும் புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | [6] |
தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந் திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக் காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய் கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின் பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | [7] |
நெய்யாடி நின்மலனே நீல கண்டா நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே மையாடு கண்மடவாள் பாகத் தானே மான்தோல் உடையா மகிழ்ந்து நின்றாய் கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று பொய்யாத சேவடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | [8] |
துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித் தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ் சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே அன்ன நடைமடவாள் பாகத் தானே யக்காரம் பூண்டானே ஆதி யானே பொன்னங் கழலடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | [9] |
ஒருவனையும் அல்லா துணரா துள்ளம் உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக் கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன் கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.001  
பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! எத்தால்
பண் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா (திருத்தலம் திருவெண்ணெய்நல்லூர் ; அருள்தரு வேற்கண்மங்கையம்மை உடனுறை அருள்மிகு தடுத்தாட்கொண்டவீசுவரர் திருவடிகள் போற்றி )
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவர் குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்த போது சுந்தரருக்குத் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த ஈசன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். அந்த ஓலையை சுந்தரர் கிழித்தெறிந்தார். முதியவர் வழக்கை திருவெண்ணெய்நல்லூருக்கு எடுத்து சென்று வென்றார். அடிமை ஆன சுந்தரர் முதியவரின் வீட்டைக் காண்பிக்க சொல்ல, முதியவர் திருவெண்ணெய்நல்லூர் ஆலயத்திற்கு கூட்டி சென்று மறைந்தார். முதியவராய் வந்து தடுத்தாட் கொண்டருளிய சிவபெரு மான் உமை அம்மையாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளிக்காட்சி அளித்து `நம்பியாரூரனே! நீ முன்னமே நமக்குத் தொண்டன். பெருமான் அவரை நோக்கி `நம்மிடம் நீ வன்மை பேசினமையால் வன்றொண்டன் என்ற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த அர்ச்சனை பாடல்களே ஆகும். ஆதலால் இவ்வுலகில் நம்மை, செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றுக எனப் பணித்தருளினார். அன்பனே! யான் ஓலைகாட்டி நின்னை ஆட்கொள்ள வந்தபோது நீ என்னைப் பித்தன் என்று கூறினாய். ஆதலால் என்பெயர் பித்தன் என்றே பாடுக` என்று இறைவன் அருளிச்செய்தார். வன்தொண்டர் தம்மை பித்தா பிறைசூடீ என்று தொடங்கும் திருப்பதிகத்தால் பாடியருளினார்.
குருவருள் பெறஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=NhxUwxz5RJA
Audio: https://www.youtube.com/watch?v=g5cyWyIOPY8
பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே. | [1] |
நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன் வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆயாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. | [2] |
மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அன்னேஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. | [3] |
முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே. | [4] |
பாதம்பணி வார்கள்பெறு பண்டம்மது பணியா யாதன்பொரு ளானேன்அறி வில்லேன்அரு ளாளா தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆதீஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. | [5] |
தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ எண்ணார்புர மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய் மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அண்ணாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. | [6] |
ஊனாய்உயி ரானாய்உட லானாய்உல கானாய் வானாய்நில னானாய்கட லானாய்மலை யானாய் தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆனாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே. | [7] |
ஏற்றார்புரம் மூன்றும்மெரி யுண்ணச்சிலை தொட்டாய் தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வான்நீர் ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆற்றாய்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே. | [8] |
மழுவாள்வலன் ஏந்தீமறை யோதீமங்கை பங்கா தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அழகாஉனக் காளாய்இனி அல்லேன்என லாமே. | [9] |
காரூர்புன லெய்திக்கரை கல்லித்திரைக் கையால் பாரூர்புக ழெய்தித்திகழ் பன்மாமணி யுந்திச் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்என லாமே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.005  
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
பண் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா (திருத்தலம் திருஓணகாந்தன்தளி ; அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஓணகாந்தீசுவரர் திருவடிகள் போற்றி )
கச்சூரிலிருந்து புறப்பட்டுக் காஞ்சிபுரத்தை யணைந்து, திரு வேகம்பத்தை யடைந்து ஏகாம்பரநாதரைப் போற்றினார். தொண்டர் குழாங்களோடு சிலநாள் அங்குத் தங்கினார். காஞ்சியில் காமகோட்டம், திருமேற்றளி ஆகிய இடங்களையும் சென்று தரிசித்தார். திருவோணகாந்தன்தளி இறைவனை வணங்கி நெய்யும் பாலும் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் பொன் பெற்றார்.
பொன் பெற Audio: https://www.youtube.com/watch?v=TzdBCOhKDC4
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு நித்தல் பூசனை செய்ய லுற்றார் கையி லொன்றுங் காண மில்லைக் கழல டிதொழு துய்யி னல்லால் ஐவர் கொண்டிங் காட்ட வாடி ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக் குய்யு மாறொன் றருளிச் செய்யீர் ஓண காந்தன் தளியு ளீரே. | [1] |
திங்கள் தங்கு சடையின் மேலோர் திரைகள் வந்து புரள வீசும் கங்கை யாளேல் வாய்தி றவாள் கணப தியேல் வயிறு தாரி அங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவி யார்கோற் றட்டி யாளார் உங்க ளுக்காட் செய்ய மாட்டோம் ஓண காந்தன் தளியு ளீரே. | [2] |
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உம்கழல் ஏத்து வார்கள் மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி மதியு டையவர் செய்கை செய்யீர் அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆவற் காலத் தடிகேள் உம்மை ஒற்றி வைத்திங் குண்ண லாமோ ஓண காந்தன் தளியு ளீரே. | [3] |
வல்ல தெல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன் றில்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்ப தென்நீர் பல்லை உக்க படுத லையிற் பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங் கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓண காந்தன் தளியு ளீரே. | [4] |
கூடிக் கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைப டாமே ஆடிப் பாடி அழுது நெக்கங் கன்பு டையவர்க் கின்பம் ஓரீர் தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர் ஓடிப் போகீர் பற்றுந் தாரீர் ஓண காந்தன் தளியு ளீரே. | [5] |
வாரி ருங்குழல் வாள்நெ டுங்கண் மலைம கள்மது விம்மு கொன்றைத் தாரி ருந்தட மார்பு நீங்காத் தைய லாள்உல குய்ய வைத்த காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க் காமக் கோட்டம்உண் டாக நீர்போய் ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே ஓண காந்தன் தளியு ளீரே. | [6] |
பொய்ம்மை யாலே போது போக்கிப் புறத்தும் இல்லை அகத்தும் இல்லை மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர் மேலை நாள்ஒன் றிடவுங் கில்லீர் எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர் உம்மை யன்றே எம்பெரு மான் ஓண காந்தன் தளியு ளீரே. | [7] |
வலையம் வைத்த கூற்ற மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டுச் சிலைஅ மைத்த சிந்தை யாலே திருவ டீதொழு துய்யின் அல்லால் கலைஅ மைத்த காமச் செற்றக் குரோத லோப மதவ ரூடை உலைஅ மைத்திங் கொன்ற மாட்டேன் ஓண காந்தன் தளியு ளீரே. | [8] |
வார மாகித் திருவ டிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே ஆரம் பாம்பு வாழ்வ தாரூர் ஒற்றி யூரேல் உம்ம தன்று தார மாகக் கங்கை யாளைச் சடையில் வைத்த அடிகேள் உந்தம் ஊரும் காடு உடையும் தோலே ஓண காந்தன் தளியு ளீரே. | [9] |
ஓவ ணம்மேல் எருதொன் றேறும் ஓண காந்தன் தளியு ளார்தாம் ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட வரைது கில்லொடு பட்டு வீக்கிக் கோவ ணம்மேற் கொண்ட வேடம் கோவை யாகஆ ரூரன் சொன்ன பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப் பறையுந் தாஞ்செய்த பாவந் தானே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.020  
நீள நினைந்து அடியேன் உமை
பண் - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் (திருத்தலம் திருக்கோளிலி (திருக்குவளை) ; அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு கோளிலிநாதர் திருவடிகள் போற்றி )
நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை மூன்று பொழுதும் வணங்கி வாழ்ந்து வரும் நாளில் திருக்கோளிலி என்னும் தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியில் விழுமிய பெரியார் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டு அவர் அமுது செய்யும் வண்ணம் செந்நெல், பருப்பு முதலிய பொருள்களைப் பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல் அனுப்பி வரும் நியமத்தை மேற்கொண்டிருந்தார். இவ்வாறு குண்டையூர்க் கிழார் தொண்டாற்றிவரும் காலத் தில் ஒருசமயம் மழையின்மையால் நிலவளம் சுருங்கிற்று. விளை பொருள்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய தானியங்கள் இல்லாமல் மனங்கவன்று உணவுகொள்ளாது அன்றிரவு துயின்றார். பெருமான் அவர் கனவில் தோன்றி ஆரூரனுக்குப் படி அமைக்க உனக்கு நெல்தந்தோம் என்றருளிச் செய்து குபேரனை ஏவியிடக் குண்டையூர் முழுதும் நெல் மலை வானவெளியும் மறையும்படி ஓங்கிநின்றது. குண்டையூர்க்கிழார் காலையில் எழுந்து நெல்மலையைக் கண்டு வியந்து திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் இறைவன் கருணையை எடுத்தியம்பி அந்நெல்மலை மனிதர்களால் எடுத்துவரும் அளவினதன்று. தாங்கள் எவ்விதமேனும் அதனை ஏற்றருள வேண்டும் என்று வேண்டினார். அதனைக்கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக்கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து நீளநினைந் தடியேன் என்னும் திருப்பதிகம்பாடி நெல்லையெடுத்துச்செல்ல ஏவலாட்களைத் தரும்படி வேண்டிக்கொண்டார். இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் திருவாரூர் முழுவதும் நெல்லைக்கொண்டுவந்து குவிக்கும் என்றதோர் அருள்வாக்கு பெருமானருளால் விசும்பிடையெழுந்தது. அதுகேட்டுமகிழ்ந்த சுந்தரர் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்து பரவை யார்க்குத் தெரிவித்து மகிழ்ந்திருந்தார்.
பஞ்சத்தின் போதும் நல்ல உணவு கிடைக்க Audio: https://www.youtube.com/watch?v=0caMnbm5nqY
Audio: https://www.youtube.com/watch?v=xfa2LtyZ3GU
நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே. | [1] |
வண்டம ருங்குழலாள் உமை நங்கைஓர் பங்குடையாய் விண்டவர் தம்புரமூன் றெரி செய்தஎம் வேதியனே தெண்டிரை நீர்வயல்சூழ் திருக் கோளிலி எம்பெருமான் அண்டம தாயவனே அவை அட்டித் தரப்பணியே. | [2] |
பாதிஓர் பெண்ணைவைத்தாய் பட ருஞ்சடைக் கங்கை வைத்தாய் மாதர்நல் லார்வருத்தம் மது நீயும் அறிதியன்றே கோதில் பொழில்புடைசூழ் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆதியே அற்புதனே அவை அட்டித் தரப்பணியே. | [3] |
சொல்லுவ தென்உனைநான் தொண்டை வாய்உமை நங்கையைநீ புல்கி இடத்தில்வைத்தாய்க் கொரு பூசல்செய் தார்உளரோ கொல்லை வளம்புறவிற் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் அல்லல் களைந்தடியேற் கவை அட்டித் தரப்பணியே. | [4] |
முல்லை முறுவலுமை ஒரு பங்குடை முக்கணனே பல்லயர் வெண்டலையிற் பலி கொண்டுழல் பாசுபதா கொல்லை வளம்புறவிற் றிருக் கோளிலி எம்பெருமான் அல்லல் களைந்தடியேற் கவை அட்டித் தரப்பணியே. | [5] |
குரவம ருங்குழலாள் உமை நங்கைஓர் பங்குடையாய் பரவை பசிவருத்தம் மது நீயும் அறிதியன்றே குரவம ரும்பொழில்சூழ் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் அரவம் அசைத்தவனே அவை அட்டித் தரப்பணியே. | [6] |
எம்பெரு மான்உனையே நினைந் தேத்துவன் எப்பொழுதும் வம்பம ருங்குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே செம்பொனின் மாளிகைசூழ் திருக் கோளிலி எம்பெருமான் அன்பது வாய்அடியேற் கவை அட்டித் தரப்பணியே. | [7] |
அரக்கன் முடிகரங்க ளடர்த் திட்டஎம் மாதிப்பிரான் பரக்கும் அரவல்குலாள் பர வையவள் வாடுகின்றாள் குரக்கினங் கள்குதிகொள் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் இரக்கம தாய்அடியேற் கவை அட்டித் தரப்பணியே. | [8] |
பண்டைய மால்பிரமன் பறந் தும்மிடந் தும்மயர்ந்தும் கண்டில ராய்அவர்கள் கழல் காண்பரி தாயபிரான் தெண்டிரை நீர்வயல்சூழ் திருக் கோளிலி எம்பெருமான் அண்டம தாயவனே யவை அட்டித் தரப்பணியே. | [9] |
கொல்லை வளம்புறவிற் றிருக் கோளிலி மேயவனை நல்லவர் தாம்பரவுந் திரு நாவல வூரனவன் நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந் தேத்திய பத்தும்வல்லார் அல்லல் களைந்துலகில் அண்டர் வானுல காள்பவரே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.024  
பொன் ஆர் மேனியனே! புலித்தோலை
பண் - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் (திருத்தலம் திருமழபாடி ; அருள்தரு அழகம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பநாதர் திருவடிகள் போற்றி )
இறைவன் எழுந்தருளிய தலங்கள் பலவற்றையும் வழிபட எண்ணிய சுந்தரர், திருவாரூரினின்றும் புறப்பட்டு, நன்னிலம், வீழிமிழலை, திருவாஞ்சியம் நறையூர்ச்சித்தீச்சரம், அரிசிற்கரைப்புத்தூர், ஆவடுதுறை, இடைமருது, நாகேச்சரம், சிவபுரம், கலயநல்லூர், குடமூக்கு, வலஞ்சுழி, நல்லூர், சோற்றுத்துறை, கண்டியூர், ஐயாறு, பூந்துருத்தி ஆகிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, திருவாலம்பொழிலை அடைந்தார். அன்றிரவு அவர் துயிலும் பொழுது, சிவபெருமான் அவர் கனவில் தோன்றி, மழபாடிக்கு வருதற்கு மறந்தாயோ என வினவி மறைந்தார். துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், காவிரியைக் கடந்து, திருமழபாடி சென்று, இறைவனை வணங்கிப் பொன்னார் மேனியனே என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். Audio: https://www.youtube.com/watch?v=gT_jrRKsfvo
பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. | [1] |
கீளார் கோவணமுந் திரு நீறுமெய் பூசியுன்றன் தாளே வந்தடைந்தேன் தலை வாஎனை ஏன்றுகொள்நீ வாளார் கண்ணிபங்கா மழ பாடியுள் மாணிக்கமே கேளா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. | [2] |
எம்மான் எம்மனையென் றனக் கெட்டனைச் சார்வாகார் இம்மா யப்பிறவி பிறந் தேஇறந் தெய்த்தொழிந்தேன் மைம்மாம் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே அம்மான் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. | [3] |
பண்டே நின்னடியேன் அடி யாரடி யார்கட்கெல்லாம் தொண்டே பூண்டொழிந்தேன் தொட ராமைத் துரிசறுத்தேன் வண்டார் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே அண்டா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. | [4] |
கண்ணாய் ஏழுலகுங் கருத் தாய அருத்தமுமாய்ப் பண்ணார் இன்றமிழாய்ப் பர மாய பரஞ்சுடரே மண்ணார் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே அண்ணா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. | [5] |
நாளார் வந்தணுகி நலி யாமுனம் நின்றனக்கே ஆளா வந்தடைந்தேன் அடி யேனையும் ஏன்றுகொள்நீ மாளா நாளருளும் மழ பாடியுள் மாணிக்கமே ஆளாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. | [6] |
சந்தா ருங்குழையாய் சடை மேற்பிறை தாங்கிநல்ல வெந்தார் வெண்பொடியாய் விடை யேறிய வித்தகனே மைந்தார் சோலைகள்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே எந்தாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. | [7] |
வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்களெல்லாம் செய்ய மலர்களிட மிகு செம்மையுள் நின்றவனே மையார் பூம்பொழில்சூழ் மழ பாடியுள் மாணிக்கமே ஐயா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. | [8] |
நெறியே நின்மலனே நெடு மாலயன் போற்றிசெய்யும் குறியே நீர்மையனே கொடி யேரிடை யாள்தலைவா மறிசேர் அங்கையனே மழ பாடியுள் மாணிக்கமே அறிவே நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே. | [9] |
ஏரார் முப்புரமும் மெரி யச்சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழ பாடியுள் மேயவனைச் சீரார் நாவலர்கோன் ஆ ரூரன் உரைத்ததமிழ் பாரோர் ஏத்தவல்லார் பர லோகத் திருப்பாரே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.025  
பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
பண் - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
தில்லைருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிப்புத்தூர், கானாட்டுமுள்ளூர், எதிர்கொள்பாடி வேள்விக்குடி முதலிய தலங்களை யிறைஞ்சித் திருப்பதிகங்கள் பாடித் திருவாரூரை யடைந்து பூங்கோயிற் பெருமானைத் தொழுது பரவையாருடன் இனிதிருந்தார். இங்ஙனம் வைகும் நாளில் ஒருநாள் பரவையாரை நோக்கி, முதுகுன்றப் பெருமான் நமக்குத் தந்த பொன்னை மணிமுத்தாற்றில் புகவிட்டோம். அப்பொன்னை இந்நகரத் திருக்குளத்தில் எடுத்து வருவோம் வருக என அழைத்தார். பரவையாரும் வியப்பெய்தி உடன் சென்றார். நம்பியாரூரர் பெருமானை வணங்கிக் கோயிலை வலம் வந்து கோயிலின் மேல்பால் உள்ள திருக்குளத்தின் வடகீழ்க் கரையில் பரவையாரை நிற்கச் செய்து, தாம் இறங்கிப் பொன்னைத் தேடினார். சுந்தரர்தம் செந்தமிழ்ப் பதிகம் கேட்கும் விருப்பினால் இறைவன் பொன்னை விரைவில் தோன்றாதவாறு செய்தருளினார். இந்நிலையில் பரவையார் ஆற்றலிட்டுக் குளத்தில் தேடும் நிலையை எண்ணி நகைத்துரைத்தார். அது கேட்ட சுந்தரர் முதுகுன்றமர்ந்த பெருமானே பரவை நகைத்துரையாதவாறு முன்னுரைத்தபடி செம் பொன்னைத் தந்தரளுக எனப் பொன்செய்த மேனியினீர் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடலளவும் பொன் கிடைத்திலது, ஒன்பதாந் திருப்பாடலைப் பாடிய அளவில் பொன்திரள் சுந்தரர் கைக்குள் கிடைத்தது.
கைக்கு கிடைத்த பொருள் கை ந்ழுவிப் போனால் மீண்டும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=J0kKlrUj_Pk
பொன்செய்த மேனியினீர் புலித் தோலை அரைக்கசைத்தீர் முன்செய்த மூவெயிலும் மெரித் தீர்முது குன்றமர்ந்தீர் மின்செய்த நுண்ணிடையாள் பர வையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள் அடி யேன்இட் டளங்கெடவே. | [1] |
உம்பரும் வானவரும் முட னேநிற்க வேயெனக்குச் செம்பொனைத் தந்தருளித் திக ழும்முது குன்றமர்ந்தீர் வம்பம ருங்குழலாள் பர வையிவள் வாடுகின்றாள் எம்பெரு மான்அருளீர் அடி யேன்இட் டளங்கெடவே. | [2] |
பத்தா பத்தர்களுக் கருள் செய்யும் பரம்பரனே முத்தா முக்கணனே முது குன்ற மமர்ந்தவனே மைத்தா ருந்தடங்கண் பர வையிவள் வாடாமே அத்தா தந்தருளாய் அடி யேன்இட் டளங்கெடவே. | [3] |
மங்கையொர் கூறமர்ந்தீர் மறை நான்கும் விரித்துகந்தீர் திங்கள் சடைக்கணிந்தீர் திக ழும்முது குன்றமர்ந்தீர் கொங்கைநல் லாள்பரவை குணங் கொண்டிருந் தாள்முகப்பே அங்கண னேயருளாய் அடி யேன்இட் டளங்கெடவே. | [4] |
மையா ரும்மிடற்றாய் மரு வார்புர மூன்றெரித்த செய்யார் மேனியனே திக ழும்முது குன்றமர்ந்தாய் பையா ரும்மரவே ரல்கு லாளிவள் வாடுகின்றாள் ஐயா தந்தருளாய் அடி யேன்இட் டளங்கெடவே. | [5] |
நெடியான் நான்முகனும் மிர வியொடும் இந்திரனும் முடியால் வந்திறைஞ்ச முது குன்றம் அமர்ந்தவனே படியா ரும்மியலாள் பர வையிவள் தன்முகப்பே யடிகேள் தந்தருளீர் அடி யேன்இட் டளங்கெடவே. | [6] |
கொந்தண வும்பொழில்சூழ் குளிர் மாமதில் மாளிகைமேல் வந்தண வும்மதிசேர் சடை மாமுது குன்றுடையாய் பந்தண வும்விரலாள் பர வையிவள் தன்முகப்பே அந்தண னேயருளாய் அடி யேன்இட் டளங்கெடவே. | [7] |
பரசா ருங்கரவா பதி னெண்கண முஞ்சூழ முரசார் வந்ததிர முது குன்ற மமர்ந்தவனே விரைசே ருங்குழலாள் பர வையிவள் தன்முகப்பே அரசே தந்தருளாய் அடி யேன்இட் டளங்கெடவே. | [8] |
ஏத்தா திருந்தறியேன் இமை யோர்தனி நாயகனே மூத்தாய் உலகுக்கெல்லா முது குன்ற மமர்ந்தவனே பூத்தா ருங்குழலாள் பர வையிவள் தன்முகப்பே கூத்தா தந்தருளாய் கொடி யேன்இட் டளங்கெடவே. | [9] |
பிறையா ருஞ்சடையெம் பெரு மானரு ளாயென்று முறையால் வந்தமரர் வணங் கும்முது குன்றர்தம்மை மறையார் தங்குரிசில் வயல் நாவலா ரூரன்சொன்ன இறையார் பாடல்வல்லார்க் கெளி தாஞ்சிவ லோகமதே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.034  
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
பண் - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி (திருத்தலம் திருப்புகலூர் ; அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினியீசுவரர் திருவடிகள் போற்றி )
நாட்டியத்தான் குடியினின்றும் புறப்பட்டு, வலிவலம் என்ற தலத்தையடைந்து பெருமானைத் தரிசித்த சுந்தரர், மீண்டும் திருவாரூரை அடைந்தார். அப்போது பங்குனி உத்திரத் திருவிழா அணுகியது. அத்திருவிழாவில் பரவையார் செலவு செய்தற்குரிய பொன்னைக் கொண்டுவரும் பொருட்டுத் திருப்புகலூரை அடைந்தார். திருக்கோயிலிற் சென்று இறைவனைப் பணிந்து போற்றி அண்மையிலுள்ள திருமடத்திற்குச் செல்லத் திருவுளங் கொண்டு, கோயில் வாயிலிலேயே சிறிது நேரம் இளைப்பாறியிருந்தார். இறைவனருளால் அப்போது அவருக்கு உறக்கம் வருதாயிற்று. திருக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பெற்றிருந்த செங்கற்களைக் கொண்டுவரச் செய்து தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு மேலாடைய அதன்மேல் விரித்துத் துயில்வாராயினார். பின் துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், தலைக்கு அணையாக வைக்கப் பெற்றிருந்த செங்கற்களெல்லாம் பொன் கட்டிகளாக மாறியிருப்பதைக் கண்டு வியந்து, திருவருளைத் துதித்துத் திருக்கோயிலுள்ளே சென்று தொழுது தம்மையே புகழ்ந்து எனறு தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.
உணவும் , உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்க்கு ஓதவேண்டிய பதிகம் Audio: https://www.youtube.com/watch?v=827jO-moZ0Q
Audio: https://www.youtube.com/watch?v=sGcq0xXT5JA
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ் சார்கி னுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மை யேதருஞ் சோறுங் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே. | [1] |
மிடுக்கி லாதானை வீம னேவிறல் விசய னேவில்லுக் கிவனென்று கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று கூறி னுங்கொடுப் பாரிலை பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக லூரைப் பாடுமின் புலவீர்காள் அடுக்கு மேலம ருலகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே. | [2] |
காணி யேற்பெரி துடைய னேகற்று நல்ல னேசுற்றம் நன்கிளை பேணி யேவிருந் தோம்பு மேயென்று பேசி னுங்கொடுப் பாரிலை பூணி பூண்டுழப் புட்சி லம்புந்தண் புகலூர் பாடுமின் புலவீர்காள் ஆணி யாய்அம ருலகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே. | [3] |
நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல் நடுங்கி நிற்கும்இக் கிழவனை வரைகள் போல்திரள் தோள னேயென்று வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை புரைவெள் ளேறுடைப் புண்ணி யன்புக லூரைப் பாடுமின் புலவீர்காள் அரைய னாய்அம ருலகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே. | [4] |
வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப் பாவி யைவழக் கில்லியைப் பஞ்ச துட்டனைச் சாது வேயென்று பாடி னுங்கொடுப் பாரிலை பொன்செய் செஞ்சடைப் புண்ணி யன்புக லூரைப் பாடுமின் புலவீர்காள் நெஞ்சில் நோயறுத் துஞ்சு போவதற் கியாதும் ஐயுற வில்லையே. | [5] |
நலமி லாதானை நல்ல னேயென்று நரைத்த மாந்தனை யிளையனே குலமி லாதானைக் குலவ னேயென்று கூறி னுங்கொடுப் பாரிலை புலமெ லாம்வெறி கமழும் பூம்புக லூரைப் பாடுமின் புலவீர்காள் அலம ராதம ருலக மாள்வதற் கியாதும் ஐயுற வில்லையே. | [6] |
நோய னைத்தடந் தோள னேயென்று நொய்ய மாந்தனை விழுமிய தாயன் றோபுல வோர்க்கெ லாமென்று சாற்றி னுங்கொடுப் பாரிலை போயு ழன்றுகண் குழியா தேயெந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் ஆய மின்றிப்போய் அண்ட மாள்வதற் கியாதும் ஐயுற வில்லையே. | [7] |
எள்வி ழுந்திடம் பார்க்கு மாகிலும் ஈக்கும் ஈகில னாகிலும் வள்ள லேஎங்கள் மைந்த னேயென்று வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை புள்ளெ லாஞ்சென்று சேரும் பூம்புக லூரைப் பாடுமின் புலவீர்காள் அள்ளற் பட்டழுந் தாது போவதற் கியாதும் ஐயுற வில்லையே. | [8] |
கற்றி லாதானைக் கற்று நல்லனே காம தேவனை யொக்குமே முற்றி லாதானை முற்ற னேயென்று மொழியி னுங்கொடுப் பாரிலை பொத்தி லாந்தைகள் பாட்ட றாப்புக லூரைப் பாடுமின் புலவீர்காள் அத்த னாய்அம ருலகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே. | [9] |
தைய லாருக்கொர் காம னேசால நலவ ழகுடை ஐயனே கையு லாவிய வேல னேயென்று கழறி னுங்கொடுப் பாரிலை பொய்கை வாவியின் மேதி பாய்புக லூரைப் பாடுமின் புலவீர்காள் ஐய னாய்அம ருலகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே. | [10] |
செறுவி னிற்செழுங் கமலம் ஓங்குதென் புகலூர் மேவிய செல்வனை நறவம் பூம்பொழில் நாவ லூரன் வனப்பகை யப்பன் சடையன்றன் சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்திவை வல்லவர் அறவ னாரடி சென்று சேர்வதற் கியாதும் ஐயுற வில்லையே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.039  
தில்லை வாழ் அந்தணர் தம்
பண் - கொல்லிக்கௌவாணம் (திருத்தலம் திருவாரூர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வழக்கம்போல் ஒரு நாள் நம்பியாரூரர் தியாகேசன் திருக்கோயிலை அடைந்து வணங்கப் புறப்பட்டு சென்று அடைந்தார். அப்போது தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ? என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார். தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து பெருமான், அவரைப் பார்த்து முறைப்படி அடியார்களைப் பணிந்து அவர்களைப் பாடுக என்றருளிச் செய்தார். நம்பியாரூரர், அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார். நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
சிவனடியார்கள் ஆசி பெற Audio: https://www.youtube.com/watch?v=j3zT6yhDffM
Audio: https://www.youtube.com/watch?v=ZjAX-Xyp2NE
Audio: https://www.youtube.com/watch?v=_zkB_VBtE0A
Audio: https://www.youtube.com/watch?v=pERqmyWnWUc
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | [1] |
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | [2] |
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன் முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன் திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | [3] |
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கு மடியேன் பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன் அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | [4] |
வம்பறா வரிவண்டு மணநாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | [5] |
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன் கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவாற்கும் அடியேன் கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | [6] |
பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற் கடியேன் மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன் விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | [7] |
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன் நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | [8] |
கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | [9] |
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. | [10] |
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன் திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.046  
பத்து ஊர் புக்கு, இரந்து,
பண் - கொல்லிக்கௌவாணம் (திருத்தலம் திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ; அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி )
சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று இறைவனை இறைஞ்சி விலையுயர்ந்த அணிகலன்களும் பிறவும் வேண்டுமென்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார் (கந்தம் முதல் ஆடை ஆபரணம் பண்டாரத்தே , காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் ; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும்) . இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறு மணப் பொருள்களும் பட்டாடைகளும் விரைந்து செல்லும் குதிரை களும் பரிசாக வழங்கியருளினார். அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையினின்றும் புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார்.
நகைகள், முத்து மாலை, வைர நகைகள், பட்டாடைகள், வாசனைத் திரவியங்கள்,விருந்து உணவு கிடைக்க; அனைத்து சுக போகங்களும் கிடைக்க Audio: https://www.youtube.com/watch?v=P-LoRs-kJuE
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர் முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும் கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. | [1] |
வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர் பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப் பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந் திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங் கடல் நாகைக் காரோண மேவியிருந் தீரே. | [2] |
பூண்பதோர் இளவாமை பொருவிடைஒன் றேறிப் பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப் பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர் பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர் வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால் வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர் காண்பினிய மணிமாட நிறைந்தநெடு வீதிக் கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. | [3] |
விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர் துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச் சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல் மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக் கட்டிஎமக் கீவதுதான் எப்போது சொல்லீர் கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. | [4] |
மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர் தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ் சுந்தரனே கந்தமுதல் ஆடைஆ பரணம் பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும் பண்டுதான் பிரமாண மொன்றுண்டே நும்மைக் கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர் கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. | [5] |
இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம் இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே கலவமயி லியலவர்கள் நடமாடுஞ் செல்வக் கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. | [6] |
தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத் திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர் நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல் காசருளிச் செய்தீர்இன் றெனக்கருள வேண்டுங் கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. | [7] |
மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீ ரிருந்தீர் வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர் அணியாரூர் புகப்பெய்த வருநிதிய மதனில் தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டுந் தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன் காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டுங் கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. | [8] |
மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன் எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன் றறியான் எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர் திண்ணெனஎன் னுடல்விருத்தி தாரீரே யாகில் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக் கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. | [9] |
மறியேறு கரதலத்தீர் மாதிமையே லுடையீர் மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர் கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள் கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல் பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர் பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும் கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டுங் கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. | [10] |
பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன் உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும் ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும் கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங் கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரென் றண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே. | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.047  
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
பண் - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா (திருத்தலம் திருவாரூர் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ அனைத்து ஆலயங்களை தரிசித்த பலன் கிடைக்கும் Audio: https://www.youtube.com/watch?v=3lVBB7jvhtw
காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய் கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறே பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானே மாட்டூ ரறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே. | [1] |
கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா மங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக் கங்குற் புறங்காட் டாடீ அடியார் கவலை களையாயே. | [2] |
நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே இறைக்காட் டானே எங்கட் குன்னை எம்மான் தம்மானே. | [3] |
ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே பேரூர் உறைவாய்பட்டிப் பெருமான் பிறவா நெறியானே பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூர் அம்மானே. | [4] |
மருகல் லுறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானே அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே பருகப் பணியாய் அடியார்க் குன்னைப் பவளப் படியானே. | [5] |
தாங்கூர் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே. | [6] |
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய் வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே ஆனைக் காவில் அரனே பரனே அண்ணா மலையானே ஊனைக் காவல் கைவிட் டுன்னை உகப்பார் உணர்வாரே. | [7] |
துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய் சொல்லாய் கல்லாலா பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய் திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே. | [8] |
புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற புரிபுன் சடையானே வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடீ கலிசேர் புறவிற் கடவூ ராளீ காண அருளாயே. | [9] |
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி மைம்மாந் தடங்கண் மதுர மன்ன மொழியாள் மடச்சிங்கடி தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ்மாலை செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோ கத்தாரே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.048  
மற்றுப் பற்று எனக்கு இன்றி,
பண் - பழம்பஞ்சுரம் ஹரிகாம்போஜி தேஷ்
(திருத்தலம் திருப்பாண்டிக்கொடுமுடி நமசிவாயத் திருப்பதிகம் ; அருள்தரு பண்மொழியாளம்மை உடனுறை அருள்மிகு கொடுமுடிநாதர் திருவடிகள் போற்றி )
இறைவர் சுந்தரர் வேண்டியவாறே பெரும் பொருட்குவியலை வழங்கியருளினார். பொன் பெற்ற சுந்தரர், அத்தலத்தினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞ்லி, ஈங்கோய்மலை முதலிய தலங்களை வழிபட்டுக் கொண்டே கொங்குநாட்டை அடைந்தார். காவிரிக்குத் தென்கரையில் உள்ள கறையூர்த்திருப்பாண்டிக்கொடுமுடி என்னும் திருக்கோயிலை இறைஞ்சி மற்றுப்பற்றெனக்கின்றி யென்னும் நமச்சிவாயத் திருப்பதிகம்பாடிப் போற்றினார். Audio: https://www.youtube.com/watch?v=llZiPGBTX5g
Audio: https://www.youtube.com/watch?v=y6YX15hV58I
மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே. | [1] |
இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள் கெட்ட நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரி வட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே. | [2] |
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர் போகும் நாள்உயர் பாடைமேல் காவு நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப் பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே. | [3] |
எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை தம்பி ரான்என்பொன் மாமணி கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி காவி ரியதன் வாய்க்கரை நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே. | [4] |
அஞ்சி னார்க்கர ணாதி என்றடி யேனும் நான்மிக அஞ்சினேன் அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள் நல்கி னாய்க்கழி கின்றதென் பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே. | [5] |
ஏடு வான்இளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல் ஆடு பாம்ப தரைக்க சைத்த அழக னேஅந்தண் காவிரிப் பாடு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடிச் சேட னேஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே. | [6] |
விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் தேன்வி னைகளும் விண்டன நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக் குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி விரும்ப னேஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே. | [7] |
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் தீயெ ழச்சிலை கோலினாய் வம்பு லாங்குழ லாளைப் பாக மமர்ந்து காவிரிக் கோட்டிடைக் கொம்பின் மேற்குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி நம்ப னேஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே. | [8] |
சார ணன்தந்தை எம்பி ரான்எந்தை தம்பி ரான்எம்பொன் மாமணீயென்று பேரெ ணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார் நார ணன்பிர மன்தொ ழுங்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடிக் கார ணாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே. | [9] |
கோணி யபிறை சூடி யைக்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப் பித்த னைப்பிறப் பில்லியைப் பாணு லாவரி வண்ட றைகொன்றைத் தார னைப்படப் பாம்பரை நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லு வார்க்கில்லை துன்பமே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.049  
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்,
பண் - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா (திருத்தலம் திருமுருகன்பூண்டி ; அருள்தரு ஆவுடைநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆவுடைநாயகர் திருவடிகள் போற்றி )
சுந்தரர் வழி பலவும் கடந்து கொங்குநாட்டுத் திருமுருகன் பூண்டி வழியே செல்லுங்கால், சிவபெருமான் பூதகணங்களை வேடு வராகச் சென்று, வழிப்பறி செய்து வருமாறு பணித்தருள, அவ் வண்ணமே பூதகணங்கள் வேடர்களாய்ச் சென்று அச்சுறுத்திப் பொருள்களைப் பறித்துக்கொணர்ந்தன. இதையறிந்த சுந்தரர் திரு முருகன்பூண்டித் திருக்கோயிலிறைவரை யணுகி, எற்றுக்கு இங்கிருந் தீர் என்ற மகுடத்தோடு பதிகம் பாடிப் பரவினார். கொள்ளையிடப் பெற்ற பொருள்களை வேடுவர்கள் மீளக் கொண்டுவந்து முன்றிலிற் குவித்தனர். அவற்றை முன்போற் பொதி செய்து எடுத்துச் செல்லுமாறு ஏவலர்க்குக் கூறிவிட்டுக் கொங்குநாட்டைக் கடந்து திருவாரூரை அடைந்தார். பரவையார் மாளிகையில் இனிது எழுந்தருளியிருந்தார்.
களவு போன பொருள்கள் மீண்டும் கிடைக்க Audio: https://www.youtube.com/watch?v=NwyJyYjDJkg
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமைசொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்குமிடம் முடுகு நாறிய வடுகர் வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே. | [1] |
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமைசொல்லிக் கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளுமிடம் முல்லைத் தாது மணங்க மழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | [2] |
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்றறியார் உசிர்க்கொ லைபல நேர்ந்து நாள்தொறும் கூறை கொள்ளுமிடம் முசுக்கள் போற்பல வேடர் வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | [3] |
பீறற் கூறை உடுத்தொர் பத்திரங் கட்டி வெட்டினராய்ச் சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங் கூறை கொள்ளுமிடம் மோறை வேடுவர் கூடி வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் ஏறு கால்இற்ற தில்லை யாய்விடில் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | [4] |
தயங்கு தோலை உடுத்துச் சங்கர சாம வேதமோதி மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் மார்க்க மொன்றறியீர் முயங்கு பூண்முலை மங்கை யாளொடு முருகன்பூண்டி மாநகர்வாய் இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | [5] |
விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்தளகம் கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர்மகிழ்வீர் மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு கன்பூண்டி மாநகர்வாய் இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | [6] |
வேத மோதிவெண் ணீறு பூசிவெண் கோவணந் தற்றயலே ஓத மேவிய ஒற்றி யூரையும் உத்திர நீர்மகிழ்வீர் மோதி வேடுவர் கூறை கொள்ளு முருகன்பூண்டி மாநகர்வாய் ஏது காரண மேது காவல்கொண் டெத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | [7] |
படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் தோள்வ ரிநெடுங்கண் மடவ ரல்லுமை நங்கை தன்னையொர் பாகம் வைத்துகந்தீர் முடவ ரல்லீர் இடரி லீர்முருகன் பூண்டி மாநகர்வாய் இடவ மேறியும் போவ தாகில்நீர் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | [8] |
சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் பற்ற லைகலனா வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர் பாகம் வைத்துகந்தீர் மோந்தை யோடு முழக்க றாமுரு கன்பூண்டி மாநகர்வாய் ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே. | [9] |
முந்தி வானவர் தாந்தொ ழும்முரு கன்பூண்டி மாநகர்வாய்ப் பந்த ணைவிரற் பாவை தன்னையொர் பாகம் வைத்தவனைச் சிந்தை யிற்சிவ தொண்ட னூரன் உரைத்தன பத்துங்கொண் டெந்தம் மடிகளை ஏத்து வார்இட ரொன்றுந் தாமிலரே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.059  
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும்
பண் - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி (திருத்தலம் திருவாரூர் ; அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=N1flgNNpWIM
பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் போக மும்திரு வும்புணர்ப் பானைப் பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை இன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மா னைஎளி வந்தபி ரானை அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி ஆரூ ரானை மறக்கலு மாமே | [1] |
கட்ட மும்பிணி யுங்களை வானைக் காலற் சீறிய காலுடை யானை விட்ட வேட்கைவெந் நோய்களை வானை விரவி னால்விடு தற்கரி யானைப் பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை வாரா மேதவி ரப்பணிப் பானை அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை ஆரூ ரானை மறக்கலு மாமே | [2] |
கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக் கலைக்கெ லாம்பொரு ளாய்உடன் கூடிப் பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப் பகலுங் கங்குலு மாகிநின் றானை ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை யுணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை ஆர்க்கின் றகட லைமலை தன்னை ஆரூ ரானை மறக்கலு மாமே | [3] |
செத்த போதினில் முன்னின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம் வைத்த சிந்தையுண் டேமன முண்டே மதியுண் டேவிதி யின்பய னுண்டே முத்தன் எங்கள்பி ரானென்று வானோர் தொழநின் றதிமில் ஏறுடை யானை அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை ஆரூ ரானை மறக்கலு மாமே | [4] |
செறிவுண் டேல்மனத் தால்தெளி வுண்டேல் தேற்றத் தால்வருஞ் சிக்கன வுண்டேல் மறிவுண் டேல்மறு மைப்பிறப் புண்டேல் வாணாள் மேற்செல்லும் வஞ்சனை யுண்டேல் பொறிவண் டியாழ்செய்யும் பொன்மலர்க் கொன்றை பொன்போ லுஞ்சடை மேற்புனைந் தானை அறிவுண் டேஉட லத்துயி ருண்டே ஆரூ ரானை மறக்கலு மாமே | [5] |
பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று பொருளுஞ் சுற்றமும் போகமு மாகி மெள்ள நின்றவர் செய்வன வெல்லாம் வாரா மேதவிர்க் கும்விதி யானை வள்ளல் எந்தமக் கேதுணை யென்று நாணா ளும்அம ரர்தொழு தேத்தும் அள்ள லங்கழ னிப்பழ னத்தணி ஆரூ ரானை மறக்கலு மாமே | [6] |
கரியா னைஉரி கொண்டகை யானைக் கண்ணின் மேல்ஒரு கண்ணுடை யானை வரியா னைவருத் தம்களை வானை மறையா னைக்குறை மாமதி சூடற் குரியா னைஉல கத்துயிர்க் கெல்லாம் ஒளியா னைஉகந் துள்கிநண் ணாதார்க் கரியா னைஅடி யேற்கெளி யானை ஆரூ ரானை மறக்கலு மாமே | [7] |
வாளா நின்று தொழும்அடி யார்கள் வானா ளப்பெறும் வார்த்தையைக் கேட்டும் நாணா ளும்மல ரிட்டுவ ணங்கார் நம்மையாள் கின்ற தன்மையை ஓரார் கேளா நான்கிடந் தேஉழைக் கின்றேன் கிளைக்கெ லாந்துணை யாமெனக் கருதி ஆளா வான்பலர் முன்பழைக் கின்றேன் ஆரூ ரானை மறக்கலு மாமே | [8] |
விடக்கை யேபெருக் கிப்பல நாளும் வேட்கை யாற்பட்ட வேதனை தன்னைக் கடக்கிலேன்நெறி காணவு மாட்டேன் கண்கு ழிந்திரப் பார்கையில் ஒன்றும் இடக்கி லேன்பர வைத்திரைக் கங்கைச் டையா னைஉமை யாளையோர் பாகத் தடக்கி னானைஅந் தாமரைப் பொய்கை ஆரூ ரானை மறக்கலு மாமே | [9] |
ஒட்டி ஆட்கொண்டு போயொளித் திட்ட உச்சிப் போதனை நச்சர வார்த்த பட்டி யைப்பக லையிருள் தன்னைப் பாவிப் பார்மனத் தூறும்அத் தேனைக் கட்டி யைக்கரும் பின்தெளி தன்னைக் காத லாற்கடற் சூர்தடிந் திட்ட செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ ஆரூ ரானை மறக்கலு மாமே | [10] |
ஓரூர் என்றுல கங்களுக் கெல்லாம் உரைக்க லாம்பொரு ளாய்உடன் கூடிக் காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை முடியன் காரிகை காரண மாக ஆரூ ரைம்மறத் தற்கரி யானை அம்மான் றன்திருப் பேர்கொண்ட தொண்டன் ஆரூ ரன்னடி நாயுரை வல்லார் அமர லோகத் திருப்பவர் தாமே | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.061  
ஆலம் தான் உகந்து அமுது
பண் - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
வன்றொண்டர், திருக்கச்சிக் காமக்கோட்டத்திலுள்ள காமாட்சி அம்மையைச் சென்று வணங்கினார். பின்னர் திருஎகம்பம் சென்று பெருமானைப் பணிந்தார். கண்ணளித்தருளும்படிப் பணிந்து வேண்டிப் பதிகம் பாடினார். தம்மை நினைந்து துதித்த நம்பியாரூரருக்கு இறைவன் இடதுகண் பார்வையினை வழங்கியருளி, தம் திருக்கோலத்தையும் காட்டியருளினான். சுந்தரர் ஆலந்தானுகந்து என்று தொடங்கித் திருப்பதிகம் பாடி ஆனந்தக்கூத்தாடினார்.
கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகங்கள் - இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு Audio: https://www.youtube.com/watch?v=w8tRfonamJU
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்தும் சீலந் தான்பெரி தும்முடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே | [1] |
உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப் பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை அற்ற மில்புக ழாள் உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்ற கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே | [2] |
திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச் செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக் கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் காம னைக்கன லாவிழித் தானை வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற பெரிய கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே | [3] |
குண்ட லந்திகழ் காதுடை யானைக் கூற்று தைத்த கொடுந்தொழி லானை வண்டலம் பும்மலர்க் கொன்றையி னானை வாள ராமதி சேர்சடை யானைக் கெண்டை யந்தடங் கண்உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற கண்ட நஞ்சுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே | [4] |
வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை வேலைநஞ் சுண்ட வித்தகன் றன்னை அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை அரும றையவை அங்கம்வல் லானை எல்லை யில்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே | [5] |
திங்கள் தங்கிய சடையுடை யானைத் தேவ தேவனைச் செழுங்கடல் வளரும் சங்க வெண்குழைக் காதுடை யானைச் சாம வேதம் பெரிதுகப் பானை மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்ற கங்கை யாளனைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே | [6] |
விண்ண வர்தொழு தேத்தநின் றானை வேதந் தான்விரித் தோதவல் லானை நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை நாளும் நாமுகக் கின்றபி ரானை எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கண்ணு மூன்றுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே | [7] |
சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப் பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தானை அந்த மில்புக ழாள்உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே | [8] |
வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுர மூன்றெரித் தானை நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிர்க்கண் டகனைப் பரந்த தொல்புக ழாள்உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப் பெற்ற கரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே | [9] |
எள்கல் இன்றி இமையவர் கோனை ஈச னைவழி பாடுசெய் வாள்போல் உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட கள்ளக் கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே | [10] |
பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் பெரிய எம்பெரு மான்என்றெப் போதும் கற்ற வர்பர வப்படு வானைக் காணக் கண்அடி யேன்பெற்ற தென்று கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக் குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன் நற்ற மிழிவை ஈரைந்தும் வல்லார் நன்னெ றிஉல கெய்துவர் தாமே | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.074  
மின்னும் மா மேகங்கள் பொழிந்து
பண் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா (திருத்தலம் திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருத்துருத்தியை அடைந்த சுந்தரர் திருக்கோயிலுக்குட் சென்று வழிபட்டு, அடியேன் உடம்பின்மேல் உள்ள பிணியை ஒழித்தருளவேண்டுமென்று வேண்டித் துதித்தார். சிவபிரான், இக் கோயிலுக்கு வடபால் உள்ள குளத்தில் நீராடில் இந்நோய் நீங்கும் என்று திருவருள் புரிந்தார். அவ்வண்ணமே சுந்தரர் திருக்குளத்தை யடைந்து நீராடினார் நீராடி எழும்போது, உடல்நோய் நீங்கப்பெற்று ஒளிவீசும் திருமேனியைப் பெற்றார். எழுந்து கரையேறித் திருக்கோயிலுக்குச் சென்று. மின்னுமா மேகங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார். Audio: https://www.youtube.com/watch?v=hUJDa9QfMWQ
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார் அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை | [1] |
கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங் கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி மாடுமா கோங்கமே மருதமே பொருது மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப் பழவினை யுள்ளன பற்றறுத் தானை | [2] |
கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார் கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப் புல்கியுந் தாழ்ந்தும்போந் துதவஞ் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச் செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத் தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை | [3] |
பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக் கறியுமா மிளகொடு கதலியும் உந்திக் கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய் எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை அருவினை யுள்ளன ஆசறுத் தானை | [4] |
பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும் பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை உற்றநோய் இற்றையே உறவொழித் தானை | [5] |
புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித் திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை | [6] |
வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருதும் கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய் விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை உலகறி பழவினை அறவொழித் தானை | [7] |
ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப் புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக் காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித் தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை | [8] |
புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப் பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப இலங்குமா முத்தினோ டினமணி இடறி இருகரைப் பெருமரம் பீழ்ந்துகொண் டெற்றிக் கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை மேலைநோய் இம்மையே வீடுவித் தானை | [9] |
மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற அங்கையான் கழலடி யன்றிமற் றறியான் அடியவர்க் கடியவன் தொழுவன் ஆரூரன் கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல் தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார் தவநெறி சென்றமர் உலகம்ஆள் பவரே | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.079  
மானும், மரை இனமும், மயில்
பண் - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை (திருத்தலம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ; அருள்தரு பருவதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பருவதநாதர் திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=DlIzx0Fux38
மானும்மரை இனமும்மயி லினமுங்கலந் தெங்கும் தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப் பூமாமர முரிஞ்சிப்பொழி லூடேசென்று புக்குத் தேமாம்பொழில் நீழற்றுயில் சீபர்ப்பத மலையே | [1] |
மலைச்சாரலும் பொழிற்சாரலும் புறமேவரும் இனங்கள் மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட மலங்கித்தம களிற்றை அழைத்தோடியும் பிளிறீயவை அலமந்துவந் தெய்த்துத் திகைத்தோடித்தம் பிடிதேடிடுஞ் சீபர்ப்பத மலையே | [2] |
மன்னிப்புனங் காவல்மட மொழியாள்புனங் காக்கக் கன்னிக்கிளி வந்துகவைக் கோலிக்கதிர் கொய்ய என்னைக்கிளி மதியாதென எடுத்துக்கவ ணொலிப்பத் தென்னற்கிளி திரிந்தேறிய சீபர்ப்பத மலையே | [3] |
மய்யார்தடங் கண்ணாள்மட மொழியாள்புனங் காக்கச் செவ்வேதிரிந் தாயோவெனப் போகாவிட விளிந்து கய்பாவிய கவணான்மணி எறியஇரிந் தோடிச் செவ்வாயன கிளிபாடிடுஞ் சீபர்ப்பத மலையே | [4] |
ஆனைக்குலம் இரிந்தோடித்தன் பிடிசூழலில் திரியத் தானப்பிடி செவிதாழ்த்திட அதற்குமிக இரங்கி மானக்குற அடல்வேடர்கள் இலையாற்கலை கோலித் தேனைப்பிழிந் தினிதூட்டிடுஞ் சீபர்ப்பத மலையே | [5] |
மாற்றுக்களி றடைந்தாய் என்று மதவேழங்கை யெடுத்து மூற்றித்தழ லுமிழ்ந்தும்மதம் பொழிந்தும்முகஞ் சுழியத் தூற்றத்தரிக் கில்லேனென்று சொல்லிஅய லறியத் தேற்றிச்சென்று பிடிசூளறுஞ் சீபர்ப்பத மலையே | [6] |
அப்போதுவந் துண்டீர்களுக் கழையாதுமுன் னிருந்தேன் எப்போதும்வந் துண்டால்எமை எமர்கள்சுழி யாரோ இப்போதுமக் கிதுவேதொழில் என்றோடிஅக் கிளியைச் செப்பேந்திள முலையாள்எறி சீபர்ப்பத மலையே | [7] |
திரியும்புரம் நீறாக்கிய செல்வன்றன கழலை அரியதிரு மாலோடயன் றானும்மவ ரறியார் கரியின்னின மோடும்பிடி தேனுண்டவை களித்துத் திரிதந்தவை திகழ்வாற்பொலி சீபர்ப்பத மலையே | [8] |
ஏனத்திரள் கிளைக்கஎரி போலமணி சிதற ஏனல்லவை மலைச்சாரலிற் றிரியுங்கர டீயும் மானும்மரை இனமும்மயில் மற்றும்பல வெல்லாம் தேனுண்பொழில் சோலைமிகு சீபர்ப்பத மலையே | [9] |
நல்லாரவர் பலர்வாழ்தரு வயல்நாவல வூரன் செல்லலுற வரியசிவன் சீபர்ப்பத மலையை அல்லலவை தீரச்சொன தமிழ்மாலைகள் வல்லார் ஒல்லைசெல வுயர்வானகம் ஆண்டங்கிருப் பாரே | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.092  
எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?
பண் - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி (திருத்தலம் திருப்புக்கொளியூர் (அவிநாசி) ; அருள்தரு பெருங்கருணைநாயகி உடனுறை அருள்மிகு அவிநாசியப்பர் திருவடிகள் போற்றி )
திருவாரூர்ப் பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்த சுந்தரர், சிலநாட் சென்றபின் சேரமான் பெருமாளை நினைந்து மலைநாடு செல்லத் திருவுளங்கொண்டார். சோழநாட்டைக் கடந்து, கொங்குநாட்டை யடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசியை அணுகி, திருவீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஒரு வீட்டில் மங்கல ஒலியும், அதன் எதிர் வீட்டில் அழுகையொலியும் எழுதலைக் கேட்டு இவ்வாறு நிகழக் காரணம் யாது என வினவினார். அதுகேட்ட வேதியர்கள் நிகழ்ந்ததைக் கூறினர். ஒத்த பருவத்தினராய் ஐந்து வயது நிரம்பப்பெற்ற சிறுவர் இருவர் மடுவில் குளித்தபோது ஒருவனை முதலை விழுங்கியது. மற்றொருவன் பிழைத்தான். பிழைத்த சிறுவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நிகழ்கிறது. இவர்கள் வீட்டில் எழும் மங்கல ஒலி முதலை வாயில் அகப்பட்டிறந்த சிறுவனுடைய பெற்றோர்க்கு, புதல்வனை நினைப்பித்தமையால் அவர்கள் வருந்துகின்றனர் என்று வேதியர் கூறக்கேட்ட சுந்தரர் வேதனைகொண்டார். அந்நிலையில் இறந்த சிறுவனின் பெற்றோர், சுந்தரர் வருகையை அறிந்து முகமலர்ச்சியோடு வரவேற்றனர். இவர்கள் புதல்வனை முதலைவாயினின்று அழைத்துத் தந்த பின்னரே அவிநாசிப் பெரு மானை வழிபடவேண்டுமென்று உறுதிகொண்டார். அம் மடு இருக்கு மிடத்தைக் கேட்டறிந்து அங்குச் சென்றார். முதலை விழுங்கிய புதல்வனை உயிருடன் கரையில் கொண்டுவந்து தரும்படி அருள் செய்க என இறைவனை வேண்டி, எற்றான் மறக்கேன் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடினார். உரைப்பார் உரை என்னும் நான்காம் திருப்பாடலைப் பாடும்பொழுது இயமன் மடுவிலிருந்த முதலை வயிற்றுள் புதல்வன் உடம்பைச் சென்ற ஆண்டுகளின் வளர்ச்சி யுடையதாகச் செய்து புகுத்தினன். முதலை கரையிலே வந்து தான் முன் விழுங்கிய புதல்வனை உமிழ்ந்தது. புதல்வனைக் கண்ட தாய் தழுவியெடுத்தாள். தாயும் தந்தையும் சுந்தரரை வீழ்ந்து வணங்கினர். இந் நிகழ்ச்சியைக் கண்டோர் அனைவரும் திரு வருள் திறத்தை வியந்தனர். சுந்தரர் சிறுவனை அவிநாசித் திருக் கோயிலுக்கு அழைத்துச் சென்று இறைவரைத் தொழுது வேதியர் வீட்டிற்கு வந்து மங்கல வாத்தியங்கள் முழங்க உபநயனம் செய்வித் தருளினார் Audio: https://sivaya.org/audio/7.092 Etraal Marakkaen.mp3
Audio: https://www.youtube.com/watch?v=s_4KMZXZ-Bw
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே உற்றாய்என் றுன்னையே உள்குகின்றேன் உணர்ந் துள்ளத்தால் புற்றா டரவா புக்கொளி யூர்அவி னாசியே பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே | [1] |
வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ ஒழிவ தழகோசொல் லாய்அரு ளோங்கு சடையானே பொழிலா ருஞ்சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை இழியாக் குளித்த மாணிஎன் னைக்கிறி செய்ததே | [2] |
எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்கால் கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பார்இலை பொங்கா டரவா புக்கொளி யூர்அவி னாசியே எங்கோ னேஉனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே | [3] |
உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய் அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி னாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே | [4] |
அரங்காவ தெல்லா மாயிடு காடது அன்றியும் சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப் புரங்கோட எய்தாய் புக்கொளி யூர்அவி னாசியே குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே | [5] |
நாத்தா னும்உனைப் பாடல்அன் றிநவி லாதெனாச் சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய் பூத்தாழ் சடையாய் புக்கொளி யூர்அவி னாசியே கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே | [6] |
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம் சந்திகள் தோறுஞ் சலம்புட்பம் இட்டு வழிபடப் புந்தி உறைவாய் புக்கொளி யூர்அவி னாசியே நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே | [7] |
பேணா தொழிந்தேன் உன்னைஅல் லாற்பிற தேவரைக் காணா தொழிந்தேன் காட்டுதி யேல்இன்னங் காண்பன்நான் பூணாண் அரவா புக்கொளி யூர்அவி னாசியே காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே | [8] |
நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய் புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே | [9] |
நீரேற ஏறு நிமிர்புன்சடை நின்மல மூர்த்தியைப் போரேற தேறியைப் புக்கொளி யூர்அவி னாசியைக் காரேறு கண்டனைத் தொண்டன்ஆ ரூரன் கருதிய சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.095  
மீளா அடிமை உமக்கே ஆள்
பண் - செந்துருத்தி ஹரிகாம்போஜி மத்யமாவதி காரா (திருத்தலம் திருவாரூர் ; அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி )
திருத்துருத்தியிலிருந்து திருவாரூரை யடைந்த நம்பியாரூரர், முதலில் திருப்பரவையுண்மண்டளி யென்னும் திருக்கோயிலை யடைந்து திருப்பதிகம் பாடி, எனது துன்பத்தினைப் போக்கிக் கண் காணும்படிக் காட்டுதல் வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பிறகு அடியார்களுடன் ஆரூர் மூலட்டானேசுவரரை அர்த்தயாம காலத்திலே சென்று வழிபட எண்ணி அயன்மை தோன்ற வருந்திக் கூறும் நிலையில், திருப்பதிகம் பாடிக்கொண்டு உள்ளே சென்று வீழ்ந்து வணங்கினார். இறைவன் திருமேனி யழகைக் காண ஒரு கண் போதாமையை எடுத்துக்கூறி, வலக் கண் வேண்டி மிக உருக்கமாக, மீளா அடிமை என்ற திருப்பதிகத்தைப் பாடினார்.
இந்த பதிகத்தை பாடினாலோ அல்லது கேட்டாலோ கண்களில் உள்ள கோளாறு பார்வை குறைபாடு அனைத்தும் நீங்கும் Audio: https://www.youtube.com/watch?v=57PlwAi1hCc
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே | [1] |
விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன் குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை யாக்கினீர் எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே | [2] |
அன்றில் முட்டா தடையுஞ் சோலை ஆரூ ரகத்தீரே கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி யவைபோல என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணாது குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே | [3] |
துருத்தி யுறைவீர் பழனம் பதியாச் சோற்றுத் துறையாள்வீர் இருக்கை திருவா ரூரே உடையீர் மனமே யெனவேண்டா அருத்தி யுடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வருத்தி வைத்து மறுமைப் பணித்தால் வாழ்ந்து போதீரே | [4] |
செந்தண் பவளந் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர் எந்தம் அடிகேள் இதுவே யாமா றுமக்காட் பட்டோர்க்குச் சந்தம் பலவும் பாடும் மடியார் தங்கண் காணாது வந்தெம் பெருமான் முறையோ என்றால் வாழ்ந்து போதீரே | [5] |
தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேருந் திருவாரூர்ப் புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து தங்கண் காணாது மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே | [6] |
ஆயம் பேடை அடையுஞ் சோலை ஆரூ ரகத்தீரே ஏயெம் பெருமான் இதுவே ஆமா றுமக்காட் பட்டோர்க்கு மாயங் காட்டிப் பிறவி காட்டி மறவா மனங்காட்டிக் காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே | [7] |
கழியாய்க் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை இகழா தேத்துவோம் பழிதா னாவ தறியீர் அடிகேள் பாடும் பத்தரோம் வழிதான் காணா தலமந் திருந்தால் வாழ்ந்து போதீரே | [8] |
பேயோ டேனும் பிரிவொன் றின்னா தென்பர் பிறரெல்லாம் காய்தான் வேண்டிற் கனிதா னன்றோ கருதிக் கொண்டக்கால் நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோர்க்கு வாய்தான் திறவீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே | [9] |
செருந்தி செம்பொன் மலருஞ் சோலை இதுவோ திருவாரூர் பொருந்தித் திருமூ லட்டா னம்மே இடமாக் கொண்டீரே இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழா தேத்துவோம் வருந்தி வந்தும் உமக்கொன் றுரைத்தால் வாழ்ந்து போதீரே | [10] |
காரூர் கண்டத் தெண்டோள் முக்கண் கலைகள் பலவாகி ஆரூர்த் திருமூ லட்டா னத்தே அடிப்பேர் ஆரூரன் பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதீரே | [11] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.100  
தான் எனை முன் படைத்தான்;
பண் - பஞ்சமம் ஹனுமத்தோடி ஆபோகி ஆகிரி (திருத்தலம் திருக்கயிலாயம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பெருமான் சுந்தரரைத் திருக்கயிலைக்கு மீண்டும் அழைத்துக்கொள்ளத் திருவுளங் கொண்டார். நம்பியாரூரரைத் திருக்கயிலைக்கு அழைத்து வரத் தேவர்கள் பலரையும் திருவஞ்சைக்களத்திற்கு அனுப்பி யருளினார். சிவபிரானினருளாணை மேற்கொண்டு வெள்ளையானை யுடன் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயில்வாயிலை அடைந்தனர் தேவர்கள். இறைவனை வழிபட்டுக் கோயில் வாயிலை யடைந்த சுந்தரரை வணங்கி நின்று தேவர்கள் திருக்கயிலைமலைக்கு வருமாறு இறைவனருளிய கட்டளையைத் தெரிவித்தனர். தேவர் கள் சுந்தரரை வலம்வந்து அவரை வெள்ளையானை மேலேற்றினர். சுந்தரர் தம் உயிர்த் தோழராகிய சேரமான் பெருமாளைச் சிந்தித்துக் கொண்டே கயிலைக்குப் புறப்பட்டுச் சென்றார். சுந்தரர் திருக்கயிலை செல்வதைத் திருவருளாற்றலால் உணர்ந்த சேரமான் பெருமாள் குதிரைமீதேறித் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயிலுக்குச் சென்றார். வெள்ளையானைமீது அமர்ந்து செல்லும் சுந்தரரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே திருவைந்தெழுத்தை ஓதினார். அவ்வளவில் அக்குதிரை வான்வழி செல்லும் ஆற்றல் பெற்று வெள்ளையானையை வலம் வந்து அதற்கு முன்னே செல்வதாயிற்று. சுந்தரர், தானெனை முன் படைத்தான் என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தவாறு திருக்கயிலையை அடைந்து தென்திசை வாயிலை அணுகினார். சேரர்கோனும் சுந்தரரும் தத்தம் ஊர்தி களினின்று கீழிறங்கிப் பல வாயில்களையும் கடந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தனர். அவ்வாயிலில் சேரர்கோன் உள்ளே செல்ல அனுமதியின்றித் தடைப்பட்டு நின்றார். சுந்தரர், உள்ளே சென்று அம்மையப்பராய பெருமான் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சி நின்று, சேரமான் பெருமாள் வருகையை விண்ணப்பித்தார். சிவபிரான் மகிழ்ந்து சேரமானை வரவிடுக என நந்திதேவர்க்குப் பணித்தார். அவரும் இறைவனருளிப்பாட்டைக் கூறிச் சேரமான் பெருமாளை உள்ளே அழைத்து வந்தார். உள்ளேவந்த சேரர்கோன் சிவபிரானை வீழ்ந்திறைஞ்சி நின்றார். பெருமான் சேரர்கோனை நீ இங்கு நாம் அழையாமை வந்ததேன் என வினவினார். அதுகேட்ட சேரவேந்தர் அடியேன் ஆரூரர் கழல்போற்றி அவரைச் சேவித்து வந்தேன். திரு வருள்வெள்ளம் இங்கு என்னை ஈர்த்து நிறுத்தியது. அடியேன் பாடிய திருக்கயிலாய ஞான உலா என்ற நூலைச் செவிமடுத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். திருக்கயிலாய ஞான உலா எடுத்துரைத்து அரங்கேற் றினார். பெருமான் அவரை நோக்கிச் சேரனே நீ நம்பியாரூரராகிய ஆலால சுந்தரருடன் கூடி நீவிர் இருவீரும் நம் சிவகணத் தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றிருப்பீராக எனத் திருவருள் பாலித்தார். சுந்தரர், வெள்ளையானையிலமர்ந்து திருக்கயிலையை நோக்கிச் சென்றபொழுது பாடிய தானெனைமுன் படைத்தான் என்ற திருப்பதிகத்தை, வருணனிடத்துக் கொடுத்தருள அவன் அத் திருப்பதிகத்தினைத் திருவஞ்சைக் களத்தில் கொண்டுவந்து சேர்ப் பித்தான். Audio: https://sivaya.org/audio/7.100 Thaan Enai Padaiththaan.mp3
Audio: https://www.youtube.com/watch?v=qhtteaiYfA4
தானெனை முன்படைத்தான் அத றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயி னேனைப் பொருட்படுத்து வானெனைவந் தெதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தான் நொடித் தான்மலை உத்தமனே | [1] |
ஆனை உரித்தபகை அடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தமரர் வலஞ் செய்தெனை யேறவைக்க ஆனை அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே | [2] |
மந்திரம் ஒன்றறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்களால் துரி சேசெயுந் தொண்டன்எனை அந்தர மால்விசும்பில் அழ கானை யருள்புரிந்த துந்தர மோநெஞ்சமே நொடித் தான்மலை உத்தமனே | [3] |
வாழ்வை உகந்தநெஞ்சே மட வார் தங்கள் வல்வினைப்பட் டாழ முகந்தவென்னை அது மாற்றி அமரரெல்லாம் சூழ அருள்புரிந்து தொண்ட னேன் பரமல்லதொரு வேழம் அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே | [4] |
மண்ணுல கிற்பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுல கம்பெறுதல் தொண்ட னேன்இன்று கண்டொழிந்தேன் விண்ணுல கத்தவர்கள் விரும் பவெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித் தான்மலை உத்தமனே | [5] |
அஞ்சினை ஒன்றிநின்று அலர் கொண்டடி சேர்வறியா வஞ்சனை யென்மனமே வைகி வானநன் னாடர்முன்னே துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்ட னேன்பர மல்லதொரு வெஞ்சின ஆனைதந்தான் நொடித் தான்மலை உத்தமனே | [6] |
நிலைகெட விண்ணதிர நிலம் எங்கும் அதிர்ந்தசைய மலையிடை யானைஏறி வழி யேவரு வேனெதிரே அலைகட லால்அரையன் அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச உலையணை யாதவண்ணம் நொடித் தான்மலை உத்தமனே | [7] |
அரவொலி ஆகமங்கள் அறி வார்அறி தோத்திரங்கள் விரவிய வேதஒலி விண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்ப வரமலி வாணன்வந்து வழி தந்தெனக் கேறுவதோர் சிரமலி யானைதந்தான் நொடித் தான்மலை உத்தமனே | [8] |
இந்திரன் மால்பிரமன் னெழி லார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த யானை யருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான் நந்தமர் ஊரனென்றான் நொடித் தான்மலை உத்தமனே | [9] |
ஊழிதொ றூழிமுற்றும் உயர் பொன்நொடித் தான்மலையைச் சூழிசை யின்கரும்பின் சுவை நாவல ஊரன்சொன்ன ஏழிசை இன்றமிழால் இசைந் தேத்திய பத்தினையும் ஆழி கடலரையா அஞ்சை யப்பர்க் கறிவிப்பதே | [10] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.101  
சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
பண் - (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கலிவெண்பா Audio: https://sivaya.org/thiruvasagam2/01 Sivapuranam.mp3
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5 வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10 ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15 ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20 கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35 வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40 ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45 கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55 விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75 நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 | [1] |
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க! பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க! கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க! சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! | [2] |
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி! மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி! சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி! | [3] |
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை, முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்: | [4] |
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி; விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்! எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர், பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்; | [5] |
புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி, பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி, கல்ஆ(ய்,) மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய், வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய், செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள், | [6] |
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்! மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்; உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள் ஐயா என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே! | [7] |
வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா! பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி, மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே! எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே! அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே! | [8] |
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய், போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்; நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே! மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே! | [9] |
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச் சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று, பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்! நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை | [10] |
மறைந்திட மூடிய மாய இருளை, அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி, புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, | [11] |
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி, நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காட்டி, நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு, | [12] |
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே! மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே! தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே! பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே! நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட, | [13] |
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே! ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே! ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே! இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! | [14] |
அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே! ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே! ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே! கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் | [15] |
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே! போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே! காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே! ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய், | [16] |
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம் தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள் ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே! வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன்; எம் ஐயா, அரனே! ஓ! என்று என்று | [17] |
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே, கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே! நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே! தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே! | [18] |
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று, சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ், பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95) திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி! | [19] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.107  
திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்
பண் - (திருத்தலம் திருவண்ணாமலை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கொச்சகக்கலிப்பா Audio: https://sivaya.org/thiruvaasagam/07 Thiruvempavai Thiruvasagam.mp3
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேயென்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். | [1] |
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். | [2] |
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். | [3] |
ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். | [4] |
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். | [5] |
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும் ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். | [6] |
அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர் உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ் சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். | [7] |
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். | [8] |
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய். | [9] |
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள் ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். | [10] |
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற் செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். | [11] |
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய். | [12] |
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். | [13] |
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். | [14] |
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். | [15] |
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். | [16] |
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். | [17] |
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். | [18] |
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள் எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய். | [19] |
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம் போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய். | [20] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.112  
திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
பண் - பூவேறு கோனும் புரந்தரனும் (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா
திக்குவாய் மாறிச் சீர் பெறுவதற்கும் , சிறந்த பேச்சாளர் ஆவதற்க்கும் ஓதவேண்டிய பதிகம் Audio: https://sivaya.org/thiruvaasagam/12 Thiruchalal Thiruvasagam.mp3
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. | [1] |
என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தான்ஈசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. | [2] |
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினுங் காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. | [3] |
அயனை அநங்கனை அந்தகனைச் சந்திரனை வயனங்கண் மாயா வடுச்செய்தான் காணேடீ நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால் சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ. | [4] |
தக்கனையும் எச்சனையுந் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங் கெச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன்காண் சாழலோ. | [5] |
அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய் நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம் சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ. | [6] |
மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. | [7] |
கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. | [8] |
தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பா லுகந்திலனேற் பேதாய் இருநிலத்தோர் விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ. | [9] |
தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. | [10] |
நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து கங்காளம் தோள்மேலே காதலித்தான் காணேடீ கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ. | [11] |
கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி ஆனால் அவனுக்கிங் காட்படுவார் ஆரேடீ ஆனாலுங் கேளாய் அயனுந் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. | [12] |
மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங் கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. | [13] |
தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ. | [14] |
கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ. | [15] |
நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினும் கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ. | [16] |
அம்பலத்தே கூத்தாடி அமுது செயப் பலிதிரியும் நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. | [17] |
சலமுடைய சலந்தரன்றன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. | [18] |
அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம் எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும் தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ. | [19] |
அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ. | [20] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.116  
திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
பண் - தாலாட்டு பாடல் (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தரவுகொச்சகக் கலிப்பா Audio: https://sivaya.org/thiruvaasagam/16 Thiruponnusal Thiruvasagam.mp3
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை ஆரா அமுதின் அருட்டா ளிணைபாடிப் போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. | [1] |
மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள் தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக் கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. | [2] |
முன்ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம் பன்னூறு கோடி இமையோர்கள் தாம்நிற்பத் தன்நீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து மன்னூற மன்னுமணி உத்தர கோசமங்கை மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப் பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. | [3] |
நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன் மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள் நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப் புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. | [4] |
ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக் கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப் பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. | [5] |
மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத் தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள் கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித் தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான் காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால் போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. | [6] |
உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான் அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல் என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப் பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. | [7] |
கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச் சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை மாலுக் கரியானை வாயார நாம்பாடிப் பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. | [8] |
தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான் பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப் பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. | [9] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.120  
திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
பண் - புறநீர்மை ஹரிகாம்போஜி பூபாளம் காமாஜ் (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எண்சீர் விருத்தம் Audio: https://sivaya.org/thiruvaasagam/20 Thirupalliyelluchi Thiruvasagam.mp3
போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. | [1] |
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக் கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே. | [2] |
கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை யொளிஒளி உதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. | [3] |
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. | [4] |
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந் தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. | [5] |
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின் றார்அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. | [6] |
அதுபழச் சுவையென அமுதென அறிதற் கரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவளர் பொழில்திரு வுத்தர கோச மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. | [7] |
முந்திய முதல்நடு இறுதியு மானாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின் அடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய் ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. | [8] |
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. | [9] |
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. | [10] |
Back to Top
மாணிக்க வாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார்
8.225  
இருபத்தைந்தாம் அதிகாரம்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரவொருங்கே எடுத்தணி கையே றினவளை யார்ப்ப இளமயிலேர் கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலரம் படுத்தணி வாளிளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே. | [1] |
>சுரும்புறு கொன்றையன் தொல்புலி யூர்ச்சுருங் கும்மருங்குற் பெரும்பொறை யாட்டியை யென்இன்று பேசுவ பேரொலிநீர்க் கரும்புறை யூரன் கலந்தகன் றானென்று கண்மணியும் அரும்பொறை யாகுமென் னாவியுந் தேய்வுற் றழிகின்றதே. | [2] |
>அப்புற்ற சென்னியன் தில்லை யுறாரி னவர்உறுநோய் ஒப்புற் றெழில்நல மூரன் கவரஉள் ளும்புறம்பும் வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம் மெல்லணை யேதுணையாச் செப்புற்ற கொங்கையர் யாவர்கொ லாருயிர் தேய்பவரே. | [3] |
>தேவா சுரரிறைஞ் சுங்கழ லோன்தில்லை சேரலர்போல் ஆவா கனவும் இழந்தேன் நனவென் றமளியின்மேற் பூவார் அகலம்வந் தூரன் தரப்புலம் பாய்நலம்பாய் பாவாய் தழுவிற் றிலேன்விழித் தேனரும் பாவியனே. | [4] |
>செய்ம்முக நீல மலர்தில்லைச் சிற்றம் பலத்தரற்குக் கைம்முகங் கூம்பக் கழல்பணி யாரிற் கலந்தவர்க்குப் பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன் றென்றிலையே நெய்ம்முக மாந்தி இருள்முகங் கீழும் நெடுஞ்சுடரே. | [5] |
>பூங்குவ ளைப்பொலி மாலையும் ஊரன்பொற் றோளிணையும் ஆங்கு வளைத்துவைத் தாரேனுங் கொள்கநள் ளார்அரணந் தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச் சிற்றம் பலத்தயல்வாய் ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத் தோமன் உறாவரையே. | [6] |
>தவஞ்செய் திலாதவெந் தீவினை யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா தெவஞ்செய்து நின்றினி யின்றுனை நோவதென் அத்தன்முத்தன் சிவன்செய்த சீரரு ளார்தில்லை யூரநின் சேயிழையார் நவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந் தொடல்விடு நற்கலையே. | [7] |
>தணியுறப் பொங்குமிக் கொங்கைகள் தாங்கித் தளர்மருங்குல் பிணியுறப் பேதைசென் றின்றெய்து மால்அர வும்பிறையும் அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல் லாயநல் லார்கண்முன்னே பணியுறத் தோன்றும் நுடங்கிடை யார்கள் பயின்மனைக்கே. | [8] |
>இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ்செய்து குரவணை யுங்குழல் இங்கிவ ளால்இக் குறியறிவித் தரவணை யுஞ்சடை யோன்தில்லை யூரனை யாங்கொருத்தி தரவணை யும்பரி சாயின வாறுநந் தன்மைகளே. | [9] |
>சிவந்தபொன் மேனி மணிதிருச் சிற்றம் பலமுடையான் சிவந்தஅம் தாளணி யூரற் குலகிய லாறுரைப்பான் சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப் பட்டுங்கட் டார்முலைமேற் சிவந்தஅம் சாந்தமுந் தோன்றின வந்து திருமனைக்கே. | [10] |
>குராப்பயில் கூழை யிவளின்மிக் கம்பலத் தான்குழையாம் அராப்பயில் நுண்ணிடை யாரடங் காரெவ ரேயினிப்பண் டிராப்பகல் நின்றுணங் கீர்ங்கடை யித்துணைப் போழ்திற்சென்று கராப்பயில் பூம்புன லூரன் புகுமிக் கடிமனைக்கே. | [11] |
>வந்தான் வயலணி யூர னெனச்சின வாள்மலர்க்கண் செந்தா மரைச்செல்வி சென்றசிற் றம்பல வன்னருளான் முந்தா யினவியன் நோக்கெதிர் நோக்க முகமடுவிற் பைந்தாட் குவளைகள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே. | [12] |
>வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்களன்பிற் செல்லிகைப் போதின் எரியுடை யோன்தில்லை அம்பலஞ்சூழ் மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண் டூதவிண் தோய்பிறையோ டெல்லிகைப் போதியல் வேல்வய லூரற் கெதிர்கொண்டதே. | [13] |
>புலவித் திரைபொரச் சீறடிப் பூங்கலஞ் சென்னியுய்ப்பக் கலவிக் கடலுட் கலிங்கஞ்சென் றெய்திக் கதிர்கொண்முத்தம் நிலவி நிறைமது ஆர்ந்தம் பலத்துநின் றோனருள்போன் றுலவிய லாத்தனஞ் சென்றெய்த லாயின வூரனுக்கே. | [14] |
>செவ்வாய் துடிப்பக் கருங்கண் பிறழச்சிற் றம்பலத்தெம் மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக் கலுழ்ந்து புலந்துநைந்தாள் இவ்வா றருள்பிறர்க் காகு மெனநினைந் தின்னகையே. | [15] |
>மலரைப் பொறாவடி மானுந் தமியள்மன் னன்ஒருவன் பலரைப் பொறாதென் றிழிந்துநின் றாள்பள்ளி காமனெய்த அலரைப் பொறாதன் றழல்விழித் தோனம் பலம்வணங்காக் கலரைப் பொறாச்சிறி யாளென்னை கொல்லோ கருதியதே. | [16] |
>வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து வல்லைப் பொலிவொடு வந்தமை யால்நின்று வான்வழுத்துந் தில்லைப் பொலிசிவன் சிற்றம் பலஞ்சிந்தை செய்பவரின் மல்லைப் பொலிவய லூரன்மெய் யேதக்க வாய்மையனே. | [17] |
>சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக் கிற்றுணைச் சேவல்செய்வான் தேன்முதிர் வேழத்தின் மென்பூக் குதர்செம்ம லூரன்திண்டோள் மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத் தில்லை யானருளே போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது வாய்ந்த புதுப்புனலே. | [18] |
>சேயே யெனமன்னு தீம்புன லூரன்திண் டோளிணைகள் தோயீர் புணர்தவந் தொன்மைசெய் தீர்சுடர் கின்றகொலந் தீயே யெனமன்னு சிற்றம் பலவர்தில் லைந்நகர்வாய் வீயே யெனஅடி யீர்நெடுந் தேர்வந்து மேவினதே. | [19] |
>அரமங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான் அரமங் கையரென வந்தணு கும்மவ ளன்றுகிராற் சிரமங் கயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம் பலம்வழுத்தாப் புரமங் கையரின்நை யாதைய காத்துநம் பொற்பரையே. | [20] |
>கனலூர் கணைதுணை யூர்கெடச் செற்றசிற் றம்பலத்தெம் அனலூர் சடையோ னருள்பெற் றவரின் அமரப்புல்லும் மினலூர் நகையவர் தம்பா லருள்விலக் காவிடின்யான் புனலூ ரனைப்பிரி யும்புன லூர்கணப் பூங்கொடியே. | [21] |
>இறுமாப் பொழியுமன் றேதங்கை தோன்றினென் னெங்கையங்கைச் சிறுமான் தரித்தசிற் றம்பலத் தான்தில்லை யூரன்திண்டோள் பெறுமாத் தொடுந்தன்ன பேரணுக் குப்பெற்ற பெற்றியினோ டிறுமாப் பொழிய இறுமாப் பொழிந்த இணைமுலையே. | [22] |
>வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயினன்ன தீயாடி சிற்றம்பலமனை யாள்தில்லை யூரனுக்கின் றேயாப் பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள் யாயா மியல்பிவள் கற்புநற் பால வியல்புகளே. | [23] |
>விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை யிறையமைத்த திறலியல் யாழ்கொண்டு வந்துநின் றார்சென் றிராத்திசைபோம் பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலுமன்னோ அறலியல் கூழைநல் லாய்தமி யோமை யறிந்திலரே. | [24] |
>திக்கின் இலங்குதிண் டோளிறை தில்லைச்சிற் றம்பலத்துக் கொக்கின் இறக தணிந்துநின் றாடிதென் கூடலன்ன அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால் தக்கின் றிருந்திலன் நின்றசெவ் வேலெந் தனிவள்ளலே. | [25] |
>அன்புடை நெஞ்சத் திவள்பே துறஅம் பலத்தடியார் என்பிடை வந்தமிழ் தூறநின் றாடி யிருஞ்சுழியல் தன்பெடை நையத் தகவழிந் தன்னஞ் சலஞ்சலத்தின் வன்பெடை மேல்துயி லும்வய லூரன் வரம்பிலனே. | [26] |
>அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர்அந் தண்கயிலை மஞ்சார் புனத்தன்று மாந்தழை யேந்திவந் தாரவரென் நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவுமுண்டேற் பஞ்சா ரமளிப் பிரிதலுண் டோவெம் பயோதரமே. | [27] |
>தெள்ளம் புனற்கங்கை தங்குஞ் சடையன்சிற் றம்பலத்தான் கள்ளம் புகுநெஞ்சர் காணா இறையுறை காழியன்னாள் உள்ளம் புகுமொரு காற்பிரி யாதுள்ளி யுள்ளுதொறும் பள்ளம் புகும்புனல் போன்றகத் தேவரும் பான்மையளே. | [28] |
>தேன்வண் டுறைதரு கொன்றையன் சிற்றம் பலம்வழுத்தும் வான்வண் டுறைதரு வாய்மையன் மன்னு குதலையின்வா யான்வண் டுறைதரு மாலமு தன்னவன் வந்தணையான் நான்வண் டுறைதரு கொங்கையெவ் வாறுகொ னண்ணுவதே. | [29] |
>கயல்வந்த கண்ணியர் கண்ணினை யால்மிகு காதரத்தால் மயல்வந்த வாட்டம் அகற்றா விரதமென் மாமதியின் அயல்வந்த ஆடர வாடவைத் தோனம் பலம்நிலவு புயல்வந்த மாமதிற் றில்லைநன் னாட்டுப் பொலிபவரே. | [30] |
>கூற்றாயினசின ஆளியெண் ணீர்கண்கள் கோளிழித்தாற் போற்றான் செறியிருட் பொக்கமெண் ணீர்கன் றகன்றபுனிற் றீற்றா வெனநீர் வருவது பண்டின்றெம் மீசர்தில்லைத் தேற்றார் கொடிநெடு வீதியிற் போதிர்அத் தேர்மிசையே. | [31] |
>வியந்தலை நீர்வையம் மெய்யே யிறைஞ்சவிண் டோய்குடைக்கீழ் வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற வார்வந்த வாளரக்கன் புயந்தலை தீரப் புலியூர் அரனிருக் கும்பொருப்பிற் கயந்தலை யானை கடிந்த விருந்தினர் கார்மயிலே. | [32] |
>தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும் ஓவியங் கண்டன்ன வொண்ணு தலாள் தனக் கோகையுய்ப்பான் மேவியங் கண்டனை யோவந் தனனென வெய்துயிர்த்துக் காவியங் கண்கழு நீர்ச்செவ்வி வௌவுதல் கற்றனவே. | [33] |
>உடைமணிகட்டிச் சிறுதே ருருட்டி யுலாத்தருமிந் நடைமணி யைத்தந்த பின்னர்முன் நான்முகன் மாலறியா விடைமணி கண்டர்வண் தில்லைமென் தோகையன் னார்கண்முன்னங் கடைமணி வாள்நகை யாயின்று கண்டனர் காதலரே. | [34] |
>மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல் கூரர்நின்வாய் மெய்கொண்ட அன்பின ரென்பதென் விள்ளா அருள்பெரியர் வைகொண்ட வூசிகொல் சேரியின் விற்றெம்இல் வண்ணவண்ணப் பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை ஆத்தின்னி போந்ததுவே. | [35] |
>கொல்லாண் டிலங்கு மழுப்படை யோன்குளிர் தில்லையன்னாய் வில்லாண் டிலங்கு புருவம் நெரியச் செவ் வாய்துடிப்பக் கல்லாண் டெடேல்கருங் கண்சிவப் பாற்று கறுப்பதன்று பல்லாண் டடியேன் அடிவலங் கொள்வன் பணிமொழியே. | [36] |
>மத்தக் கரியுரி யோன்தில்லை யூரன் வரவெனலுந் தத்தைக் கிளவி முகத்தா மரைத்தழல் வேல்மிளிர்ந்து முத்தம் பயக்குங் கழுநீர் விருந்தொடென் னாதமுன்னங் கித்தக் கருங்குவ ளைச்செவ்வி யோடிக் கெழுமினவே. | [37] |
>கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை யாட்டுவந்த தவலங் கிலாச்சிவன் தில்லையன் னாய்தழு விம்முழுவிச் சுவலங் கிருந்தநந் தோன்றல் துணையெனத் தோன்றுதலால் அவலங் களைந்து பணிசெயற் பாலை யரசனுக்கே. | [38] |
>சேறான் திகழ்வயற் சிற்றம் பலவர்தில் லைநகர்வாய் வேறான் திகழ்கண் இளையார் வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த பாறான் திகழும் பரிசினம் மேவும் படிறுவவேங் காறான் தொடல்தொட ரேல்விடு தீண்டலெங் கைத்தலமே. | [39] |
>செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம் பலவர்தில் லைநகரோர் பந்தார் விரலியைப் பாய்புன லாட்டிமன் பாவியெற்கு வந்தார் பரிசுமன் றாய்நிற்கு மாறென் வளமனையிற் கொந்தார் தடந்தோள் விடங்கால் அயிற்படைக் கொற்றவரே. | [40] |
>மின்றுன் னியசெஞ் சடைவெண் மதியன் விதியுடையோர் சென்றுன் னியகழற் சிற்றம் பலவன்தென் னம்பொதியில் நன்றுஞ் சிறியவ ரில்லெம தில்லம்நல் லூரமன்னோ இன்றுன் திருவரு ளித்துணை சாலுமன் னெங்களுக்கே. | [41] |
>செழுமிய மாளிகைச் சிற்றம் பலவர்சென் றன்பர்சிந்தைக் கழுமிய கூத்தர் கடிபொழி லேழினும் வாழியரோ விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியீர் விழுமிய அல்லகொல் லோஇன்ன வாறு விரும்புவதே. | [42] |
>திருந்தேன் உயநின்ற சிற்றம் பலவர்தென் னம்பொதியில் இருந்தேன் உயவந் திணைமலர்க் கண்ணின்இன் நோக்கருளிப் பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித் தாண்டநம் பெண்ணமிழ்தம் வருந்தே லதுவன் றிதுவோ வருவதொர் வஞ்சனையே. | [43] |
>இயன்மன்னும் அன்புதந் தார்க்கென் நிலையிமை யோரிறைஞ்சுஞ் செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம் பலவர்தென் னம்பொதியிற் புயன்மன்னு குன்றிற் பொருவேல் துணையாப்பொம் மென்இருள்வாய் அயன்மன்னும் யானை துரந்தரி தேரும் அதரகத்தே. | [44] |
>கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை மார்களைக் கண்பிழைப்பித் தெதிர்த்தெங்கு நின்றெப் பரிசளித் தானிமை யோரிறைஞ்சும் மதுத்தங் கியகொன்றை வார்சடை யீசர்வண் தில்லைநல்லார் பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா எம்மைப் பூசிப்பதே. | [45] |
>சிலைமலி வாணுத லெங்கைய தாக மெனச்செழும்பூண் மலைமலி மார்பி னுதைப்பத்தந் தான்றலை மன்னர்தில்லை உலைமலி வேற்படை யூரனிற் கள்வரில் என்னவுன்னிக் கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே. | [46] |
>ஆறூர் சடைமுடி அம்பலத் தண்டரண் டம்பெறினும் மாறூர் மழவிடை யாய்கண் டிலம்வண் கதிர்வெதுப்பு நீறூர் கொடுநெறி சென்றிச் செறிமென் முலைநெருங்கச் சீறூர் மரையத ளிற்றங்கு கங்குற் சிறிதுயிலே. | [47] |
>ஐயுற வாய்நம் அகன்கடைக் கண்டுவண் டேருருட்டும் மையுறு வாட்கண் மழவைத் தழுவமற் றுன்மகனே மெய்யுற வாம்இதுன் னில்லே வருகெனவெள்கிச்சென்றாள் கையுறு மான்மறி யோன்புலி யூரன்ன காரிகையே. | [48] |
>காரணி கற்பகங் கற்றவர் நற்றுணை பாணரொக்கல் சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன் தக்கோர் தஞ்சங்க நிதிவிதிசேர் ஊருணி உற்றவர்க் கூரன்மற் றியாவர்க்கும் ஊதியமே. | [49] |
Back to Top
திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா
9.001  
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=5iRwR3Nng10
Audio: https://www.youtube.com/watch?v=qfokVeeAam0
Audio: https://www.youtube.com/watch?v=rkPKs6yF0rc
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்குந் தேனே அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே. | [1] |
இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள் இருட்பிழம் பறஎறிந் தெழுந்த சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந் தூயநற் சோதியுட் சோதீ அடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா அயனொடு மால்அறி யாமைப் படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத் தொண்டனேன் பணியுமா பணியே. | [2] |
தற்பரம் பொருளே சசிகண்ட சிகண்டா சாமகண் டா அண்ட வாணா நற்பெரும் பொருளாய் உரைகலந் துன்னை என்னுடை நாவினால் நவில்வான் அற்பன்என் உள்ளத் தளவிலா உன்னைத் தந்தபொன் னம்பலத் தரசே கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத் தொண்டனேன் கருதுமா கருதே. | [3] |
பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என் பிறப்பிறப் பறுத்தபே ரொளியே கருமையின் வெளியே கயற்கணாள் இமவான் மகள்உமை யவள்களை கண்ணே அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும் அப்பனே அம்பலத் தமுதே ஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத் தொண்டனேன் உரைக்குமா றுரையே. | [4] |
கோலமே மேலை வானவர் கோவே குணங்குறி இறந்ததோர் குணமே காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா காம நாசா ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற் கோயில்கொண் டாடவல் லானே ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத் தொண்டனேன் நணுகுமா நணுகே. | [5] |
நீறணி பவளக் குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே வேறணி புவன போகமே யோக வெள்ளமே மேருவில் வீரா ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா அம்பொன்செய் அம்பலத் தரசே ஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத் தொண்டனேன் இசையுமா றிசைய. | [6] |
தனதன்நற் றோழா சங்கரா சூல பாணியே தாணுவே சிவனே கனகநற் றூணே கற்பகக் கொழுந்தே கண்கள்மூன் றுடையதோர் கரும்பே அனகனே குமர விநாயக சனக அம்பலத் தமரர்சே கரனே நுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா நுகரே. | [7] |
திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே திகைக்கின்றேன் றனைத்திகை யாமே நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே அறம்பல திறங்கண் டருந்தவர்க் கரசாய் ஆலின்கீழ் இருந்தஅம் பலவா புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத் தொண்டனேன் புணருமா புணரே | [8] |
தக்கன்நற் றலையும் எச்சன்வன் றலையும் தாமரை நான்முகன் தலையும் ஒக்கவிண் டுருள ஒண்டிருப் புருவம் நெறித்தரு ளியஉருத் திரனே அக்கணி புலித்தோ லாடைமேல் ஆட ஆடப்பொன் னம்பலத் தாடும் சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத் தொண்டனேன் தொடருமா தொடரே. | [9] |
மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக் கருள்புரி வள்ளலே மருளார் இடங்கொள்முப் புரம்வெந் தவியவை திகத்தேர் ஏறிய ஏறுசே வகனே அடங்கவல் லரக்கன் அரட்டிரு வரைக்கீழ் அடர்த்தபொன் னம்பலத் தரசே விடங்கொள்கண் டத்தெம் விடங்கனே உன்னைத் தொண்டனேன் விரும்புமா விரும்பே.? | [10] |
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டா தயன்திரு மாலொடு மயங்கி முறைமுறை முறையிட் டோர்வரி யாயை மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள் அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச் சிறுமையிற் பொறுக்கும்அம் பலத்துள் நிறைதரு கருணா நிலயமே உன்னைத் தொண்டனேன் நினையுமா நினையே.? | [11] |
Back to Top
சேந்தனார் திருப்பல்லாண்டு
9.029  
சேந்தனார் - கோயில்
பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=6hE5FaTnKMk
Audio: https://www.youtube.com/watch?v=BP9BAtLXm2Q
Audio: https://www.youtube.com/watch?v=JtqbwXCg7tk
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலப் பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனியெல் லாம்விளங்க அன்ன நடைமட வாள்உமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. | [1] |
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட் செய்மின் குழாம்புகுந் தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. | [2] |
நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந் திறங்களு மேசிந்தித் தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக் காலநிழற் பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. | [3] |
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண் டிற்சிதை யும்சில தேவர் சிறுநெறி சேராமே வில்லாண்டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. | [4] |
புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட் டின்னம் புகலரிதாய் இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக் கென்செய வல்லம்என்றும் கரந்துங் கரவாத கற்பக னாகிக் கரையில் கருணைக்கடல் பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. | [5] |
சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால் எங்குந் திசைதிசையன கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா மாய்நின்று கூத்தாடும் ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமரர் பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. | [6] |
சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற தார்பெறு வார்உலகில் ஊரும் உலகும் கழற உழறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. | [7] |
சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங் கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று புண்ணியர் போற்றிசைப்ப மாலும் அயனும் அறியா நெறிதந்து வந்தென் மனத்தகத்தே பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. | [8] |
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. | [9] |
தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ் வண்டத் தொடுமுடனே பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனக மும் அருளிச் சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. | [10] |
குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. | [11] |
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. | [12] |
எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு தாம்மெம் பிரான்என் றென்று சிந்தை செய்யும் சிவன் சீரடியார் அடிநாய் செப்புரை அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேற் பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று பல்லாண்டு கூறுதுமே. | [13] |
10.000 - திருமூலர் விநாயகர் வணக்கம் | |
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. | [ 1] |
10.100 - திருமூலர் பாயிரம் | |
கடவுள் வாழ்த்து ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே. | [ 1] |
10.100 - திருமூலர் பாயிரம் | |
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. | [ 24] |
10.100 - திருமூலர் பாயிரம் | |
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவ னாயினேன் நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நான்இருந் தேனே. | [ 29] |
10.100 - திருமூலர் பாயிரம் | |
பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன் ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன் நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன் தேடவல் லார்நெறி தேடகில் லேனே. | [ 33] |
10.100 - திருமூலர் பாயிரம் | |
நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன் நந்தி அருளாலே மூலனை நாடினேன் நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில் நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே. | [ 7] |
10.101 - திருமூலர் முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம் | |
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரை யானே. | [ 1] |
10.101 - திருமூலர் முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம் | |
அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரி சீசன் அருள்பெற லாமே. | [ 32] |
10.101 - திருமூலர் முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம் | |
தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. | [ 4] |
10.102 - திருமூலர் முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு | |
திருநெறி யாவது சித்தசித் தன்றிப் பெருநெறி யாய பிரானை நினைந்து குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும் ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. | [ 4] |
10.104 - திருமூலர் முதல் தந்திரம் - 4. உபதேசம் | |
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. | [ 27] |
10.104 - திருமூலர் முதல் தந்திரம் - 4. உபதேசம் | |
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காபசு பாசம் பதியணு கிற்பசு பாசம்நில் லாவே. | [ 3] |
10.106 - திருமூலர் முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை | |
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல் அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச் சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே. | [ 6] |
10.107 - திருமூலர் முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை | |
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற காலங் கழிவன கண்டும் அறிகிலார் ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி மேலுங் கிடந்து விரும்புவன் நானே. | [ 5] |
10.108 - திருமூலர் முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை | |
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை வேங்கடம் என்றே விரகறி யாதவர் தாங்கவல் லாருயிர் தாமறி யாரே. | [ 4] |
10.119 - திருமூலர் முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம் | |
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. | [ 2] |
10.121 - திருமூலர் முதல் தந்திரம் - 21. அன்புடைமை | |
அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. | [ 1] |
10.301 - திருமூலர் மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம் | |
இயம நியமமே எண்ணிலா ஆதனம் நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம் சயமிகு தாரணை தியானஞ் சமாதி அயமுறும் அட்டாங்க மாவது மாமே. 2, | [ 4] |
10.304 - திருமூலர் மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம் | |
பத்திரங் கோமுகம் பங்கயம் கேசரி சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும் உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப் பத்தொடு நூறு பலஆ சனமே. 5, | [ 6] |
10.305 - திருமூலர் மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம் | |
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்; கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்; துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே. | [ 3] |
10.306 - திருமூலர் மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம் | |
எருவிடும் வாசற் கிருவிரல் மேலே கருவிடும் வாசற் கிருவிரற் கீழே உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே. | [ 7] |
10.402 - திருமூலர் நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம் | |
ஆயும் சிவாய நமமசி வாயந ஆயும் நமசி வயய நமசிவா ஆயுமே வாய நமசியெனும் மந்திரம் ஆயும் சிகாரம்தொட் டந்தத் தடைவிலே. | [ 10] |
10.402 - திருமூலர் நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம் | |
அரகர என்ன அரியதொன் றில்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப் பன்றே. | [ 3] |
10.405 - திருமூலர் நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம் | |
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர் அறிவார் அருவுரு வாம்அவள் என்பர் அறிவார் கருமம் அவள்இச்சை என்பர் அறிவார் பரனும் அவளிடத் தானே. | [ 10] |
10.405 - திருமூலர் நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம் | |
திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப் பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மனி என்ன வருபல வாய்நிற்கும் மாமாது தானே. | [ 2] |
10.405 - திருமூலர் நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம் | |
ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே. | [ 29] |
10.406 - திருமூலர் நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம் | |
தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை மையலை நூக்கும் மனோன்மனி மங்கையைப் பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின் வெய்ய பவம்இனி மேவகி லாவே. | [ 29] |
10.413 - திருமூலர் நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம் | |
சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம் கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என் றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச் செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே. | [ 2] |
10.505 - திருமூலர் ஐந்தாம் தந்திரம் - 5. சரியை | |
நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெரு மான்என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே. | [ 3] |
10.601 - திருமூலர் ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம் | |
குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவம்என் பதுகுறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரையுணர் வற்றதோர் கோவே. | [ 9] |
10.602 - திருமூலர் ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு | |
மந்திர மாவதும் மாமருந் தாவதும் தந்திர மாவதும் தானங்க ளாவதும் சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும் எந்தை பிரான்றன் இணையடி தானே. 3, | [ 15] |
10.610 - திருமூலர் ஆறாம் தந்திரம் - 10. திருநீறு | |
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே. | [ 1] |
10.711 - திருமூலர் ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை | |
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே. | [ 1] |
10.711 - திருமூலர் ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை | |
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே | [ 6] |
10.713 - திருமூலர் ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை | |
படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின் நடமாடக் கோயில் நம்பற்கங் காகா நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின் படமாடக் கோயிற் பகவற்க தாமே. | [ 1] |
10.732 - திருமூலர் ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை | |
புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும் நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து குலம்ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலமந்து போம்வழி ஒன்பது தானே. | [ 3] |
10.738 - திருமூலர் ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம் | |
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே. | [ 3] |
10.816 - திருமூலர் எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை | |
அறிவறி வென்ற அறிவும் அனாதி அறிவுக் கறிவாம் பதியும் அனாதி அறிவினைக் கட்டிய பாசம் அனாதி அறிவு பதியின் பிறப்பறுந் தானே. | [ 1] |
10.820 - திருமூலர் எட்டாம் தந்திரம் - 20. முப்பரம் | |
ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரம் கூறா வுபதேசம் கூறில் சிவபரம் வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. | [ 3] |
10.821 - திருமூலர் எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம் | |
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி சோதி பரஞ்சுடர் தோன்றித் தோன்றாமையின் நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே. | [ 2] |
10.903 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி | |
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. | [ 2] |
10.905 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம் | |
அகாரம் முதலாக ஐம்பத்தொன் றாகி உகாரம் முதலாக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி நகார முதலாகும் நந்திதன் நாமமே. | [ 2] |
10.907 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம் | |
நமஎன்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவஎன்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப் பவமது தீரும் பரிசும்அ தற்றால் அவமதி தீரும அறும்பிறப் பன்றே. 8, | [ 3] |
10.908 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம் | |
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே. | [ 2] |
10.909 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம் | |
நாயோட்டு மந்திரம் நான்மறை நால்வேதம் நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம் நாயோட்டு மந்திரம் நாதாந்த மாம்சோதி நாயோட்டு மந்திரம் நாமறி யோமே. | [ 2] |
10.924 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை | |
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே. | [ 18] |
10.928 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம் | |
நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள் ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர் காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே. | [ 6] |
10.929 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம் | |
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய் முப்ப துபதேசம் மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே. | [ 20] |
10.929 - திருமூலர் ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம் | |
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே. | [ 21] |
Back to Top
காரைக்கால் அம்மையார் திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1
11.002  
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்
பண் - (திருத்தலம் திருவாலங்காடு (பழையனூர்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://sivaya.org/audio/11.02 Thiru Aalangadu Mootha Thirupathigam.m4a
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப் பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய் தங்கி யலறி யுலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடந்திரு ஆலங் காடே. | [1] |
கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை விள்ள எழுதி வெடுவெ டென்ன நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத் துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச் சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங்காடே. | [2] |
வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப மயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே கூகையொ டாண்டலை பாட ஆந்தை கோடதன் மேற்குதித் தோட வீசி ஈகை படர்தொடர் கள்ளி நீழல் ஈமம் இடுசுடு காட்ட கத்தே ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடம் திரு ஆலங் காடே. | [3] |
குண்டில்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக் குறுநரி தின்ன அதனை முன்னே கண்டிலோம் என்று கனன்று பேய்கள் கையடித் தொ டிடு காட ரங்கா மண்டலம் நின்றங் குளாளம் இட்டு, வாதித்து, வீசி எடுத்த பாதம் அண்டம் உறநிமிர்ந் தாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. | [4] |
விழுது நிணத்தை விழுங்கி யிட்டு, வெண்தலை மாலை விரவப் பூட்டிக் கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப் புழதி துடைத்து, முலைகொ டுத்துப் போயின தாயை வரவு காணா தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும் அப்ப னிடம்திரு ஆலங் கா டே | [5] |
பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய் பருந்தொடு, கூகை, பகண்டை , ஆந்தை குட்டி யிட, முட்டை, கூகைப் பேய்கள் குறுநரி சென்றணங் காடு காட்டில் பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே அட்டமே பாயநின் றாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. | [6] |
கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித் தழலுள் எரியும் பிணத்தை வாங்கித் தான் தடி தின்றணங் காடு காட்டில் கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக் காலுயர் வட்டணை யிட்டு நட்டம் அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும் அப்ப னிடம்திரு ஆலங் காடே. | [7] |
நாடும், நகரும் திரிந்து சென்று, நன்னெறி நாடி நயந்தவரை மூடி முதுபிணத் திட்ட மாடே, முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக் காடும், கடலும், மலையும், மண்ணும், விண்ணும் சுழல அனல்கையேந்தி ஆடும் அரவப் புயங்கன் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. | [8] |
துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச் சச்சரி, கொக்கரை, தக்கை யோடு, தகுணிதம் துந்துபி தாளம் வீணை மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் தமருகம், குடமுழா, மொந்தை வாசித் தத்தனை விரவினோ டாடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. | [9] |
புந்தி கலங்கி, மதிம யங்கி இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச் சந்தியில் வைத்துக் கடமை செய்து தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா முந்தி அமரர் முழவி னோசை திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க, அந்தியின் மாநடம் ஆடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. | [10] |
ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி, ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து, பப்பினை யிட்டுப் பகண்டை ஆட, பாடிருந் தந்நரி யாழ மைப்ப, அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம் அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே. | [11] |
12.000 - சேக்கிழார் பாயிரம் | |
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். , | 1 |
12.000 - சேக்கிழார் பாயிரம் | |
தேடிய அயனு மாலுந் தெளிவுறா தைந்தெ ழுத்தும் பாடிய பொருளா யுள்ளான் பாடுவாய் நம்மை யென்ன நாடிய மனத்த ராகி நம்பியா ரூரர் மன்றுள் ஆடிய செய்ய தாளை யஞ்சலி கூப்பி நின்று. | 205 |
12.000 - சேக்கிழார் பாயிரம் | |
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடங் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு வாலிதாம் இன்பமாம் என்று கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக் கைம்மல ருச்சிமேற் குவித்துப் பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார். | 240 |
12.010 - சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர் | |
கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி. | 2 |
12.020 - சேக்கிழார் திருநீலகண்ட நாயனார் புராணம் | |
ஆதியார் நீல கண்டத் தளவுதாங் கொண்ட ஆர்வம் பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி ஏதிலார் போல நோக்கி எம்மைஎன் றதனால் மற்றை மாதரார் தமையும் என்றன் மனத்தினுந் தீண்டேன் என்றார். | 7 |
12.030 - சேக்கிழார் இயற்பகை நாயனார் புராணம் | |
சொல்லுவ தறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி வல்லைவந் தருளி யென்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி தில்லையம் பலத்து ளாடுஞ் சேவடி போற்றி யென்ன. | 32 |
12.060 - சேக்கிழார் விறன்மிண்ட நாயனார் புராணம் | |
ஒக்க நெடுநாள் இவ்வுலகில் உயர்ந்த சைவப் பெருந்தன்மை தொக்க நிலைமை நெறிபோற்றித் தொண்டு பெற்ற விறன்மிண்டர் தக்க வகையால் தம்பெருமான் அருளி னாலே தாள்நிழற்கீழ் மிக்க கணநா யகராகும் தன்மை பெற்று விளங்கினார். | 10 |
12.060 - சேக்கிழார் விறன்மிண்ட நாயனார் புராணம் | |
ஞால முய்ய நாமுய்ய நம்பி சைவ நன்னெறியின் சீல முய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பாடச் செழுமறைகள் ஓல மிடவும் உணர்வரியார் அடியா ருடனாம் உளதென்றால் ஆலம் அமுது செய்தபிரான் அடியார் பெருமை அறிந்தார்ஆர். | 9 |
12.150 - சேக்கிழார் மூர்த்தி நாயனார் புராணம் | |
சீர்மன்னு செல்வக் குடிமல்கு சிறப்பின் ஓங்கும் கார்மன்னு சென்னிக் கதிர்மாமணி மாட வைப்பு நார்மன்னு சிந்தைப் பலநற்றுறை மாந்தர் போற்றும் பார்மன்னு தொன்மைப் புகழ்பூண்டது பாண்டி நாடு. | 1 |
12.210 - சேக்கிழார் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் | |
திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில் ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன். | 1 |
12.210 - சேக்கிழார் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் | |
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் அருமல ரோன்முதல் அமரர் வாழ்த்துதற் கரியஅஞ் செழுத்தையும் அரசு போற்றிடக் கருநெடுங் கடலினுட் கல்மி தந்ததே. | 127 |
12.210 - சேக்கிழார் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் | |
சிலந்திக் கருளுங் கழல்வணங்கிச் செஞ்சொல் மாலை பலபாடி இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சிப் பாடியபின் மலர்ந்த சோதி திருச்சிராப் பள்ளி மலையுங் கற்குடியும் நலங்கொள் செல்வத் திருப்பராய்த் துறையுந் தொழுவான் நண்ணினார். | 302 |
12.210 - சேக்கிழார் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் | |
அண்ண லேஎனை ஆண்டுகொண் டருளிய அமுதே விண்ணி லேமறைந் தருள்புரி வேதநா யகனே கண்ணி னால்திருக் கயிலையில் இருந்தநின் கோலம் நண்ணி நான்தொழ நயந்தருள் புரிஎனப் பணிந்தார். | 368 |
12.230 - சேக்கிழார் பெரு மிழலைக் குறும்ப | |
மண்ணில் திகழும் திருநாவல் ஊரில் வந்த வன்றொண்டர் நண்ணற் கரிய திருக்கயிலை நாளை எய்த நான்பிரிந்து கண்ணிற் கரிய மணிகழிய வாழ்வார் போல வாழேன்என் றெண்ணிச் சிவன்தாள் இன்றேசென் றடைவன் யோகத் தாலென்பார். | 9 |
12.240 - சேக்கிழார் காரைக்கால் அம்மையார் புராணம் | |
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார். | 60 |
12.280 - சேக்கிழார் திருஞான சம்பந்த சுவாமிகள் | |
வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம்ப ரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம். | 1 |
12.280 - சேக்கிழார் திருஞான சம்பந்த சுவாமிகள் | |
சென்றகா லத்தின் பழுதிலாத் திறமும் இனிஎதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால் எற்றைக்குந் திருவருள் உடையேம் நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்து வென்றிகொள் திருநீற் றொளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார். | 659 |
12.590 - சேக்கிழார் பரமனையே பாடுவார் புராணம் | |
தென்றமிழும் வடகலையும்
தேசிகமும் பேசுவன மன்றினிடை நடம்புரியும் வள்ளலையே பொருளாக ஒன்றியமெய் யுணர்வோடும் உள்ளுருகிப் பாடுவார் பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார். | 2 |
12.660 - சேக்கிழார் மங்கையர்க்கரசியார் புராணம் | |
மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம் வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள் தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள் பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப் போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே. | 1 |
12.720 - சேக்கிழார் வெள்ளானைச் சருக்கம் | |
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்று ளார்அடி யாரவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம். | 53 |
12.720 - சேக்கிழார் வெள்ளானைச் சருக்கம் | |
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்று ளார்அடி யாரவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம். | 54 |